01-16-2006, 04:21 AM
Quote:குருவி அண்ணாவோ அக்காவோ பலமுறை இங்கே தான் ஒரு தமிழர் அல்ல என்பதைக் கூறி உள்ளார் என்பதை தங்கள் கவனதிற்குக் கொண்டு வரவிரும்புகிறேன். மற்றது எவ்வாறு anti tamil என்பது pro பார்ப்பனீயம் என்பதாகின்றது என்பதை மேற் கூறிய கருத்தாடல் சொல்லி நிக்கிறது ,இதைத் தான் பெரியார் மிகத் தெழிவாகச் சொல்லிச் சென்றார்.பார்ப்பனீயம் தேசியங்களைக் கடந்தது.
<span style='color:green'>நன்றி நாரதர்! இவரில் அடித்த தமிழ்வெறுப்பு வாடையிலேயே, இவர் தமிழராக இருக்க மாட்டாரென்று நினைத்தேன். பார்ப்பனீயமும் தமிழெதிர்ப்பும் பின்னிப் பிணைந்தது. அதனால் தான் தமிழர்களை எதிர்ப்பதில் தமிழ்நாட்டுப் பார்ப்பான்கள், கன்னடத்துப் பார்ப்பானுடன் சேர்ந்து கொள்வார்கள். எப்படி அவர்கள் கூட்டுச் சேர்கிறாகளென்பதை நாங்கள் இந்த இணையத்தளங்களிலேயே பார்க்கலாம்
Quote:[size=12]ஆரூரன் உங்களுக்காக சும்மார் 5 புத்தகங்கள் வரை புரட்டினம்.. எதிலும் பாரதமுனிவர்..பிரம்மா..சிவன்..ஐந்தாம் வேதம்..நாட்டிய சாஸ்திரம் என்பன தவிர்க்கப்பட்ட பரதநாட்டிய வரலாறில்லை..! எனி நீங்களா உல்டா பண்ணி விட்டா உண்டு..மற்றும்படி எது உண்மை என்றதை உலகம் அறியிறது மிகக் கஸ்டம்...! மைத்தோலொஜிதானே அவரவர் கற்பனைக்கு எழுதித்தள்ள வேண்டியான்..! ஆதாரம் உள்ளதுகளையே உங்கள் வசதிக்கு இல்லை என்ற ஆக்களாச்சே..!</span>
<span style='color:green'>குருவியே, உங்களால் ஒரு விவாதத்தைத் தொடர்ந்து நடத்த முடியாது போலிருக்கிறது, இதற்கு முன்பு பரத முனிவர், கி.மு 4000, தொல்பியல் சிற்பங்கள் என்றெல்லாம் கதை விட்டீர். அப்படியா! பரதமுனிவர் காலத்து, பரதசாஸ்திரப் படியான ஒரு தொல்பியல் சிற்பத்தையாவது காட்டுமென்றேன், அதைப் பற்றி மூச்சு விடாமல் இன்னொன்றுக்குத் தாவி விட்டீர்.
<b>இந்த இணையத் தலைப்பில் நான் சொல்லவந்ததே, தமிழரின் சதிராட்டம் என்னும் பழம்பெரும் நாட்டியக் கலைக்கு 1930 இல் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றப் பட்டு பார்ப்பான்களின் ஆதிக்கத்திற்குள்ளாகி, சமஸ்கிருதமயமாக்கப்பட்டு, அதற்கொரு இதிகாசக் கதை இணைக்கப்பட்டு, தமிழ் வேர்கள் மறைக்கப்பட்டு விட்டன. நாம் தமிழர் இனிமேலாவது இந்தக் கட்டுக் கதையையும், தமிழ்க்கலையாம் சதிருக்கு நேர்ந்த சதியையும் உணர வேண்டுமென்பதேயாகும்</b>.
உம்மால் முடிந்தால் எந்த ஒரு 1920க்கு முன்பு வெளியிட்ட நூலிலாவது சதிராட்டத்தைப் பரதநாட்டியமென்றோ அல்லது தமிழரின் சதிராட்டத்துக்கும், பரதமுனிவருக்கும், வடமொழிக்கும் உள்ள தொடர்பைக் காட்டுமாறு கேட்டேன், அதைப் பற்றியும், மூச்சு விடாமல் வன்னிக் காட்டின் மந்தியை விட வேகமாகத் தாவி விட்டீர்
Quote:[size=12]அப்படியே இந்த லிங்கையும் பாருங்கோ.. http://www.geocities.com/Tokyo/Shrine/3155...bnatyam.html#OB
அன்ரி தமிழ் என்று எல்லாத்தையும் புறக்கணிச்சா..புறோ தமிழ் என்று உங்கட நாலைச்சு தளங்களை அவையளுமதூக்கி வீசிட அதிக நேரம் எடுக்காது</span>
<span style='font-size:22pt;line-height:100%'>நான் தந்த பன்னாட்டு அறிஞர்கள் கலந்து கொண்ட மாநாட்டில், பன்னாட்டு மக்கள் மத்தியில், கலாநிதி. நிர்மலா ராமச்சந்திரனால் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை சுத்துமாத்து என்று தூக்கி வீசி விட்டு, <b>தமிழெதிர்ப்பு வெறிக் கன்னடத்தைச் சேர்ந்த அனு, ஆனந்த் என்ற இரண்டு கற்றுக் குட்டிகளின் Home Page ஐ உம்முடைய ஆதாரமாகத் தருவதற்கு உமக்குக் கொஞ்சம் கூட வெட்கமாயில்லையா?</b> உம்முடைய தமிழ் வெறுப்புக்கு எல்லையே இல்லையா?
