01-17-2006, 06:02 AM
Quote:மிகச்சிறப்பான ஆய்வு முடிவு..! இப்படித்தான் நீங்கள் பரதநாட்டியம் சார்பிலும் அளந்து கட்டுறீர்கள் என்பது நமக்கு ஐயம்திரிபற விளங்கிட்டுது..! நன்றி..! ஒன்று மட்டும் உண்மை நீங்கள் உங்கள் ஆய்வறிக்கைகள் சகிதம் மேடையேறின் வாசித்து முடிய வரும் கேள்விக்கணைக்குரியவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..! அந்தளவுக்கு உங்கள் சிந்தனைகளே சரி என்று திணிக்க முயல்கிறீர்கள்..!
<span style='color:green'>இந்த மாதிரி வசனம் பேசிப் பூச்சாண்டி காட்ட வேண்டிய தேவையில்லை குருவி அவர்களே! , யாராவது உம்முடைய பதிவுகளை ஆராய்ந்தால் தெரியும், நான் தமிழனில்லையென்று தம்பட்டம் அடித்துக் கொண்டு நீர் இந்தக் களத்திலிருப்பதன் நோக்கமே தமிழரை மட்டம் தட்டித் திருப்தி காண்பதற்காக, உம்முடைய பதிவுகள் எல்லாவற்றிலும், தமிழர்கள் சொல்வதற்கு நக்கலும், நளினமும் தான். பெரிய அக்கறையாகப் புத்திமதி சொல்பவர் போல தமிழர்களைக் கீழே தள்ளுவது தான் உம்முடைய நோக்கம்
Quote:[size=12]தமிழ் தளத்தில் நாலு வரி எழுதிவிட்டால் தமிழன் என்றோ தமிழ் உணர்வாளன் என்றோ நாம் எப்போதும் காட்ட முனைந்ததில்லை. எமக்குள் தோன்றும் எண்ணங்களை ஒரு விடயம் அல்லது கருத்துத் தொடர்பில் எழும் ஒப்பீட்டு ரீதியாக வரும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு தமிழன் தமிழ் உணர்வாளன் என்ற தகுதி நிலைகள் அவசியமில்லை. ஒரு மொழி அறிந்த மனிதன் என்ற நிலை போடும்</span>..!
<span style='color:green'>உமக்கு எம்முடைய மொழி தெரியும் என்ற காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு நீர் தமிழர்களைப் பிரித்து, தமிழர்களின் பழமொழிகளை ஏளனம் செய்து, அவ்ர்களின் முன்னோர்களைப் பழித்து, அவர்களின் கலைகள் அவர்களுடைதில்லையென்றும் விதண்டாவாதம் செய்வதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று தமிழருக்கு விதியுமில்லை, உமக்கு உரிமையுமில்லை. ஒரு தமிழன், தமிழனின் குறைகளைக் கூறலாம், ஆனால் நீர் எப்படிக் கூறலாம்
Quote:[size=12]முன்னர் நீங்களே ஒத்துக்கொண்டீர்கள். பரதத்துள் பார்ப்பர்ணர்கள் சமஸ்கிரதம் இதிகாசம் புகுத்தி அதனைப் பிரபல்யப்படுத்தினர் என்று. இப்போ நீங்களே எப்படிப் பார்ப்பர்ணர்கள் வந்தார்கள் பாரதமுனி வந்தார் என்று வினவுகிறீர்கள்..! எங்கு போய் நோக்கினும் சொல்லப்படும் ஒரு விடயம் ஐந்தாம் வேதமாகிய நாட்டிய வேதத்தைத் தழுவியது பரதநாட்டியம் என்று..! மிச்சம் நான்கு வேதங்களும் தமிழர்களுக்கு சொந்தமானதும் 1930க்குப் பின்னர் உருவாகியதாகவும் என்று நீங்கள் நிரூபித்தால்...