01-15-2006, 06:22 AM
[b]உங்கள் ஆதரவுடன் இதோ "புலத்தில் இருந்து ஓர் புலம்பல்" தொடர்கிறது...
<img src='http://www.chennaionline.com/cityfeature/NanganallurNotes/images/pongal.jpg' border='0' alt='user posted image'>
[size=18][b]தை பிறந்தால் வழி (லி) பிறக்கும்
14-01-06 அதிகாலை காலை 6 மணி. பகுதி நேர வேலையால் 3மணிக்கு வந்து தூங்கிய ராஜன் கண்களை திறந்து "குட் மோர்னிங் ராதி".
"குட் மோர்னிங் ராதி"
மனைவியை தேடிய ராஜனின் காதுகளில் "சுப்ரபாதம்" கேட்கிறது.
"வேறு என்ன ஏதாவது நாடகத்தில போகுது போல...ம்ம்ம்ம் என்ட வீட்டில எங்க இதெல்லாம்..ஆகா என்னடா இது அதிசயமா கிடக்குது என்ட வீட்டில தான் போல" என நினைத்தவன் வெளியே மண்டபத்திற்கு விரைகிறான்.
"குட் மோர்னிங்" என காலை வணக்கம் கூறியவாறு மனைவி ராதிகா கையில் சாம்பிராணி தட்டுடன் கடக்கவும் ராஜனுக்கு தலைசுற்றி விழாத குறை தான்.
"அம்மா அம்மா..." என தாயை அழைத்தவாறு தாயின் அறைக்கதவை தட்டினான்.
பதில் இல்லாது போகவே மறுபடியும் தாயை சற்று உரக்க அழைத்தான்.
"என்னங்க எதுக்கு இப்ப நல்ல நாள் அதுவுமா கத்துறிங்கள். அத்தை சமையல்கட்டில தான் இருக்கா.அங்க போய் கதைக்கிறத கதையுங்கோ" என கணவனை முறைத்தவாறு தன் சாம்பிராணி நடயை தொடர்ந்தால்.
"என்னடி இது, சாமி கும்பிடுறது என்றால் ஒரு பக்தி வேணும், சிரத்தை வேணும். இந்த படங்கள்ள வாற போல கதைச்சு கதைச்சு..ஒரு நாளைக்கு பார் கடவுளுக்கே பொறுக்காமல் எழும்பி ஓட போறார்"
"என்ன உங்கட ஆற்றாமையின் வெளிப்பாடு போல, அப்பவே என்ட அப்பர் சொன்னவர். வெளிநாட்டுகாரனை நம்பாத என்று. அத்தையின்ட மகனை கல்யாணம் பண்ணடி என்று கத்து கத்தென்று கத்தினார். நான் தான் கேட்கல..ம்ம்ம்ம்" என் ராதிகாவிடம் இருந்து ஓர் நீண்ட பெரு மூச்சு.
"அது சரி, உன்ட அத்தை மகன் குடுத்து வச்சவன் தப்பிட்டான்."
சாம்பிராணி தட்டில் கவனமாக இருந்தவள் சரேலென திரும்பி "என்ன சொல்லுறிங்கள்????"
"இல்லை என்னக்கு இருந்த அதிஸ்டம் அவனுக்கு இருக்கவில்லை என்று சொன்னென்" என வெளியே கூறியவன்,மனசுக்குள் "காலம் பொங்கல் அன்றும் பொய் சொல்ல வேண்டிய நிலமை"
இதுக்கு மேல் நின்றால் பொங்கல் "பொங்கலோ பொங்கல்" ஆகிவிடும் என தெரியவெ, தாயை நாடி சமையல் அறைக்குள் சென்றான்.
"தம்பி எழும்பிட்டியே, போய் குளிச்சிட்டு வா அப்பன். பொங்கள் பானையை அடுப்பில வைக்கவேணுமெல்லோ??"
"ஓமனை அதைவிடு, உங்களுக்கும் உங்கட மருமகளுக்கும் என்னனை நடந்தது. மெட்டி ஒலியில இப்படி எல்லம் பொங்கள் நாளில நடந்ததோனை??"
