01-16-2006, 09:00 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>விடுலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இருவர் அக்கரைப்பற்றில் சுட்டுக்கொலை!! </b><span style='font-size:16pt;line-height:100%'>[திங்கட்கிழமை, 16 சனவரி 2006, 16:16 ஈழம்] [அம்பாறை நிருபர்]
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று முஸ்லிம் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நண்பகல் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான அப்புஹாமி எனப்படும் சந்திரநாதன் சசிக்குமார் (வயது 23) மற்றும் கோபாலகிருஸ்ணன் சுரேஸ் (வயது 16) ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கட்டடத் தொழிலாளிகளான இருவரும் ஓட்டோ ஒன்று வாங்குவது தொடர்பான கொடுக்கல் வாங்கல் ஒன்றின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபர்கள், வழிமறித்து ரி - 56 ரக துப்பாக்கி மூலம் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் சடலத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் எவரும் இல்லாத காரணத்தினால் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்பு அடையாளம் காட்டும் உறவினர்களிடம் கையளிக்குமாறு சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்ட அவர், மரண விசாரனையை நாளை வரை ஒத்தி வைத்தார்.
இச்சம்பவம் இடம்பெற்ற பகுதி முஸ்லிம் பிரதேசம் என்பதால் சம்பவத்தின் எதிரொலியாக உருவான பதட்ட நிலையையடுத்து அக்கரைப்பற்றில் வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
மேலதிக சிறிலங்கா காவல்துறையினரும், விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னரும் இதேபோன்று விடுதலைப் புலிப் போராளிகள் இருவர் அக்கரைப்பற்று முஸ்லிம் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டமை தெரிந்ததே.</span></span>
<b><i>தகவல் மூலம் - புதினம்</i></b>
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று முஸ்லிம் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நண்பகல் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இருவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான அப்புஹாமி எனப்படும் சந்திரநாதன் சசிக்குமார் (வயது 23) மற்றும் கோபாலகிருஸ்ணன் சுரேஸ் (வயது 16) ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கட்டடத் தொழிலாளிகளான இருவரும் ஓட்டோ ஒன்று வாங்குவது தொடர்பான கொடுக்கல் வாங்கல் ஒன்றின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபர்கள், வழிமறித்து ரி - 56 ரக துப்பாக்கி மூலம் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் சடலத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் எவரும் இல்லாத காரணத்தினால் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின்பு அடையாளம் காட்டும் உறவினர்களிடம் கையளிக்குமாறு சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்ட அவர், மரண விசாரனையை நாளை வரை ஒத்தி வைத்தார்.
இச்சம்பவம் இடம்பெற்ற பகுதி முஸ்லிம் பிரதேசம் என்பதால் சம்பவத்தின் எதிரொலியாக உருவான பதட்ட நிலையையடுத்து அக்கரைப்பற்றில் வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
மேலதிக சிறிலங்கா காவல்துறையினரும், விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னரும் இதேபோன்று விடுதலைப் புலிப் போராளிகள் இருவர் அக்கரைப்பற்று முஸ்லிம் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டமை தெரிந்ததே.</span></span>
<b><i>தகவல் மூலம் - புதினம்</i></b>
"
"
"

