01-12-2006, 10:15 AM
வேலுõர் சிறையில் இருந்து பரோலில் செல்ல நளினி மனு வேலுõர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி தன் மகளைக் காண ஒரு மாதம் பரோலில் செல்ல சிறை அதிகாரிகளிடம் மனு செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு துõக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டணையாக குறைக்கப்பட்டது. நளினி வேலுõர் பெண்கள் சிறையிலும், முருகன் உட்பட மூவர் ஆண்கள் சிறையிலும் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் நளினியின் தண்டனைக் காலம் 14 ஆண்டுகள் முடிந்தது. இவரை விடுதலை செய்ய பரிந்துரை செய்து வேலுõர் பெண்கள் சிறை அதிகாரிகள் சென்னையில் உள்ள சிறைத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
அங்கிருந்து இதுவரை பதில் வரவில்லை. இதனால் நளினி கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இலங்கையில் வசித்து வந்த நளினியின் மகள் அரித்திரா நேற்று முன் தினம் வேலுõர் சிறையில் தனது பெற்றோரை சந்தித்து விட்டு சென்றார்.
இதையடுத்து தன் மகளைப் பார்க்கவும், அவருடன் சில நாள் தங்கி இருக்கவும், தன்னை ஒரு மாதம் பரோலில் விட வேண்டும் என்று நளினி வேலுõர் பெண்கள் சிறை அதிகாரிகளிடம் மனு செய்துள்ளார். இந்த மனு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மனுவின் மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளதாக சிறை அதிகாரிகள் கூறினர்.
மூன்று மாத சுற்றுலா "விஸா'வில் தமிழகம் வந்துள்ள அரித்திரா அது வரையில் சென்னையில் தங்கியிருப்பதாக தெரிகிறது.
தமிழகம் வந்துள்ள அரித்திராவுக்கு கடுமையான நிபந்தனைகளுக்கு இடையில் "விஸா' வழங்கப்பட்டுள்ளது. பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளிக்க கூடாது. தமிழகத்தில் தங்கும் இடம் குறித்த தகவல்களை வெளியில் விடக்கூõடது என்னும், அரித்திரா செல்லும் இடங்கள் குறித்து உளவுத்து துறை போலீஸாருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பன உட்பட பல நிபந்தனைகளின் பேரில் அரித்திராவுக்கு "விஸா' வழங்கப்பட்டுள்ளது.
Dinamalar
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு துõக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
நளினிக்கு மட்டும் ஆயுள் தண்டணையாக குறைக்கப்பட்டது. நளினி வேலுõர் பெண்கள் சிறையிலும், முருகன் உட்பட மூவர் ஆண்கள் சிறையிலும் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் நளினியின் தண்டனைக் காலம் 14 ஆண்டுகள் முடிந்தது. இவரை விடுதலை செய்ய பரிந்துரை செய்து வேலுõர் பெண்கள் சிறை அதிகாரிகள் சென்னையில் உள்ள சிறைத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
அங்கிருந்து இதுவரை பதில் வரவில்லை. இதனால் நளினி கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இலங்கையில் வசித்து வந்த நளினியின் மகள் அரித்திரா நேற்று முன் தினம் வேலுõர் சிறையில் தனது பெற்றோரை சந்தித்து விட்டு சென்றார்.
இதையடுத்து தன் மகளைப் பார்க்கவும், அவருடன் சில நாள் தங்கி இருக்கவும், தன்னை ஒரு மாதம் பரோலில் விட வேண்டும் என்று நளினி வேலுõர் பெண்கள் சிறை அதிகாரிகளிடம் மனு செய்துள்ளார். இந்த மனு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மனுவின் மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளதாக சிறை அதிகாரிகள் கூறினர்.
மூன்று மாத சுற்றுலா "விஸா'வில் தமிழகம் வந்துள்ள அரித்திரா அது வரையில் சென்னையில் தங்கியிருப்பதாக தெரிகிறது.
தமிழகம் வந்துள்ள அரித்திராவுக்கு கடுமையான நிபந்தனைகளுக்கு இடையில் "விஸா' வழங்கப்பட்டுள்ளது. பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளிக்க கூடாது. தமிழகத்தில் தங்கும் இடம் குறித்த தகவல்களை வெளியில் விடக்கூõடது என்னும், அரித்திரா செல்லும் இடங்கள் குறித்து உளவுத்து துறை போலீஸாருக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பன உட்பட பல நிபந்தனைகளின் பேரில் அரித்திராவுக்கு "விஸா' வழங்கப்பட்டுள்ளது.
Dinamalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

