01-17-2006, 01:37 PM
<b>ஆலையடிவேம்பு படுகொலை: அம்பாறையில் பதற்றம்</b>
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அகமது லெப்பை அப்துல் வாஹித் (வயது 35) என்பவர் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலை காணப்படுகின்றது.
அப்துல் வாஹித்துடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நாகூர் தம்பி ஆதம்லெப் (வயது 25), தாக்குதலிருந்து தப்பி காவல்துறை உதவியுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்களை அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட குழுவினர் வாகனத்தில் கடத்திச் சென்று தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவரின் சடலம் தமிழ்ப் பிரதேசமான ஆலையடிவேம்பிலுள்ள வயல் வெளியில் கண்டெடுக்கபடப்பட்டுள்ளது.
இதையடுத்து முஸ்லிம் பிரதேசங்கள் ஊடாக சென்ற சில தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
எல்லைப் புறங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன. முஸ்லிம் பிரதேசங்களில் வியாபார நிலையங்கள், அலுவலகங்கள் அனைத்தும் இன்று பிற்பகலுடன் மூடப்பட்டுள்ளன.
சிறிலங்கா காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று முஸ்லிம் பகுதியில் தமிழர்களான சந்திரநாதன் சசிக்குமார் (வயது 23), கோபாலகிருஸ்னன் சுரேஸ் (வயது 16) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாகவே இன்றைய சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இன்று முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இதனால் அப் பிரதேசங்களின் வழமை நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அகமது லெப்பை அப்துல் வாஹித் (வயது 35) என்பவர் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலை காணப்படுகின்றது.
அப்துல் வாஹித்துடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நாகூர் தம்பி ஆதம்லெப் (வயது 25), தாக்குதலிருந்து தப்பி காவல்துறை உதவியுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்களை அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட குழுவினர் வாகனத்தில் கடத்திச் சென்று தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவரின் சடலம் தமிழ்ப் பிரதேசமான ஆலையடிவேம்பிலுள்ள வயல் வெளியில் கண்டெடுக்கபடப்பட்டுள்ளது.
இதையடுத்து முஸ்லிம் பிரதேசங்கள் ஊடாக சென்ற சில தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
எல்லைப் புறங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளன. முஸ்லிம் பிரதேசங்களில் வியாபார நிலையங்கள், அலுவலகங்கள் அனைத்தும் இன்று பிற்பகலுடன் மூடப்பட்டுள்ளன.
சிறிலங்கா காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று முஸ்லிம் பகுதியில் தமிழர்களான சந்திரநாதன் சசிக்குமார் (வயது 23), கோபாலகிருஸ்னன் சுரேஸ் (வயது 16) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாகவே இன்றைய சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இன்று முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. இதனால் அப் பிரதேசங்களின் வழமை நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
"

