01-11-2006, 06:11 PM
வணக்கம் உறவுகளே சுற்றுலா முடிந்து வந்ததும் உடல் நிலையும் சரியாக இல்லை அதோடை வீடும் மாறி கொண்டிருப்பதால் நேரமின்மை ஆனாலும் கதையின் தொடருக்கு ஆவலாய் காத்திருந்த உங்களிற்காய் இதோ.....
சிகரற் புகையை மேலே நேக்கி ஊதிவிட்டு மீதியை தரையயில் எறிந்துவிட்டு ரவி வாடி வா நான் நினைச்சனான் என்னடா இப்ப கொஞ்ச நாளா என்னை எதிர்த்து கதைக்கிறயெண்டு அந்த தைரியம் எங்கை இருந்து வந்ததெண்டு இப்ப தெரியிது நான் சந்தேக பட்டதும் சரியா தான் போச்சுது.
அதாலை தான் இண்டைக்கு வேலைக்கு பேகாகாமல் ஒளிச்சிருந்து பாத்தனான் என்ன நடக்குதெண்டு
அப்பிடி யென்னத்தையடி என்னட்டை இல்லாததை அவனிட்டை கண்டனி யென்றபடி சாந்தியை நெருங்கி அவளது தலை முடியை கொத்தாய் பிடித்து இழுத்து வந்து லிப்ற்றினுள் தள்ளினான்.
சிவா எதுவும் செய்ய முடியாதவனாக ரவி அவசரப்படாதை நீ நினைக்கிற மாதிரியில்லை..என்றவும் ரவி ஆவேசமாக சிவா பக்கம் திரும்பி டேய் சிவா பொத்து வாயை இது எனக்கும் மனிசிக்கும் உள்ள பிரச்சனை நீ தலையிடாதை எண்று கையை நீட்டி விரலை சுண்டியவாறு கூறிவிட்டு லிப்றினுள் நுளைந்தவன் அவனது சப்பாத்து கால் சாந்தியின் அடி வயிற்றில் இறங்கியது.
அய்யோ அம்மா என்ற சாந்தியின் அலறலுடன் லிப்ற் மூடிக் கொள்ள அதுதான் சமயமமென்று காத்திருந்த ரவியின் கால் கை எல்லாமே சாந்தியை பதம் பாத்தது. அடி வயிற்றை பொத்தி பிடித்தபடி அவன் அடிப்பதைகூட தடுக்க முடியாமல் சாந்தி லிப்றின் முலையில் சுருண்டு போய் இருந்துவிட்டாள்.
லிப்ற் அவர்கள் மாடியில் நின்றதும் ரவி சாந்தியை ஒரு கையால் தலை முடியை பிடித்து இழுத்து சென்று வீட்டை திறந்து உள்ளே தள்ளசாந்தி தட்டு தடுமாறி உள்ளே ஒடிப்போய் படுக்கையறையினுள் நுளைந்து கதைவை புூட்டி கொண்டு படுக்கையில் விழுந்தவளிள்கு தலை சுற்றி கொண்டு கண்கள் இருண்டு கொண்டு வருவதை போல இருந்தது அப்படியே மயங்கி போய் விட்டாள்.
கீழே ரவி சாந்தியை உதைந்ததையும் அவளது அலறலையும் பார்த்து திகைத்து போய் நின்ற சிவா சில கணங்களில் தன்னை சுதாகரித்தவன் தனது கை தொலை பேசியை எடுத்து காவல் துறையின் இலக்கங்களை அழுத்தி விபரத்தை கூறி விட்டு அந்த குடியிருப்பின் கீழேபேய் நின்று கொண்டான்.
; ரவியோ சாந்தியிடம் படுக்கையறையை திறக்கும்படி கத்தி கதைவை தட்டி உதைந்து பார்த்து விட்டு இரடி உனக்கு பிறகு வந்து மிச்சம் கவனிக்கிறன் என்று கத்திவிட்டு வீட்டை விட்டு வெளி யேறவும்.சில நிமிடங்களில் வந்த காவல் துறையினர் அங்கு வந்ததும் சிவா தன்னை அறிமுகபடுத்தி தான் தான் அழைத்ததாககூறி அவர்களுடன் ரவியின் வீட்டிற்கு அழைத்து சொல்லவும் நேரம் சரியாக இருந்தது.
