Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீத
#3
<b>தேவை அரசினதே</b>
<i>ஈழநாதம் நாளேட்டில் 16.01.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்</i>

மட்டக்களப்பு மாவட்டக் கண்காணிப்புக் குழு அலுவலக வளாகத்திற்குள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலானது மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்காணிப்புக் குழுவினரின் நடவடிக்கைகளை முடக்குவதற்கெனத் திட்டமிட்ட hPதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பதில் சந்தேகத்திற்கோ, கேள்விக்கோ இடமில்லை. இத்தாக்குதலுக்கு யார் பொறுப்பு? என்ற கேள்வியையும் ஆராய்வது தேவையற்றது. ஏனெனில், இத்தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய தேவையும,; அதற்கான சாத்தியப்பாட்டையும், சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பும்- அதனுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழுக்களுமே கொண்டுள்ளன.

இத்தாக்குதலானது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில், அதிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்பைத் தவிர தாக்குதல் நடத்துவதென்பது மிக மிகக் கடினமான தொன்றாகும்.

அத்தோடு, சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்போ அன்றி அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்களோ தவிர வேறு யாராவது இத்தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பின் இத்திட்டம் வெளிப்படும் இடத்து அதனால் விளையும் பாதகங்களையும் அவர்கள் புரிந்து கொண்டவர்களாகவே இருப்பர். அத்தகையதொரு பழியை ஏற்க அவர்கள் தயாராகமாட்டார்கள். ஆகையினால், இக்குண்டு வெடிப்பை சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்போ அன்றி அதனுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினரோதான் நிச்சயமாக நடத்தியிருத்தல் வேண்டும்.

கண்காணிப்புக்குழு மீதான இத்தாக்குதலானது அவர்களின் செயற்பாட்டை முடக்குவதற்கான நடவடிக்கை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை
.....
..........
http://www.tamilnaatham.com/editorial/eela...2006_JAN/16.htm
Reply


Messages In This Thread
[No subject] - by puthiravan - 01-14-2006, 04:21 AM
[No subject] - by kurukaalapoovan - 01-16-2006, 12:07 PM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 02:34 PM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 02:42 PM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 07:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)