உங்கள் சதிர்தான் பார்ப்பர்னர்களால் பரதநாட்டியம் என்று திரிபு பெற்றது என்பதை ஒத்துக்கொள்ள ஒரு சின்ன வாய்ப்பாவது வரும்..! ஆக மீனாட்சி சுந்தரம்பிள்ளை காலம் வரை பரதநாட்டியத்திற்கும் பார்பர்ணியருக்கும் தொடர்பில்லை அப்படித்தானே. போய் அவர்களின் வரலாற்று நூல்களைச் சுவடிகளைப் புரட்டுங்கள் உங்கள் புரட்டுக் கதைகளின் உண்மைத் தன்மை புரியும்</span>
<span style='color:green'>குருவியே, இதைத் தான் விதண்டாவாதமென்பது. நான் சொன்னதெல்லாம், கலாசேத்திரத்தின் முதலாம் குரு மீனாட்சி சுந்தரம்பிள்ளளை, ருக்மணிதேவி அருண்டேலின் குருவும் அவர் தான், சதிரின் வளர்ச்சிக்கும், மறுமலர்ர்ச்சிக்கும் காரணம் தஞ்சாவூர் சகோதரர்கள், அவர்கள் தான் கிருஸ்ணையருக்கு சதிரை அறிமுகப் படுத்தினார்கள். கிருஸ்ணையர் பெயரை மட்டும் தான் மாற்றினார். அப்படியிருக்க நீர் எப்படி பார்ப்பனரின் கலையென்பீர் என்றதால் தான் பார்ப்பானும், பரதமுனிவரும் எங்கே வந்தார் என்று கேட்டேன்,
நீர் உண்மையான தமிழன் இல்லாததால் தமிழை விளங்கிக் கொள்வது கடினமாக இருக்க வேண்டும் அல்லது இயற்கையாகவே உமக்கு மற்றவர்களை மடையராக நினைத்துக் கொண்டு அவர்கள் சொல்வதைத் திரிக்கிற தன்மையியுள்ளவரென்று நினைக்கிறேன்.
இந்த ஐந்தாம் வேதமெல்லாம் வெறும் புருடா, நானும் இந்து சமயத்தை அறிந்தவன் தான், எங்களிம் குடும்பமும் யாழ்ப்பாணத்துச் சைவம் தான். ஆனால் ஐந்தாம் வேதம் என்று யாரும் அளந்ததில்லை. <b>நாயன்மார்கள் நால்வேதம், நான்மறையென்று தான் பாடினார்கள் ஐந்தாம் வேதமென்று ஒன்றைப் பற்றிப் பேசியதில்லை</b>. இது பரதநாட்டியத்தைத் தங்களுடையதென்பதற்காக பார்ப்பான்கள் விடும் கதை. <b>இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் தான் இந்து சமயத்தின் வேதங்கள்.</b> ஐந்தாம் வேதம், அனுவின் Home Page இல் கண்டதாக இருக்கும். ஆறுமுகநாவலர் எங்காவது ஐந்தாம் வேதம் பற்றி சொல்லியிருக்கிறாரா.வெறும் புருடாக்களை உண்மையாக்க முயற்சிக்கிறீர்,
Quote:[size=12]அப்படியானால் பரதநாட்டியம் 1930க்குப் பிறகுதான் பார்ப்பர்ணியரிடம் போனது என்று நீங்கள் அடித்துச் சொல்கிறீர்கள். இல்லை என்று நிரூபிக்க பல நூல்கள் உண்டு..! அப்படிச் சொல்லும் நூல்களை முறியடிக்க நீங்கள் என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள். அவர்களைப் போல பதிலுக்கு கட்டுக்கதைதானே</span>...!
