01-12-2006, 09:09 AM
<b>மூதூரில் வயலுக்குச் சென்ற குடும்பஸ்தர் சிறிலங்கா பொலிசாரால் அடித்தக் கொலை! </b>
மூதூர் மூன்றாம் கொலனி என்னும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு வேளாண்மை வயலுக்குக் காவலுக்குச் சென்ற தனபாலன் என்ற குடும்பஸ்த்தர் சிறிலங்காப் பொலிசாரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபரை உறவினர்கள் தேடிச் சென்ற போது சடலம் அடி காயங்களுடன் வீதியில் கிடந்தது
இச்சம்பவம் தொடர்பாக தெயிவத்தப் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்வதற்காக சென்ற போது இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை இது தொடர்பாக எங்களுக்கு எதுவித தொடர்புமில்லையெனப் பொலிசார் கைவிரித்து விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தெயிவத்தை பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள இடத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனபாலனின் படுகொலைக்கு நீங்களே காரணம். இதற்கு நீதியான விசாரணை வழங்க வேண்டும். இல்லையேல் இப்பிரதேச்தை விட்டு வெளியே வேண்டும் என கோசங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கந்தளாய்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
மூதூர் மூன்றாம் கொலனி என்னும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு வேளாண்மை வயலுக்குக் காவலுக்குச் சென்ற தனபாலன் என்ற குடும்பஸ்த்தர் சிறிலங்காப் பொலிசாரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபரை உறவினர்கள் தேடிச் சென்ற போது சடலம் அடி காயங்களுடன் வீதியில் கிடந்தது
இச்சம்பவம் தொடர்பாக தெயிவத்தப் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்வதற்காக சென்ற போது இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை இது தொடர்பாக எங்களுக்கு எதுவித தொடர்புமில்லையெனப் பொலிசார் கைவிரித்து விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தெயிவத்தை பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள இடத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனபாலனின் படுகொலைக்கு நீங்களே காரணம். இதற்கு நீதியான விசாரணை வழங்க வேண்டும். இல்லையேல் இப்பிரதேச்தை விட்டு வெளியே வேண்டும் என கோசங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கந்தளாய்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</i></b>
"
"
"

