01-17-2006, 12:49 PM
<b>அக்கரைப்பற்றில் முஸ்லிம்கள் இருவர் தாக்கப்பட்டதில் ஒருவர் மரணம்! நகரில் பெரும் பதட்டம்! </b>
அக்கரைப்பற்றில் இன்று வழமை மறுப்புப்போராட்டம் கடைப்பிடிக்கப்படும் வேளையில் ஆலையடி வேம்பு பிரதேசத்திற்கு உந்துருளியில் வந்த இரண்டு முஸ்லிம்கள் இனந் தெரியாத கும்பலொன்றின் தாக்குதலுக்கு உள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றயவர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் பெரிய பள்ளிவாசல்நகர் அட்டாளைச்சேனையினைச் சேர்ந்த அஹமட் லெப்பை அப்துல் வாஹிட் (அகவை 35), என்பவரும், அவருடன் வந்த நாகூர்தம்பி ஆதம்பா லெப்பை (அகவை 25) என்பவருமே பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த இனந்தெரியாத குழுவினரின் தாக்குதல் காரணமாக் அப்துல் வாஹிட் (அகவை 35) என்பவர் இறந்துள்ளதாகவும், ஆதம்பாவா லெப்பை அவசர சிகிச்சைக்காக அம்பாறை அதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இச்சம்பவத்தினால் இப்பிரதேசங்களில் பெரும் பதட்ட நிலை தோன்றியுள்ளதுடன் எல்லைப்புற தமிழ்க் கிராமங்களில் உள்ள மக்கள் தற்போது பாரிய அளவில் இடம்பெயர்ந்து தமிழ் கிராமங்களில் உள்ள தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு வந்தவண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
அக்கரைப்பற்றில் இன்று வழமை மறுப்புப்போராட்டம் கடைப்பிடிக்கப்படும் வேளையில் ஆலையடி வேம்பு பிரதேசத்திற்கு உந்துருளியில் வந்த இரண்டு முஸ்லிம்கள் இனந் தெரியாத கும்பலொன்றின் தாக்குதலுக்கு உள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றயவர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் பெரிய பள்ளிவாசல்நகர் அட்டாளைச்சேனையினைச் சேர்ந்த அஹமட் லெப்பை அப்துல் வாஹிட் (அகவை 35), என்பவரும், அவருடன் வந்த நாகூர்தம்பி ஆதம்பா லெப்பை (அகவை 25) என்பவருமே பலத்த தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த இனந்தெரியாத குழுவினரின் தாக்குதல் காரணமாக் அப்துல் வாஹிட் (அகவை 35) என்பவர் இறந்துள்ளதாகவும், ஆதம்பாவா லெப்பை அவசர சிகிச்சைக்காக அம்பாறை அதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இச்சம்பவத்தினால் இப்பிரதேசங்களில் பெரும் பதட்ட நிலை தோன்றியுள்ளதுடன் எல்லைப்புற தமிழ்க் கிராமங்களில் உள்ள மக்கள் தற்போது பாரிய அளவில் இடம்பெயர்ந்து தமிழ் கிராமங்களில் உள்ள தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு வந்தவண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