<span style='color:green'>திரு. வி.கல்யாணசுந்தரமும், மறைமலையடிகளும் ஆராய்ச்சி மூலம் நிரூபித்திருக்கிறார்கள், பரதநாட்டியதைப் பிரபலப்படுத்தியது பாலசரஸ்வதி, கலாசேத்திரம் ருக்மணிதேவி அவர்கள், ஆனால் சதிரை அதாவது இன்னாள் பரதநாட்டியத்தை அறிமுகப் படுத்தியதும், அவர்களின் குருவும் சுத்த தஞ்சாவூர்த் தமிழனாகிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை அப்படியிருக்க ஏதாவது 1930 க்கு முந்திய நூல்களில் சதிருக்குப் பார்ப்பனத் தொடர்பைக் காட்டும் பார்ப்போம்
Quote:[size=10]Mohini Attam, a dance form not exposed greatly outside India, has aesthetically blended elements from both kathakali and bharathanatyam. Literally, the word mohini aattam implies dance of the enchantress, and it aptly describes the gentle, gliding and graceful movements that characterize this style.\"
நீங்கள் தந்த ஆங்கிலப் பந்தியே சொல்கிறது மோகினி ஆட்டம் இரண்டு நாட்டிய வடிவங்கள் சார்ந்ததென்று. கதகளி மற்றும் பரதநாட்டியம். எனவே இரண்டும் வேறுபட்ட வடிவங்கள் என்பது அப்பந்தியினூடு நிரூபணமாகிறது. மோகினியாட்டம் தமிழர்களதா இல்லையா என்பதல்ல இங்கு பேச்சு..! வீணே ஏன் அந்தச் சர்ச்சையையும் கிளப்புகிறீர்கள்..! </span>
<span style='color:green'>இந்த ஆங்கிலப் பந்தியைப் பார்த்தீரே, அதற்குக் கீழேயுள்ளதைப் பார்த்தீரா, கதகளியையும், சதிரையும் கலந்து மோகினியாட்டத்தை உருவாக்கியதே தஞ்சாவூர்ச் சகோதரர்களில் ஒருவராகிய சிவானந்தம் என்றுள்ளது. நீர் ஒன்றையும் முழுதாக வாசிப்பதில்லைப் போல் தெரிகிறது. இந்த LINK எல்லாம் Pro-Tamil இல்லை பார்ப்பன Websites.
Thanjour [Tanjore, Thanjavur] Quartet: All are Pillai's
Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today
hinniyah- born in 1802, the oldest
He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.
Ponniyah- born in 1804, the second oldest
Sivanandam- born in 1808, the third oldest
These two stayed where they were in the Thanjour court.
Vadivelu- born in 1810, the youngest
<b>He changed the violin so that it could be played with Karnatic music, a popular type of music in South India. He also made Mohiniyattam, another Indian dance</b>.
Quote:[size=14]<b>தமிழரின் மண் என்று ஒன்றில்லை தெளிவாக நிரந்தரமாக..! திராவிட மண்தான் தென்னிந்தியாவில் இருந்தது. சேர சோழ பாண்டியர்களே ஒற்றுமையாக இருந்ததில்லை. தங்களுக்குள் அடிப்பட்டு பலவீனப்பட்ட பெருமைகளும் உண்டு. அந்த வரலாறு உங்களுக்கு தெரியும் என்று நம்புவோமாக..! சேர சோழ பாண்டியர்கள் தமிழ் மன்னர்களாகவன்றி அவர்கள் திராவிட மன்னர்களாகவே இனங்காணப்படுகின்றனர்</b>.</span>
<span style='color:green'>தமிழரின் மண் என்று ஒன்றில்லை என்பது தான் தமிழெதிரிகளின் வாதம், உம்முடைய வேசம் கலைகிறது.
தமிழ், தமிழர் என்ற சொல்லைத் தவிர திராவிடன் என்ற சொல்லைக் கூட எந்த தமிழ் மன்னனும் கேட்ட்தில்லை.
ஒற்றுமையில்லையென்பதால் தமிழ் மண்ணில்லை என்றாகி விடுமா,?
அரபு நாடுகளிடமும் தான் ஒற்றுமையில்லை, அதனால் மத்திய கிழக்கு அரபுக்களின் மண்ணில்லையென்றாகி விடுமா.?
ஜேர்மனியில் ஒவ்வொரு மாநிலத்தின் மன்னர்களும் தங்களுக்குள் அடி பட்டுக் கொண்டார்கள் அதனால் ஜேர்மனி அவர்களின் மண்ணில்லையென்று எந்தக் குருவி சொல்ல அவ்ர்கள் விடுவார்களா,?
ஜேர்மனி எதற்கு, இலங்கையில் கோட்டை இராச்சியத்தின் சிங்கள அரசன், ராசரட்டையின் சிங்கள அரசனுடன் போரிட்டான், சிங்கள இளவரசன் முகலன் தன்னுடைய சகோதரனுடன் சண்டை பிடித்துக் கொண்டு, மதுரைக்குப் பாண்டியனிடம் உதவி கேட்டு ஓடினான், பாண்டியனின் உதவியுடன் திரும்பி வந்தவனைக் கண்ட காசியப்பன் சிகிரியாக் குகைக்குள் போய் ஓளித்தானே, இதற்காக அவ்ர்கள் சிங்களவரில்லை, அது சிங்கள நாடில்லையென்று யாரும் சிங்களவரிடம் குருவி சொன்னால் செட்டையை ஒட்டி விட மாட்டார்களா. தமிழன் தான் இளிச்சவாயன் கண்டதும் வந்து கடித்து விட்டுப் போகப் பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பனில்லையா?