வந்த காவல் துறையினர் ரவியை கைது செய்துவிட்டு சாந்தியின் படுக்கையறையை தட்டி தாங்கள் காவல்துறை வந்திருப்பதாகவும் பயப்படாமல் கதைவை திறக்கும்படி கூறியும் எந்தவித பதிலும் இல்லாததால் உடனடியாக முதலுதவிபிரிவை அழைத்துவிட்டு கதைவை உடைத்து உள்ளே போன காவல்துறை மயங்கி கிடந்த சாந்தியை அவசரமாக வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்து விட்டு சிவாவின் விபரங்களை பெற்று கொண்டுதேவையேற்பட்டால் அழைப்பதாக கூறி விட்டு ரவியின் வீட்டை சோதனை செய்து விட்டு ரவியை அழைத்து சென்று விட்டனர்.
வைத்திய சாலையில் சாந்தி மெல்ல மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்தாள் உடலை அசைக்க முடியவில்லை கையில் மூக்கில் என்று வயர்கள் பொருத்தபட்ட நிலையில் கட்டிலில் படுத்திருந்தாள்.மெல்ல அசயமுயன்றபோது அங்கு அவசரமாக நுளைந்த தாதியர் இருவர் அவரை அசைய வேண்டாம் என கூறிய போதுதான் தான் வைத்திய சாலையில் இருப்பதை சாந்தி உணர்ந்தாள்.
வந்த தாதியரில் ஒருவர் சாந்திக்கு கையில் ஒரு ஊசியை போட்டுவிட்டு. உங்களிடம் காவல்துறை விசாரணைக்கு வருவார்கள்.அத்துடன் உங்களுடன் வந்த உங்கள் நண்பர் ஒருவரும் வெளியில் காத்து நிக்கிறார்.அவரை அனுப்புகிறோம் என்று விட்டு போய் விட்டனர்.
சில நிமிடங்களில் சாந்தியின் அறையில் நுளைந்த சிவா சாந்தியை பார்த்படி நான் சரியா பயந்திட்டன் டொக்ரர் சொன்னார் நீங்கள் உடல் மன நிலையாலை சரியா பலவீன பட்டு இருக்கிறியள் அதுதான் மற்றபடி பெரிய பிரச்சனை இல்லையெண்டார் இப்பதான் நிம்மதியாயிருக்கு எண்றவாறு சாந்திக்கு நடந்தவற்றை விபரித்தான்.
அசையாமல் எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த சாந்தி .சிவா நீங்கள் ஏன் பொலிசை கூப்பிட்டனீங்கள்.இனி இது எங்கை போய் முடிய போகுதோ தெரியேல்லை.கடவுளே இனி நான் வீட்டு காரருக்கு என்ன சொல்ல மனிசனை பொலிசிலை பிடிச்சு குடுத்திட்டாள் எண்டு எல்லாசனமும் இனி கதைக்கபோகுது.இனி ரவி வேறை வெளியிலை வந்து பிரச்சனை வளர போகுதே ஒளிய குறையாது பேசாமல் விட்டிருந்தா நான் அப்பிடியே செத்து போயிருப்பன் ஒரு பிரச்சனையும் இல்லை .
கதிரை ஒண்ரை எடுத்து சாந்தியின் அருகில் போட்டு அமர்ந்த சிவா.
சாந்தி வடிவா கேளும் அப்போதை நான் பொலிசை கூப்பிடாட்டிலும் வேறை யாராவது கட்டாயம் கூப்பிட்டிருப்பான்.அதை விட இப்ப பொலிஸ் உங்களிட்டை வாக்கு மூலம் எடுக்க வருவினம் உங்களிற்கு பாசை பிரச்சனையெண்டா என்ரை பெயரை சொல்லுங்கோ நான் உதவி செய்யிறன் வாக்கு மூலம் குடுக்க.
ஆனால் நீங்கள் குடுக்கிற வாக்கு மூலத்தை பொறுத்துதான். ரவியை பற்றின முடிவுகளை பொலிஸ் எடுக்கும் இப்ப ரவிக்கு எதிரா சரியான சாட்சியள் பக்கத்து வீட்டு காரனின்ரை சாட்சி எண்டு கனக்க இருக்கு. நீங்கள் இன்னமும் இவ்வளவும் நடந்தா பிறகும் பத்தாம் பசலித்தனமா புருசனை காப்பாத்திறணெண்டு வெளிக்கிட்டா.அது நீங்களே உங்கடை தலையிலை மண்ணள்ளி போடுற மாதிரி முடியும்.
