01-14-2006, 02:15 AM
<b>மட்டக்களப்பில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மீது கைக்குண்டு வீச்சு </b>
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இத்தாக்குதலில் அலுவலகம் முன்பாக நிறுத்தி வைக்கப்படடிருந்த 3 வாகனங்களில் ஒரு வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அலுவலகத்தின் ஜன்னல்இ கதவுகளும் குண்டுவெடித்து சிதறியதில் சேதமடைந்துள்ளது.
மட்டக்களப்பு நகரில் உயர் பாதுகாப்பு வலயம் என கருதப்படும் லேக் வீதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. 3 சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள இந்த வீதியிலேயே ஈ.பி.ஆர்.எல்.எஃப். வரதர் அணியின் அலுவலகம் அமைந்துள்ளதோடு போர் நிறுத்த கண்கானிப்புக் குழு அலுவலகத்திற்கு அருகாமையில் அதாவது 10 மீற்றருக்குள் ராசிக் குழுவின் முகாமும் அமைந்துள்ளது.
துணை ஆயுதக் குழுக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அளித்து வரும் முக்கியத்துவம் குறித்து நேற்று போர் நிறுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைமையகம் கடுமையான அறிக்கையொன்றை வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கருணா குழுவைச் சேர்ந்தவர்களினால் மாவட்ட கண்காணிப்பாளர் சிலருக்கு பெயர் குறிப்பிட்டு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையடுத்து அவர்கள் மாவட்டத்திற்கு வெளியே மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இத்தாக்குதலில் அலுவலகம் முன்பாக நிறுத்தி வைக்கப்படடிருந்த 3 வாகனங்களில் ஒரு வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. அலுவலகத்தின் ஜன்னல்இ கதவுகளும் குண்டுவெடித்து சிதறியதில் சேதமடைந்துள்ளது.
மட்டக்களப்பு நகரில் உயர் பாதுகாப்பு வலயம் என கருதப்படும் லேக் வீதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. 3 சோதனைச் சாவடிகள் அமைந்துள்ள இந்த வீதியிலேயே ஈ.பி.ஆர்.எல்.எஃப். வரதர் அணியின் அலுவலகம் அமைந்துள்ளதோடு போர் நிறுத்த கண்கானிப்புக் குழு அலுவலகத்திற்கு அருகாமையில் அதாவது 10 மீற்றருக்குள் ராசிக் குழுவின் முகாமும் அமைந்துள்ளது.
துணை ஆயுதக் குழுக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அளித்து வரும் முக்கியத்துவம் குறித்து நேற்று போர் நிறுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைமையகம் கடுமையான அறிக்கையொன்றை வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கருணா குழுவைச் சேர்ந்தவர்களினால் மாவட்ட கண்காணிப்பாளர் சிலருக்கு பெயர் குறிப்பிட்டு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையடுத்து அவர்கள் மாவட்டத்திற்கு வெளியே மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
<b> </b>

