01-17-2006, 12:59 PM
திருகோணமலையில் கடற்படையினரின் வாகனம் மீது குண்டுத் தாக்குதல்- திருப்பித் தாக்கியதில் இரண்டு பொதுமக்கள் பலி!
திருகோணமலையில் நிலாவெளியில் கடற்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து இராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நால்வர் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுத் தாக்குதலின் போது வாகனத்தில் பயனம் செய்த 13 கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் திருகோணமலை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை துறைமுக படைத்தளத்திற்கு படையினரை ஏற்றிச் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து திருகோணமலை டிப்போவுக்கு அருகில் சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததை அடுத்தே கண்மூடித்தனமான இந்தத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு றிமோட் கொன்றோல் மூலம் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. எனவும் ஆனால் இலக்கு தவறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
திருகோணமலையில் நிலாவெளியில் கடற்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து இராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நால்வர் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுத் தாக்குதலின் போது வாகனத்தில் பயனம் செய்த 13 கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் திருகோணமலை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை துறைமுக படைத்தளத்திற்கு படையினரை ஏற்றிச் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து திருகோணமலை டிப்போவுக்கு அருகில் சைக்கிள் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததை அடுத்தே கண்மூடித்தனமான இந்தத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு றிமோட் கொன்றோல் மூலம் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. எனவும் ஆனால் இலக்கு தவறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
"