ரவி நாளைக்கு வெளியிலை வந்து இதை தான் தொடர போறான். அதாலை இது சரியான சந்தர்ப்பம் உங்கடை நன்மைக்கு சொல்லுறன் யோசிச்சு முடிவெடுங்கோ.
அதோடை இப்ப ரவிக்கு எல்லா ஆத்திரமும் என்னிலை வெளியிலை வந்தாலும் முதல் என்னோடைதான் கொழுவுவான். எனக்கு பிரச்:சனையில்லை நான் வேறை இடம் மாறி போடுவன்.பிறகு நீங்களாச்சு ரவியாச்சு கொங்ச நேரத்திலை பொலிஸ் வரும் ரவிக்கு எதிரா வாக்கு மூலம் குடுக்கிறதா இல்லையா எண்டதை யோசிச்சு முடிவெடுங்கோ நான் வெளியிலை நிக்கிறன்.
எண்றவாறு சிவா போய்விட சாந்திக்கு இந்த உலகத்திலிருந்து தன்னை மட்டும் தனியே வெளியே தூக்கி போட்டு விட்டதை போன்றதொரு உணர்வு.கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி சிவா சொல்லுறதும் நியாயமாக பட்டாலும் பின்னர் புருசனை யெயிலுக்கு அனுப்பினவள் எண்று தனது தாய் தந்தையரே தன்னுடன் கதைப்பார்களா??சரி அப்pடித்தான் செய்தாலும் அடுத்து தான் என்ன செய்வது ?? அல்லது பேசாமல் ரவியுடன் மீண்டும் சேர்ந்தாலும் வாழ ஏலாது அது நிச்சயம் ???பேசாமல் தற்கொலை செய்து விட்டால் எல்லாத்திற்கும்ஒரு முடிவு வருமா???
என்று யோசித்தவள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.
உறவுகளே சாந்தி எடுத்த முடிவு எப்படிப்பட்டது ரவிக்கு எதிரான முடிவா?? அல்லது ரவியுடன் சேர்ந்து வாழ்ந்தாளா?? அல்லது தற்கொலை செய்து கொண்டாளா?? உங்கள் ஊகம் என்ன ????
சிகரற் புகையை மேலே நேக்கி ஊதிவிட்டு மீதியை தரையயில் எறிந்துவிட்டு ரவி வாடி வா நான் நினைச்சனான் என்னடா இப்ப கொஞ்ச நாளா என்னை எதிர்த்து கதைக்கிறயெண்டு அந்த தைரியம் எங்கை இருந்து வந்ததெண்டு இப்ப தெரியிது நான் சந்தேக பட்டதும் சரியா தான் போச்சுது.
அதாலை தான் இண்டைக்கு வேலைக்கு பேகாகாமல் ஒளிச்சிருந்து பாத்தனான் என்ன நடக்குதெண்டு
அப்பிடி யென்னத்தையடி என்னட்டை இல்லாததை அவனிட்டை கண்டனி யென்றபடி சாந்தியை நெருங்கி அவளது தலை முடியை கொத்தாய் பிடித்து இழுத்து வந்து லிப்ற்றினுள் தள்ளினான்.
சிவா எதுவும் செய்ய முடியாதவனாக ரவி அவசரப்படாதை நீ நினைக்கிற மாதிரியில்லை..என்றவும் ரவி ஆவேசமாக சிவா பக்கம் திரும்பி டேய் சிவா பொத்து வாயை இது எனக்கும் மனிசிக்கும் உள்ள பிரச்சனை நீ தலையிடாதை எண்று கையை நீட்டி விரலை சுண்டியவாறு கூறிவிட்டு லிப்றினுள் நுளைந்தவன் அவனது சப்பாத்து கால் சாந்தியின் அடி வயிற்றில் இறங்கியது.
அய்யோ அம்மா என்ற சாந்தியின் அலறலுடன் லிப்ற் மூடிக் கொள்ள அதுதான் சமயமமென்று காத்திருந்த ரவியின் கால் கை எல்லாமே சாந்தியை பதம் பாத்தது. அடி வயிற்றை பொத்தி பிடித்தபடி அவன் அடிப்பதைகூட தடுக்க முடியாமல் சாந்தி லிப்றின் முலையில் சுருண்டு போய் இருந்துவிட்டாள்.
