Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தனக்குவமை இல்லாதவன்: சோமுவின் தங்கச்சியும் குஷ்புவும்
#1
எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலைந்து நாள் கழித்து பார்த்தால் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தான்."என்னடா ஆச்சு" என்று கேட்டதற்கு மேட்டூரில் போலீஸ் லத்திசார்ஜ் செய்து காலில் அடித்தார்கள் என்றான். "அட பாவமே போலீஸ் கிட்ட எதுக்குடா அடி வாங்கினாய்?" என்று கேட்டேன்."கோர்ட்டில் குஷ்பு மீது தக்காளி வீசியதற்கு தடியடி நடந்தது.அதில் அடிபட்டுவிட்டது" என்றான்.

"ஓ இதுதானா நீ மேட்டுருக்கு போன சுற்றுலா " என்று நினைத்துகொண்டேன்.அதன் பிறகு ரொம்ப நேரம் சுகாசினியை திட்டிகொண்டிருந்தான்.என்னால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை.
"அப்படி என்னடா தப்பா சொல்லிட்டாங்க" என்றேன்.பிலுபிலு என்று பிடித்துகொண்டான்."திருமணத்துக்கு முன் பெண்கள் செக்ஸ் வைத்துகொள்வது தப்பில்லைஇபெண்கள் பாருக்கு போவது தண்ணியடிப்பது தப்பில்லை என்கிறார்கள்இபாய் பிரண்ட்ஸ் வைத்துகொள்ள சொல்கிறார்கள்.இதைஎல்லாம் விட்டுவைப்பதா" என்று பொங்கினான்.

"சரி நீ தண்ணியிலேயே மூழ்கி கிடப்பவனாயிற்றேஇபெண்கள் தண்ணி அடித்தால் என்ன தப்பு" என்று கேட்டேன்.அவனுக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது."ஆண் என்ன வேண்டுமானாலும் செய்வான்.பெண் செய்யகூடாது.அது தான் கலாச்சாரம்இதமிழ் பண்பாடு" என்றான்.....
.................
...........................

http://holyox.blogspot.com/2006/01/blog-post_15.html
Reply


Messages In This Thread
தனக்குவமை இல்லாதவன்: சோமுவின் தங்கச்சியும் குஷ்புவும் - by kurukaalapoovan - 01-15-2006, 10:28 PM
[No subject] - by Rasikai - 01-17-2006, 02:17 AM
[No subject] - by RaMa - 01-18-2006, 06:23 AM
[No subject] - by Mathan - 01-30-2006, 05:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)