01-16-2006, 06:42 AM
<span style='font-size:25pt;line-height:100%'><b>ஹெலி வசதி வழங்க அரசு இணக்கம்: பாலாவின் கிளிநொச்சி வருகை உறுதி? </b></span>
[ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 16:00 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
தமிழ் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் கிளிநொச்சிக்கான பயணத்துக்கு சிறிலங்கா அரசு ஹெலி போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க இணங்கியிருப்பதை அடுத்து பாலாவின் வன்னிக்கான விஜயம் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் சாத்தியமாகியிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 23 ஆம் திகதி மிக முக்கிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அன்றைய தினம் உடனடியாகவே வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கிறார். மறுநாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துவிட்டு கிளிநொச்சிக்கு செல்கிறார்.
இதற்கிடையில் லண்டனிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அன்டன் பாலசிங்கத்தை அங்கிருந்து கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்ல சிறிலங்கா அரசு ஹெலி போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால், கிளிநொச்சி வரும் சொல்ஹெய்மை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது அரசு அதற்கு இணங்கியிருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து அன்டன் பாலசிங்கத்தின் விஜயமும் உறுதியாகிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலசிங்கத்தின் கிளிநொச்சிக்கான இரு வழிப்பயணத்தின் போதும் அவருடன் நோர்வேயின் கொழும்புக்கான தூதரக அதிகாரி, கண்காணிப்புக்குழு பிரதிநிதி மற்றும் சமாதான ஒருங்கிணைப்ப்புக்குழு அதிகாரி ஒருவர் ஆகியோரை ஹெலியில் அனுப்புவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் மூலம்- புதினம் .கொம்
[ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 16:00 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
தமிழ் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் கிளிநொச்சிக்கான பயணத்துக்கு சிறிலங்கா அரசு ஹெலி போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க இணங்கியிருப்பதை அடுத்து பாலாவின் வன்னிக்கான விஜயம் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் சாத்தியமாகியிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 23 ஆம் திகதி மிக முக்கிய விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அன்றைய தினம் உடனடியாகவே வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கிறார். மறுநாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துவிட்டு கிளிநொச்சிக்கு செல்கிறார்.
இதற்கிடையில் லண்டனிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அன்டன் பாலசிங்கத்தை அங்கிருந்து கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்ல சிறிலங்கா அரசு ஹெலி போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால், கிளிநொச்சி வரும் சொல்ஹெய்மை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போது அரசு அதற்கு இணங்கியிருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை அடுத்து அன்டன் பாலசிங்கத்தின் விஜயமும் உறுதியாகிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலசிங்கத்தின் கிளிநொச்சிக்கான இரு வழிப்பயணத்தின் போதும் அவருடன் நோர்வேயின் கொழும்புக்கான தூதரக அதிகாரி, கண்காணிப்புக்குழு பிரதிநிதி மற்றும் சமாதான ஒருங்கிணைப்ப்புக்குழு அதிகாரி ஒருவர் ஆகியோரை ஹெலியில் அனுப்புவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் மூலம்- புதினம் .கொம்
"
"
"