லிப்ற் அவர்கள் மாடியில் நின்றதும் ரவி சாந்தியை ஒரு கையால் தலை முடியை பிடித்து இழுத்து சென்று வீட்டை திறந்து உள்ளே தள்ளசாந்தி தட்டு தடுமாறி உள்ளே ஒடிப்போய் படுக்கையறையினுள் நுளைந்து கதைவை புூட்டி கொண்டு படுக்கையில் விழுந்தவளிள்கு தலை சுற்றி கொண்டு கண்கள் இருண்டு கொண்டு வருவதை போல இருந்தது அப்படியே மயங்கி போய் விட்டாள்.
கீழே ரவி சாந்தியை உதைந்ததையும் அவளது அலறலையும் பார்த்து திகைத்து போய் நின்ற சிவா சில கணங்களில் தன்னை சுதாகரித்தவன் தனது கை தொலை பேசியை எடுத்து காவல் துறையின் இலக்கங்களை அழுத்தி விபரத்தை கூறி விட்டு அந்த குடியிருப்பின் கீழேபேய் நின்று கொண்டான்.
; ரவியோ சாந்தியிடம் படுக்கையறையை திறக்கும்படி கத்தி கதைவை தட்டி உதைந்து பார்த்து விட்டு இரடி உனக்கு பிறகு வந்து மிச்சம் கவனிக்கிறன் என்று கத்திவிட்டு வீட்டை விட்டு வெளி யேறவும்.சில நிமிடங்களில் வந்த காவல் துறையினர் அங்கு வந்ததும் சிவா தன்னை அறிமுகபடுத்தி தான் தான் அழைத்ததாககூறி அவர்களுடன் ரவியின் வீட்டிற்கு அழைத்து சொல்லவும் நேரம் சரியாக இருந்தது.
வந்த காவல் துறையினர் ரவியை கைது செய்துவிட்டு சாந்தியின் படுக்கையறையை தட்டி தாங்கள் காவல்துறை வந்திருப்பதாகவும் பயப்படாமல் கதைவை திறக்கும்படி கூறியும் எந்தவித பதிலும் இல்லாததால் உடனடியாக முதலுதவிபிரிவை அழைத்துவிட்டு கதைவை உடைத்து உள்ளே போன காவல்துறை மயங்கி கிடந்த சாந்தியை அவசரமாக வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்து விட்டு சிவாவின் விபரங்களை பெற்று கொண்டுதேவையேற்பட்டால் அழைப்பதாக கூறி விட்டு ரவியின் வீட்டை சோதனை செய்து விட்டு ரவியை அழைத்து சென்று விட்டனர்.
வைத்திய சாலையில் சாந்தி மெல்ல மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்தாள் உடலை அசைக்க முடியவில்லை கையில் மூக்கில் என்று வயர்கள் பொருத்தபட்ட நிலையில் கட்டிலில் படுத்திருந்தாள்.மெல்ல அசயமுயன்றபோது அங்கு அவசரமாக நுளைந்த தாதியர் இருவர் அவரை அசைய வேண்டாம் என கூறிய போதுதான் தான் வைத்திய சாலையில் இருப்பதை சாந்தி உணர்ந்தாள்.
வந்த தாதியரில் ஒருவர் சாந்திக்கு கையில் ஒரு ஊசியை போட்டுவிட்டு. உங்களிடம் காவல்துறை விசாரணைக்கு வருவார்கள்.அத்துடன் உங்களுடன் வந்த உங்கள் நண்பர் ஒருவரும் வெளியில் காத்து நிக்கிறார்.அவரை அனுப்புகிறோம் என்று விட்டு போய் விட்டனர்.
சில நிமிடங்களில் சாந்தியின் அறையில் நுளைந்த சிவா சாந்தியை பார்த்படி நான் சரியா பயந்திட்டன் டொக்ரர் சொன்னார் நீங்கள் உடல் மன நிலையாலை சரியா பலவீன பட்டு இருக்கிறியள் அதுதான் மற்றபடி பெரிய பிரச்சனை இல்லையெண்டார் இப்பதான் நிம்மதியாயிருக்கு எண்றவாறு சாந்திக்கு நடந்தவற்றை விபரித்தான்.