"போடா போய் குளிட, என்ட மருமகளோடயும் என்னொடையும் உனக்கு எப்பவும் ஒரு தணகல் என்ன?"
ஆம மொத்தம் இதில என்னமோ மர்மம் இருக்குட என நினைத்து கொண்டு குளிக்க சென்றான்.
சாம்பிராணி நடை முடித்துவிட்டு சமையல் கட்டுக்குள் வந்த ராதிகா, "அத்தை ஒரு தேத்தணி போடுறன் குடியுங்கோ.உங்களுக்கு இப்படி சாப்பிடாம விரதம் இருக்கிறது உடம்புக்கு நல்லதில்லை"
"பிள்ளை நானும் கேட்க வேணும் என்று இருந்தனான், ஒருக்க சிரமம் பாராமை ஒரு தேத்தணிய போடு பிள்ளை. அதுக்குள்ள நான் இந்த கொழுக்கட்டையை பிடிச்சு வைக்கிறன்"
"சரி மாமி, ஏன் மாமி இந்த மெட்டி ஒலி பார்த்தம் தானே, அதில இந்த லீலாவின்ட புருசனுக்கு வாறானே ஒரு கிராகதன், அவனை எல்லம் எப்படி மாமி அந்த பெட்டை சகிச்சுக்குது??"
"இதை கேட்டாயென்றா உண்மை பிள்ளை, இப்படி தான் என்ட மனுசனின்ட சகோதரியின்ட புருஸன். மகா பாவியாம். உன்ட மாமனார் அரிவாளோட எல்லோ போய் மிரட்டி போட்டு வாறவறாம்."
"இங்க அத்தை, மாமக்கு அப்படியும் தைரியம் இருந்ததோ??? ஊரில மாமாவை பற்றி வேற மாதி எல்லோ கதை. மனிக்கு பயந்த மனுசன் என்று"
"என்ன எவன் சொன்னது? ஆம்பிளை என்றால் மனிசிக்கு பயந்து, ஊருக்கு வீரனா தான் இருக்க வேணும். இப்ப என்ட பிள்ளை இல்லையா?"
வாசலிக்கு பிளாஸ்டிக் தோரணம் கட்ட நூல் எடுக்க வந்த ராஜன், "கதையை என்டா கைலாசம் தானெ உங்க ரெண்டு பேருக்கும்..இஞ்ச ராதி என்ன செய்யிறீர் அடுப்பில?"
"பின்ன என்ன நீங்கள் பெரிய வளவோட வீடா வாங்கி தந்திருக்கியள்?? கோலத்தை எங்க போடுறது நான்? அது தான் காஸ் அடுப்பை சுத்தி போடுறன்"
"சரி சரி பொங்கல் நாள் அதுவுமா ஆரம்பிச்சாச்சா?"
வாசலில் மாவிலை தோரணம் கட்டிகொண்டு இருக்கும் போது மேல்வீட்டு நடேசன் வருகிறார்.
"பொங்கல் வாழ்த்துக்கள் ராஜன்"
"நன்றி அங்கிள், வாழ்த்துக்கள். என்ன பொங்கல் எப்படி?"
"போகுதடா தம்பி, என்ட மனிசி இன்னும் நித்டிரை விட்டு எழும்பினா தானே. அது தான் உன்னோட சும்ம கதைச்சு கொண்டு இருப்பம் என்டு"
மனசுக்குள் "வீட்டில இருக்கிற தொல்லை போதாது என்று, மேல் வீட்டு, கீழ் வீட்டு தொல்லை வேறு"
"ஓம் அதுக்கென்ன அங்கிள், வாங்கோ வாங்கோ"
ராஜனின் பின்னால் வீட்டுக்குள் நுழந்த நடேசன், "பிள்ளை ராதிகா..இருக்கியோடி அம்மா?"
நடேசனின் குரலை கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த ராதி "யாரு நடேஸ் அங்கிளா? வாங்கோ வாங்கோ"
"நீ தான்டி பிள்ளை என்ட பேரை சரியா கூப்பிடுறாய். இந்த நாட்டில வந்துஇ போட்டு பட்டிக்காட்டு தனமா முழு பெயரையும் சொல்லியா கூப்பிட முடியும்?"
