01-17-2006, 11:31 AM
<span style='color:green'><b>இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!! </b>
தமிழர் தாயகத்தில் தொடரும் சிறிலங்கா இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
2006ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து கண்டனக் குரல் எழுப்பினர்.
சபைக்குள் நுழைந்த நாடாளுமன்ற சபாநாயகர் லொகுபண்டாரவை முற்றுகையிட்டனர். இதனால் அரசாங்க உறுப்பினர்களின் இருக்கைய+டாக சபாநாயர் லொகு பண்டார தமது இருக்கைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், புங்குடுதீவு தர்சினி, திருகோணமலை 5 தமிழ் மாணவர்கள் படுகொலைகள் மற்றும் அப்பாவித் தமிழ் மக்களை சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவினரும் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து தமிழ் உறுப்பினர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழ் மக்களின் மீதான படுகொலைகளைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும்
கொழும்பு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் தமிழ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
அரசாங்க ஆதரவு உறுப்பினர்கள் சிலர் தமிழ் உறுப்பினர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். ஜே.வி.பி. உறுப்பினர்கள் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதையடுத்து நாடாளுமன்றம் மீண்டும் 10.10 மணிக்கு கூடிய போதும் தமிழ் உறுப்பினர்கள் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் லொகு பண்டார அறிவித்தார்.</span>
<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
தமிழர் தாயகத்தில் தொடரும் சிறிலங்கா இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
2006ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து கண்டனக் குரல் எழுப்பினர்.
சபைக்குள் நுழைந்த நாடாளுமன்ற சபாநாயகர் லொகுபண்டாரவை முற்றுகையிட்டனர். இதனால் அரசாங்க உறுப்பினர்களின் இருக்கைய+டாக சபாநாயர் லொகு பண்டார தமது இருக்கைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், புங்குடுதீவு தர்சினி, திருகோணமலை 5 தமிழ் மாணவர்கள் படுகொலைகள் மற்றும் அப்பாவித் தமிழ் மக்களை சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவினரும் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து தமிழ் உறுப்பினர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழ் மக்களின் மீதான படுகொலைகளைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும்
கொழும்பு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் தமிழ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
அரசாங்க ஆதரவு உறுப்பினர்கள் சிலர் தமிழ் உறுப்பினர்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். ஜே.வி.பி. உறுப்பினர்கள் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதையடுத்து நாடாளுமன்றம் மீண்டும் 10.10 மணிக்கு கூடிய போதும் தமிழ் உறுப்பினர்கள் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் லொகு பண்டார அறிவித்தார்.</span>
<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>
"
"
"