அசையாமல் எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த சாந்தி .சிவா நீங்கள் ஏன் பொலிசை கூப்பிட்டனீங்கள்.இனி இது எங்கை போய் முடிய போகுதோ தெரியேல்லை.கடவுளே இனி நான் வீட்டு காரருக்கு என்ன சொல்ல மனிசனை பொலிசிலை பிடிச்சு குடுத்திட்டாள் எண்டு எல்லாசனமும் இனி கதைக்கபோகுது.இனி ரவி வேறை வெளியிலை வந்து பிரச்சனை வளர போகுதே ஒளிய குறையாது பேசாமல் விட்டிருந்தா நான் அப்பிடியே செத்து போயிருப்பன் ஒரு பிரச்சனையும் இல்லை .
கதிரை ஒண்ரை எடுத்து சாந்தியின் அருகில் போட்டு அமர்ந்த சிவா.
சாந்தி வடிவா கேளும் அப்போதை நான் பொலிசை கூப்பிடாட்டிலும் வேறை யாராவது கட்டாயம் கூப்பிட்டிருப்பான்.அதை விட இப்ப பொலிஸ் உங்களிட்டை வாக்கு மூலம் எடுக்க வருவினம் உங்களிற்கு பாசை பிரச்சனையெண்டா என்ரை பெயரை சொல்லுங்கோ நான் உதவி செய்யிறன் வாக்கு மூலம் குடுக்க.
ஆனால் நீங்கள் குடுக்கிற வாக்கு மூலத்தை பொறுத்துதான். ரவியை பற்றின முடிவுகளை பொலிஸ் எடுக்கும் இப்ப ரவிக்கு எதிரா சரியான சாட்சியள் பக்கத்து வீட்டு காரனின்ரை சாட்சி எண்டு கனக்க இருக்கு. நீங்கள் இன்னமும் இவ்வளவும் நடந்தா பிறகும் பத்தாம் பசலித்தனமா புருசனை காப்பாத்திறணெண்டு வெளிக்கிட்டா.அது நீங்களே உங்கடை தலையிலை மண்ணள்ளி போடுற மாதிரி முடியும்.
ரவி நாளைக்கு வெளியிலை வந்து இதை தான் தொடர போறான். அதாலை இது சரியான சந்தர்ப்பம் உங்கடை நன்மைக்கு சொல்லுறன் யோசிச்சு முடிவெடுங்கோ.
அதோடை இப்ப ரவிக்கு எல்லா ஆத்திரமும் என்னிலை வெளியிலை வந்தாலும் முதல் என்னோடைதான் கொழுவுவான். எனக்கு பிரச்:சனையில்லை நான் வேறை இடம் மாறி போடுவன்.பிறகு நீங்களாச்சு ரவியாச்சு கொங்ச நேரத்திலை பொலிஸ் வரும் ரவிக்கு எதிரா வாக்கு மூலம் குடுக்கிறதா இல்லையா எண்டதை யோசிச்சு முடிவெடுங்கோ நான் வெளியிலை நிக்கிறன்.
எண்றவாறு சிவா போய்விட சாந்திக்கு இந்த உலகத்திலிருந்து தன்னை மட்டும் தனியே வெளியே தூக்கி போட்டு விட்டதை போன்றதொரு உணர்வு.கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி சிவா சொல்லுறதும் நியாயமாக பட்டாலும் பின்னர் புருசனை யெயிலுக்கு அனுப்பினவள் எண்று தனது தாய் தந்தையரே தன்னுடன் கதைப்பார்களா??சரி அப்pடித்தான் செய்தாலும் அடுத்து தான் என்ன செய்வது ?? அல்லது பேசாமல் ரவியுடன் மீண்டும் சேர்ந்தாலும் வாழ ஏலாது அது நிச்சயம் ???பேசாமல் தற்கொலை செய்து விட்டால் எல்லாத்திற்கும்ஒரு முடிவு வருமா???
என்று யோசித்தவள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.
உறவுகளே சாந்தி எடுத்த முடிவு எப்படிப்பட்டது ரவிக்கு எதிரான முடிவா?? அல்லது ரவியுடன் சேர்ந்து வாழ்ந்தாளா?? அல்லது தற்கொலை செய்து கொண்டாளா?? உங்கள் ஊகம் என்ன ????
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