ராஜன் (மனசுக்குள்) : ஆமா இந்த கிழட்டுக்கு இப்ப இது தான் குறை. நடேஸாம் நடேஸ். ஏன் "நட்" என்று பெயரை மாத்த வேண்டியது தானே?
"என்ன ராஜன் பலமான யோசனை போல??"
"இல்லை அங்கிள் அப்படி ஒன்றும் இல்லை. கப்பல் ஒன்று கவிழ போது போல..நீங்கள் கதைச்சு கொண்டு இருங்கோ, நான் ஒரு டெலிபோன் செய்து போட்டு வாறன்"
ராஜன் அறைக்குள் சென்று மறைய,
"பிள்ளை நான் கோவிக்கிறன் என்று குறை நினைக்க கூடாது. தம்பி ராஜன் ஒரு நல்ல வேலைக்கு போகலாம் தானே? ஒரு வீட்டை கீட்டை வாங்கி, பிள்ளையளை பெத்து இருக்க வேண்டிய நேரத்தில என்ன பிள்ளை இது. உன்னை பார்க்கவெ எனக்கு கவலையா கிடக்குது.."
"இங்க என்ன மதுரை ஆட்சியா நடக்குது. எனக்கு மட்டும் என்ட புருஸன் நல்ல வேலை செய்ய வேணும் என்று ஆசை இல்லையா?பாருங்கோ அங்கிள் ஒரு கோலத்தை போட்டு பொங்க கூட மனிசருக்கு வழி இல்லை.."
"கவலை படாத பிள்ளை, நான் தம்பிக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தாறன். என்ட மூத்தவனை தெரியும் தானே வங்கியில நல்ல உத்தியோகம். அவனை கேட்டு பார்க்கிறன். நான் சொன்னா கேட்பான்."
"சரி அங்கிள்"
"பிள்ளை நான் வெளிக்கிட போறன், குறை நினைக்காம இந்த இலங்கைக்கு கதைக்கிற டெலிபோன் காட் இருந்தா தாடியம்மா. வயசான காலத்தில அடிக்கடி வெளிய போக முடியாம கிடக்குது"
"இருங்கோ அங்கிள் தாறன்.."
நடேசன் வந்த வேலை முடிந்து திரும்ப, அறைக்குள் இருந்து வெளியே வந்த ராஜன்,
"இந்த மனிசனுக்கு நடேசன் என்று பெயர் வைக்காமல் நாரதர் என்று வைத்திருக்கலாம்"
"அப்ப சும்மா நடேஸ் அங்கிளை குறை சொல்லாதிங்கோ"
"ஓம் ஓம் அவருக்கு பெரிய ரசிகர் மன்றமே ஆரம்பித்துவிடுவாய் போல. மகனிட்ட சொல்ல போறாறோமோ?? கதைய பாரன். மகன் அடிச்சு வெளிய துறத்தினது மறந்து போச்சாமோ??..."
"உங்களுக்கு எப்பவும் யாரிலயாவது குறை கண்டி பிடிக்கிறதே தொழிலா போச்சு.." என கூறி மண்டபத்தைவிட்டு நகர..
"தை பிறந்த வழி பிறக்குமா?? இல்லை "வலி" பிறக்குமா?? என்ட நல்லூர் கந்தா????"
காதை அலறுவது போல சத்தம் போட, "கற்பூரத்தை அதிகம் காட்டதிங்கோ என்று எத்தனை தடவை சொல்லுறது??? வீடு கரி பிடிச்சா அதுக்கு வேற காசு அறுக்கணும். ஒரு சொல் சொல்லகோடாதா?? இது வேற.."
கையில் கிடைத்த பத்திரிகையை எடுத்து கொண்டு கதிரை மேல் ஏறி Fire Alarmக்கு விசிறியபடி "கடைசியில என்ன இப்படி நிப்பாட்டி போட்டாயே கடவுளே.. :oops: :? "
[b][size=14]புலம்பல் தொடரும்....
