Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
8 கடற்படையினர் கொலை
#3
<b>வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: ஒன்பது கடற்படையினர் பலி </b>
Written by Paandiyan Thursday, 12 January 2006

வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் சிறீலங்கா கடற்படையினர் பயணித்த பேரூந்தை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் ஒன்பது கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு கடற் படையினர் படுகாயமடைந்துள்ளனர். (மேலதிக விபரம் இணைப்பு)

வவுனியா புனாவ கடற்படை முகாமிலிருந்து மன்னார் நோக்கி பேரூந்து ஒன்றில் மதவாச்சி - மன்னார் வீதி வழியாக சென்ற கடற்படையினரை இலக்கு வைத்து செட்டிக்குளத்திற்கும் அடம்பன் குளத்திற்கும் இடையில் வைத்து இக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த கடற்படையினர் அனைவரும் செட்டிக்குளம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். னஇவர்களை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவதற்கு இராணுவத்தினர் ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு மேலதிக இராணுவத்தினர் அழைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்தி: சங்கதி
<b>
?
- . - .</b>
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 12:17 PM
[No subject] - by Sriramanan - 01-12-2006, 12:31 PM
[No subject] - by Vaanampaadi - 01-12-2006, 01:04 PM
[No subject] - by Vaanampaadi - 01-12-2006, 06:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)