01-12-2006, 08:48 AM
<b>திருமலை மாணவர்கள் படுகொலை: விசாரணை தொடக்கம் </b>
சிறிலங்கா இராணுவத்தினரால் திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருகோணமலை நீதிபதி வி.இராமகமலன் முன்னிலையில்ல் இந்த விசாரணை நடைபெற்றது.
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட றஜீகரின் தந்தை மருத்துவர் கே. மனோகரன் அரை மணி நேரம் சாட்சியமளித்தார்.
மாணவர் சிவானந்தாவின் தாயார் தங்கதுரை, அவரது சகோதரி சுபாஜினி சித்ரவேலு இருவரும் கண்ணீர்விட்டு கதறியழுதபடியே சாட்சியமளித்தனர். இதையடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை மற்ற மாணவர்களின் பெற்றோர், உறவினர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.
தமிழ் மாணவர்கள் படுகொலை தொடர்பிலான தகவல் அறிந்தோர் தகவல்களை கையளிக்கலாம் என்றும் திருமலை நீதிபதி அறிவித்துள்ளார்.
முன்னதாக இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்து திருகோணமலை அரச மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 2 மாணவர்களிடமும் திருமலை நீதிபதி சாட்சியங்களைப் பதிவு செய்தார்.
<b><i> தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
சிறிலங்கா இராணுவத்தினரால் திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருகோணமலை நீதிபதி வி.இராமகமலன் முன்னிலையில்ல் இந்த விசாரணை நடைபெற்றது.
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட றஜீகரின் தந்தை மருத்துவர் கே. மனோகரன் அரை மணி நேரம் சாட்சியமளித்தார்.
மாணவர் சிவானந்தாவின் தாயார் தங்கதுரை, அவரது சகோதரி சுபாஜினி சித்ரவேலு இருவரும் கண்ணீர்விட்டு கதறியழுதபடியே சாட்சியமளித்தனர். இதையடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை மற்ற மாணவர்களின் பெற்றோர், உறவினர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.
தமிழ் மாணவர்கள் படுகொலை தொடர்பிலான தகவல் அறிந்தோர் தகவல்களை கையளிக்கலாம் என்றும் திருமலை நீதிபதி அறிவித்துள்ளார்.
முன்னதாக இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்து திருகோணமலை அரச மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 2 மாணவர்களிடமும் திருமலை நீதிபதி சாட்சியங்களைப் பதிவு செய்தார்.
<b><i> தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
"