<img src='http://www.chennaionline.com/cityfeature/NanganallurNotes/images/pongal.jpg' border='0' alt='user posted image'>
[size=18][b]தை பிறந்தால் வழி (லி) பிறக்கும்
14-01-06 அதிகாலை காலை 6 மணி. பகுதி நேர வேலையால் 3மணிக்கு வந்து தூங்கிய ராஜன் கண்களை திறந்து "குட் மோர்னிங் ராதி".
"குட் மோர்னிங் ராதி"
மனைவியை தேடிய ராஜனின் காதுகளில் "சுப்ரபாதம்" கேட்கிறது.
"வேறு என்ன ஏதாவது நாடகத்தில போகுது போல...ம்ம்ம்ம் என்ட வீட்டில எங்க இதெல்லாம்..ஆகா என்னடா இது அதிசயமா கிடக்குது என்ட வீட்டில தான் போல" என நினைத்தவன் வெளியே மண்டபத்திற்கு விரைகிறான்.
"குட் மோர்னிங்" என காலை வணக்கம் கூறியவாறு மனைவி ராதிகா கையில் சாம்பிராணி தட்டுடன் கடக்கவும் ராஜனுக்கு தலைசுற்றி விழாத குறை தான்.
"அம்மா அம்மா..." என தாயை அழைத்தவாறு தாயின் அறைக்கதவை தட்டினான்.
பதில் இல்லாது போகவே மறுபடியும் தாயை சற்று உரக்க அழைத்தான்.
"என்னங்க எதுக்கு இப்ப நல்ல நாள் அதுவுமா கத்துறிங்கள். அத்தை சமையல்கட்டில தான் இருக்கா.அங்க போய் கதைக்கிறத கதையுங்கோ" என கணவனை முறைத்தவாறு தன் சாம்பிராணி நடயை தொடர்ந்தால்.
"என்னடி இது, சாமி கும்பிடுறது என்றால் ஒரு பக்தி வேணும், சிரத்தை வேணும். இந்த படங்கள்ள வாற போல கதைச்சு கதைச்சு..ஒரு நாளைக்கு பார் கடவுளுக்கே பொறுக்காமல் எழும்பி ஓட போறார்"
"என்ன உங்கட ஆற்றாமையின் வெளிப்பாடு போல, அப்பவே என்ட அப்பர் சொன்னவர். வெளிநாட்டுகாரனை நம்பாத என்று. அத்தையின்ட மகனை கல்யாணம் பண்ணடி என்று கத்து கத்தென்று கத்தினார். நான் தான் கேட்கல..ம்ம்ம்ம்" என் ராதிகாவிடம் இருந்து ஓர் நீண்ட பெரு மூச்சு.
"அது சரி, உன்ட அத்தை மகன் குடுத்து வச்சவன் தப்பிட்டான்."
சாம்பிராணி தட்டில் கவனமாக இருந்தவள் சரேலென திரும்பி "என்ன சொல்லுறிங்கள்????"
"இல்லை என்னக்கு இருந்த அதிஸ்டம் அவனுக்கு இருக்கவில்லை என்று சொன்னென்" என வெளியே கூறியவன்,மனசுக்குள் "காலம் பொங்கல் அன்றும் பொய் சொல்ல வேண்டிய நிலமை"
இதுக்கு மேல் நின்றால் பொங்கல் "பொங்கலோ பொங்கல்" ஆகிவிடும் என தெரியவெ, தாயை நாடி சமையல் அறைக்குள் சென்றான்.
"தம்பி எழும்பிட்டியே, போய் குளிச்சிட்டு வா அப்பன். பொங்கள் பானையை அடுப்பில வைக்கவேணுமெல்லோ??"
"ஓமனை அதைவிடு, உங்களுக்கும் உங்கட மருமகளுக்கும் என்னனை நடந்தது. மெட்டி ஒலியில இப்படி எல்லம் பொங்கள் நாளில நடந்ததோனை??"