<b>சேர, சோழ, பாண்டியர்கள் தங்களைத் தமிழ்ர்களாக, அதுவும் தமிழுக்காக உயிரையும் கொடுப்பவர்களாக இருந்தார்கள். அப்பனே, தமிழ் பேசத் தெரிந்த தமிழரல்லாதவரே, நாம் தமிழர் எங்களின் வரலாற்றை உம்மிடம் கேட்டுத் தெரியும் நிலையிலில்லை. தாய்த் தமிழைப் பழித்த் ஒரே காரணத்துக்காக வட நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று, தமிழைப் பழித்தவனின் தலையில் கல் சுமக்க வைத்து, தமிழ்த்தாய்க்கு சிலையெடுத்த சரித்திரம் தமிழரின் மூவேந்தர்களுக்குண்டு. அந்தச் சரித்திரம் தெரியாமல் சேர, சோழ, பாண்டியர்கள் தமிழ் மன்னவர்களாகத் தங்களைக் கருதவில்லையென்று புலம்பும் பரதேசியையா நீர்.
தமிழ்ப்புலவன் உறங்குவதற்காகத் தன்னுடைய முரசு கட்டிலைக் கொடுத்து விட்டுத் தான் சாமரம் வீசி நின்றான் பெருஞ் சேரல் இரும்பொறை, அதிக நாள் வாழ வைக்கக் கூடிய நெல்லிக்கனியைத் தான் வாழ்வதை விடத் தமிழ் வாழட்டும் என்று அவ்வைக்குக் கொடுத்தான் அதியமான்,
இப்படி எங்கள் தமிழ் மன்னர்கள் தங்களின் உயிரை விடத் தமிழை நேசித்த கதை எங்களிடமுண்டு அப்பனே, ஆனால் தமிழ் பேசும் தமிழரல்லாத உமக்கு இந்த மறத் தமிழரின் வரலாறு தெரிந்திருக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை, பரதேசிக் குருவி
Quote:[size=12]அரைக்க வேண்டிய அவசியமில்லை..! அன்ரி தமிழ் என்று ஒதுக்கித்தள்ளியதுகளையும் மறைத்ததுகளையும் இங்கு வைக்க அனுமதியுங்கள். இது சுத்த புரோ தமிழ் வாதங்கள்..இவற்றை மட்டும் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. காரணம் மக்களை அடையும் பரதநாட்டிய வரலாறு என்பது உங்களது புரோ தமிழ் கற்பனைகளில் இருந்து மிகவும் மாறுபட்டிருக்கிறது.</span>
<span style='color:green'>மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுடன் கலந்துரையாட வந்தேன், உம்மை எதிர்பார்க்கவில்லை. இன்னும் [b]எள்ளுக் காயுது எண்ணைக்கென்றால் எலிப் புழுக்கை ஏன் காயுதென்று விளங்கவில்லை</b>
Quote:[size=12]நாங்கள் முன்னும் பின்னும் கதைக்கவில்லை..ஆரம்பம் தொட்டு தெளிவாகவே சொல்லி வருகின்றோம். நீங்களும் அதை பலதடவை இப்பவும் கூட ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சுந்தரம்பிள்ளையின் முதுகில் குத்தி பார்பர்ணியர்கள் சதிரைக் களவெடுத்து பரதமாக மாற்றி அமைத்தார்கள் என்று. அதைத்தான் சொல்கிறோம். தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல. உங்கள் சதிருக்கும் இதற்கும் வேற்றுமைகள் உண்டு. அதை ஏற்றுக் கொண்டே விட்டீர்கள் பிறகென்ன வாதம் வேண்டி இருக்கு..??! மேலே சொல்ல வேண்டியது சொல்லி இருக்கு. சும்மா கிறுக்கிப் பிரயோசனமில்லை. சதிருக்கான உண்மை வடிவத்தை ஆராய்ந்து தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி பார்பர்ணியம் சார்ந்த பரதநாட்டியத்தை தூக்கி எறியுங்கள்</span>
<span style='color:green'><b>குருவிக்கு எதுவும் சொல்ல முடியாவிட்டால், நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்பார், எங்கே நான் ஏற்றுக் கொண்டேன் நிரூபியுங்கள் பார்க்கலாம்.</b> எத்தனை முறை சொல்வது, சதிர் பரதநாட்டியமாகிச் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு விட்டதே தவிர, <b>இன்றும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சொல்லிக் கொடுத்த சதிராட்டம் தான்</b>. அதை நாங்கள் மீண்டும் தமிழாக்க வேண்டும், அப்பணி,<b> புலத்திலும், ஈழத்திலும் தொடங்கப் பட்டு விட்டது, நாங்கள் ஈழத் தமிழர் செய்து காட்டுவோம்</b>
.
