01-12-2006, 12:20 PM
<b>பருத்துறையில் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் வயோதிபர் பலி </b>
இன்று பருத்துறை முதலாம் கட்டையில் ஸ்ரீலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி அப்பாவிப் பொதுமகன் ஒருவர் பலியானார்.இன்று பி.பகல் 1 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த பொதுமகனான துன்னாலையைச் சேர்ந்த கணபதி முருகேசு வயது 69 என்பவரே படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பலியானவர் ஆவார். யாழ் நகர வீதியெங்கும் சுடு நிலையில் துப்பாக்கிகளை வைத்தபடி காவலில் நிற்கின்ற படையினர் அச்சம் காரணமாக தவறுதலாக வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை சுட்டு விட்டதாக அப்பகுதியில் இச்சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இப்போது இவரது சடலம் மந்திகை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
இன்று பருத்துறை முதலாம் கட்டையில் ஸ்ரீலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி அப்பாவிப் பொதுமகன் ஒருவர் பலியானார்.இன்று பி.பகல் 1 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த பொதுமகனான துன்னாலையைச் சேர்ந்த கணபதி முருகேசு வயது 69 என்பவரே படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பலியானவர் ஆவார். யாழ் நகர வீதியெங்கும் சுடு நிலையில் துப்பாக்கிகளை வைத்தபடி காவலில் நிற்கின்ற படையினர் அச்சம் காரணமாக தவறுதலாக வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை சுட்டு விட்டதாக அப்பகுதியில் இச்சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இப்போது இவரது சடலம் மந்திகை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>
"
"
"