"போடா போய் குளிட, என்ட மருமகளோடயும் என்னொடையும் உனக்கு எப்பவும் ஒரு தணகல் என்ன?"
ஆம மொத்தம் இதில என்னமோ மர்மம் இருக்குட என நினைத்து கொண்டு குளிக்க சென்றான்.
சாம்பிராணி நடை முடித்துவிட்டு சமையல் கட்டுக்குள் வந்த ராதிகா, "அத்தை ஒரு தேத்தணி போடுறன் குடியுங்கோ.உங்களுக்கு இப்படி சாப்பிடாம விரதம் இருக்கிறது உடம்புக்கு நல்லதில்லை"
"பிள்ளை நானும் கேட்க வேணும் என்று இருந்தனான், ஒருக்க சிரமம் பாராமை ஒரு தேத்தணிய போடு பிள்ளை. அதுக்குள்ள நான் இந்த கொழுக்கட்டையை பிடிச்சு வைக்கிறன்"
"சரி மாமி, ஏன் மாமி இந்த மெட்டி ஒலி பார்த்தம் தானே, அதில இந்த லீலாவின்ட புருசனுக்கு வாறானே ஒரு கிராகதன், அவனை எல்லம் எப்படி மாமி அந்த பெட்டை சகிச்சுக்குது??"
"இதை கேட்டாயென்றா உண்மை பிள்ளை, இப்படி தான் என்ட மனுசனின்ட சகோதரியின்ட புருஸன். மகா பாவியாம். உன்ட மாமனார் அரிவாளோட எல்லோ போய் மிரட்டி போட்டு வாறவறாம்."
"இங்க அத்தை, மாமக்கு அப்படியும் தைரியம் இருந்ததோ??? ஊரில மாமாவை பற்றி வேற மாதி எல்லோ கதை. மனிக்கு பயந்த மனுசன் என்று"
"என்ன எவன் சொன்னது? ஆம்பிளை என்றால் மனிசிக்கு பயந்து, ஊருக்கு வீரனா தான் இருக்க வேணும். இப்ப என்ட பிள்ளை இல்லையா?"
வாசலிக்கு பிளாஸ்டிக் தோரணம் கட்ட நூல் எடுக்க வந்த ராஜன், "கதையை என்டா கைலாசம் தானெ உங்க ரெண்டு பேருக்கும்..இஞ்ச ராதி என்ன செய்யிறீர் அடுப்பில?"
"பின்ன என்ன நீங்கள் பெரிய வளவோட வீடா வாங்கி தந்திருக்கியள்?? கோலத்தை எங்க போடுறது நான்? அது தான் காஸ் அடுப்பை சுத்தி போடுறன்"
"சரி சரி பொங்கல் நாள் அதுவுமா ஆரம்பிச்சாச்சா?"
வாசலில் மாவிலை தோரணம் கட்டிகொண்டு இருக்கும் போது மேல்வீட்டு நடேசன் வருகிறார்.
"பொங்கல் வாழ்த்துக்கள் ராஜன்"
"நன்றி அங்கிள், வாழ்த்துக்கள். என்ன பொங்கல் எப்படி?"
"போகுதடா தம்பி, என்ட மனிசி இன்னும் நித்டிரை விட்டு எழும்பினா தானே. அது தான் உன்னோட சும்ம கதைச்சு கொண்டு இருப்பம் என்டு"
மனசுக்குள் "வீட்டில இருக்கிற தொல்லை போதாது என்று, மேல் வீட்டு, கீழ் வீட்டு தொல்லை வேறு"
"ஓம் அதுக்கென்ன அங்கிள், வாங்கோ வாங்கோ"
ராஜனின் பின்னால் வீட்டுக்குள் நுழந்த நடேசன், "பிள்ளை ராதிகா..இருக்கியோடி அம்மா?"
நடேசனின் குரலை கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்த ராதி "யாரு நடேஸ் அங்கிளா? வாங்கோ வாங்கோ"
"நீ தான்டி பிள்ளை என்ட பேரை சரியா கூப்பிடுறாய். இந்த நாட்டில வந்துஇ போட்டு பட்டிக்காட்டு தனமா முழு பெயரையும் சொல்லியா கூப்பிட முடியும்?"