இந்த LINK ஐ இப்படியான சிக்கலான விடயத்துக்கு உம்முடைய ஆதாரமாகத் தருமுன்பு அவர்களின் Home Page க்குப் போய் அவர்களின் தகுதியைப் பார்த்தீரா? நானும் கூட என்டைய Home Page இல் யாழ். களத்திலுள்ள குருவியாரின் முப்பாட்டனார் தான் கர்நாடகத்தில் முதலில் நாட்டிய சாஸ்திரத்தை எழுதினார் என்று போட்டால், அந்த .LINK ஐக் காட்டி நீரே பரதநாட்டியத்துக்குச் சொந்தம் கொண்டாடக் கூடிய பலே கில்லாடியாக இருப்பீர் போலிருக்கிறது.</span>
Quote:அப்புறம் இலங்கையின் பரதநாட்டிய பாடத்திட்டத்தில் சிங்களவர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ பங்கில்லை. தமிழர்கள் தான் அதை வரைகிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுங்கள்..!
<span style='color:green'>ஓமோம், தமிழரின் கட்டுப்பாட்டில் தானே இலங்கைக் கல்வித் திணைக்களம் உள்ளது, இப்படியே விட்டால் தமிழர்கள் தாங்களாகவே விரும்பித்தான் தமிழரை அழிக்க வேண்டுமென்று 2000 ஆண்டுகளுக்கு துவேசத்தைக் கக்கிய, துட்டகைமுனுவையும், இந்துக்களையும், தமிழர்களையும் எதிர்த்த அனகாரீக தர்மபாலாவையும் தமிழ்ச் சிறுவர்களின் பாடப் புத்தகத்தில் சேர்ந்தார்கள் என்று கதை விடக் கூடிய கெட்டிக்காரரையா நீர்.
இலங்கைக் கல்வித் திணைக்கள தமிழ்ப் பகுதி ஊழியர்கள் சிங்கள கல்வியமைச்சின் கொள்கைகளுக்கேற்ப கல்வித்திட்டத்தை அமைக்காது விட்டால் அவர்களின் பதவி பறி போய் விடுமென்பது, உமக்குத் தெரியாதா, அல்லது தெரியாது போல் நடிக்கிறீரா
Quote:[size=13]மூவேந்தர்கள் ஆண்ட அகண்ட திராவிட தேசம் குமரி முதல் ஒரிசா வரை பரந்திருந்தது. வெறும் தமிழ்நாடும் கேரளமும் மட்டுமல்ல..! </span>
[size=15]<b>யாரில்லை என்றது. தமிழரின் இந்த வீரமிகு பழம் பெரும் வரலாற்றையாவது சுத்து மாத்தென்று சொல்லாமல், உம்முடைய தமிழ்வெறுப்பை ஒரு பக்கம் வைத்து விட்டு ஒப்புக்கொண்டமைக்கு உம்மைப் பாராட்டாமல் இருக்க முடியாது</b>.
தமிழர்கள் ஓரிசா வரை மட்டும் போகவில்லை, அதற்கு மேலும் போனார்கள். ராஜேந்திர சோழன் கங்கைப் பெருவெளி வரை வெற்றி கொண்டான், அந்த <b>வெற்றியைக் கொண்டாட அதன் நினைவாகக் கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டுவித்தான்.</b> அது மட்டுமல்ல மூவேந்தர்களும் கடாரம், சாவகம், லட்சத்தீவுகள், இலங்கை, மாலை தீவுகளைக் கூடக் கைப்பற்றினார்கள்.
<b>ஆனால் தமிழரின் பெருந்தன்மை தான் அவர்களின் முதல் எதிரி, கைப் பற்றிய எந்த நாட்டிலும் அவர்கள் தமிழர்களைக் குடியேற்றிக் Colonize செய்யவில்லை</b>. இலங்கையின் கதை வேறு, சோழப் படையெடுப்புக்கு முன்பேயே தமிழர்கள் இலங்கையில் வாழ்கிறார்கள்.
<b>மூவேந்தர்களும் குடியேற்றவாதிகளாக இருந்திருந்தால் ஒரிசா மட்டுமல்ல, ஜாவாவும், கம்போடியாவும் கூடத் தமிழர்களின் நாடாக இன்றிருந்திருக்கும்</b>, எங்கள் முன்னோரின் பெருந்தன்மையும், தமிழரின் வந்தாரை வாழவைக்கும் நல்லெண்ணமும் தான் தமிழெதிரிகளை இன்றும் உலாவ விட்டு, அந்த ஒட்டுண்ணிகளே எங்களைக் கொல்லுமளவிற்கு வளர்த்து விட்டுள்ளோம்.