Quote:[size=12]ஐயா டாக்டர் பட்டம் எல்லாம் சும்மா காசுக்கும் வாங்கிறாங்கோ...உந்தப் பட்டக்கதைகளை குப்பைல போடுங்கோ...! பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் மீளாய்வு செய்ய வேண்டிய காலம் இது. பல வகையில் அகழ்வாராய்ச்சி மற்றும் மரபணுவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகளை செய்து தமிழர்கள் உருப்படியா எதையாவது சாதிக்கட்டும் வாழ்த்துகின்றோம்..! </span>
<span style='color:green'>இது தான் குருவியார் இவ்வளவு நேரமும் விட்ட பகிடிகளில் மிகவும் சிறப்புக்குரியது. கர்நாடகத்திலிருந்து வந்து St.Louis, Missouri , U.S.A இல் ஒரு Apartment இலிருந்து சமைத்து விட்டு நேரம் கிடைக்கும் போது அனு தன்னுடைய Home Page இல் போட்டதை குருவி ஏற்றுக் கொள்வாராம்., டாக்டர் நிர்மலா ராமச்சந்திரன் டாக்டர் பட்டத்தைக் காசுக்கு வாங்கியிருப்பாவாம் அதனால் ஏற்றுக் கொள்ள மாட்டாராம். என்ன நடந்தது குருவிக்கு என்ப்து தான் மில்லியன் டொலர் கேள்வி.
<b>தமிழர்கள் உருப்படியாகச் செய்து கொள்வார்கள், நீங்கள் உதவி செய்யாது விட்டாலும் உபத்திரவம் தராமல் இருந்தால் போதும்</b>
.....................................................................
[size=13]In 1933, at the Music Academy's Annual Conference, Rukmini Devi saw a performance of the dance form known as <b>Sadhir</b> for the first time. The dancers were the Pandanallur – sisters Rajeswari and Jeevaratnam. Pandanallur Meenakshi Sundaram Pillai conducted the performance, assisted by his son in – law Chokkalingam pillai. Rukmini Devi was enchanted by the dance and wanted to learn it. But as she herself explained in her last published interview, "it (the dance) was almost extinct, I should say, and there was discouragement from almost all quarters. It was difficult to find ever a good teacher.The dancers had no status or recognition.They were poor and nobody in particular encouraged them
At that time she was already 29 years of age. But she was a determined woman. She wanted to learn from Pandanallur Meenakshi Sundaram Pillai. <b>She sent for him saying she wanted him to be here Guru. He, however, did not want to teach her because he felt she would not learn seriously and that it would do the dance no good.</b> She tried to explain her sincere intention to study all aspects of the dance thoroughly. Then too he was unwilling to come, but he sent another son in – law of his, Ponniah Pillai, to see what the adamant lady was about. Ponniah Pillai was himself a ‘Sangeetha Kalanidhi’ having been the Chairman of the Music Academy’s Conference. He was a disciple of Anantarama Baghavatar, an accomplished musician of the time. Ponniah Pillai had given up dancing and teaching as he felt it would affect his dignity. So he was hardly inclined to go and see Rukmini Devi who was still learning Bharathanatyam from Gowri Ammal. However, he did go to Madras. He liked what he saw and recognised Rukmini Devi as a brilliant student. <b>He advised Meenakshi Sundaram Pillai to go ahead and teach Rukmini Devi</b>. . </span>