ராஜன் (மனசுக்குள்) : ஆமா இந்த கிழட்டுக்கு இப்ப இது தான் குறை. நடேஸாம் நடேஸ். ஏன் "நட்" என்று பெயரை மாத்த வேண்டியது தானே?
"என்ன ராஜன் பலமான யோசனை போல??"
"இல்லை அங்கிள் அப்படி ஒன்றும் இல்லை. கப்பல் ஒன்று கவிழ போது போல..நீங்கள் கதைச்சு கொண்டு இருங்கோ, நான் ஒரு டெலிபோன் செய்து போட்டு வாறன்"
ராஜன் அறைக்குள் சென்று மறைய,
"பிள்ளை நான் கோவிக்கிறன் என்று குறை நினைக்க கூடாது. தம்பி ராஜன் ஒரு நல்ல வேலைக்கு போகலாம் தானே? ஒரு வீட்டை கீட்டை வாங்கி, பிள்ளையளை பெத்து இருக்க வேண்டிய நேரத்தில என்ன பிள்ளை இது. உன்னை பார்க்கவெ எனக்கு கவலையா கிடக்குது.."
"இங்க என்ன மதுரை ஆட்சியா நடக்குது. எனக்கு மட்டும் என்ட புருஸன் நல்ல வேலை செய்ய வேணும் என்று ஆசை இல்லையா?பாருங்கோ அங்கிள் ஒரு கோலத்தை போட்டு பொங்க கூட மனிசருக்கு வழி இல்லை.."
"கவலை படாத பிள்ளை, நான் தம்பிக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தாறன். என்ட மூத்தவனை தெரியும் தானே வங்கியில நல்ல உத்தியோகம். அவனை கேட்டு பார்க்கிறன். நான் சொன்னா கேட்பான்."
"சரி அங்கிள்"
"பிள்ளை நான் வெளிக்கிட போறன், குறை நினைக்காம இந்த இலங்கைக்கு கதைக்கிற டெலிபோன் காட் இருந்தா தாடியம்மா. வயசான காலத்தில அடிக்கடி வெளிய போக முடியாம கிடக்குது"
"இருங்கோ அங்கிள் தாறன்.."
நடேசன் வந்த வேலை முடிந்து திரும்ப, அறைக்குள் இருந்து வெளியே வந்த ராஜன்,
"இந்த மனிசனுக்கு நடேசன் என்று பெயர் வைக்காமல் நாரதர் என்று வைத்திருக்கலாம்"
"அப்ப சும்மா நடேஸ் அங்கிளை குறை சொல்லாதிங்கோ"
"ஓம் ஓம் அவருக்கு பெரிய ரசிகர் மன்றமே ஆரம்பித்துவிடுவாய் போல. மகனிட்ட சொல்ல போறாறோமோ?? கதைய பாரன். மகன் அடிச்சு வெளிய துறத்தினது மறந்து போச்சாமோ??..."
"உங்களுக்கு எப்பவும் யாரிலயாவது குறை கண்டி பிடிக்கிறதே தொழிலா போச்சு.." என கூறி மண்டபத்தைவிட்டு நகர..
"தை பிறந்த வழி பிறக்குமா?? இல்லை "வலி" பிறக்குமா?? என்ட நல்லூர் கந்தா????"
காதை அலறுவது போல சத்தம் போட, "கற்பூரத்தை அதிகம் காட்டதிங்கோ என்று எத்தனை தடவை சொல்லுறது??? வீடு கரி பிடிச்சா அதுக்கு வேற காசு அறுக்கணும். ஒரு சொல் சொல்லகோடாதா?? இது வேற.."
கையில் கிடைத்த பத்திரிகையை எடுத்து கொண்டு கதிரை மேல் ஏறி Fire Alarmக்கு விசிறியபடி "கடைசியில என்ன இப்படி நிப்பாட்டி போட்டாயே கடவுளே.. :oops: :? "
[b][size=14]புலம்பல் தொடரும்....
[b][size=15]
..
..

