01-11-2006, 11:04 AM
<b>சிறுமியை படையினர் இழுத்துச்சென்றனர் என
பரவிய செய்தியால் கோண்டாவிலில் குழப்பம்</b>
பாடசாலை மாணவி எனக்கருதப்படும் சிறுமி ஒருத்தி படையினர் நால்வர் பல வந்தமாக பற்றைக்காட்டுப் பகுதியை நோக்கி இழுத்துச் சென்றனர் என்ற தகவல் பரவிய தால் கோண்டாவில், திருநெல்வேலிப் பகுதி யில் நேற்றுப் பெரும் பரபரப்பும் களேபரமும் ஏற்பட்டன.
சம்பந்தப்பட்ட சிறுமியைத் தேடி பொது மக்கள் பற்றைக்காட்டை சல்லடைபோட்ட சமயம் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொதுமக்களைக் கலைத்தனர்.
இந்தச் சம்பவம் நேற்றுப்பிற்பகல் 1.30 மணியளவில் திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதிக்கும், கோண்டாவில் கிழக்கு பழைய ஆணித்தொழிற்சாலைப் பகுதிக்கும் இடைப் பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இச்சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது:
பச்சைநிறப் பஞ்சாபியுடன் சென்ற சிறுமி ஒருத்தியை இராணுவத்தினர் இழுத்துச்சென் றதை தாம் கண்டார் என அந்த வீதி வழியே பயணித்த ஒருவர் பொதுமக்களிடம் தெரி வித்திருக்கிறார்.
அவ்வீதி வழியே வந்த வாய்பேச முடி யாத மற்றொருவரும் இதனைக்கண்டு தாம் அந்த இராணுவத்தினருடன் முரண்பட்ட போது அவர்கள் தம்மைத் தாக்கினர் என்று கைகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவித் திருக்கின்றார்.
இதனால், அப்பகுதியில் பொது மக்கள் கூடிவிட்டனர்.
சிறுமியை இழுத்துச்சென்ற படையினர் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்து சடலத்தை ஒளித்திருக்கலாம் என்று பொதுமக்கள் கருதியதால் அங்கு பெரும் பதற்றநிலையும் குழப்பமும் ஏற்பட்டன.
யாழ். பிரதேச செயலாளர், யாழ். மேலதிக நீதவான், அரசாங்க அதிபர், மனித உரிமை கள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தி னர் எனப்பல தரப்பினருக்கும் அறிவிக்கப் பட்டது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வுக்கும் தெரிவிக்கப்பட்டதால் அவர்களும் அங்கு விரைந்தனர்.
இதனையடுத்து சிறுமியைத் தேடி அப் பிரதேசத்தில் உள்ள பற்றைக்காடுகள், பாழங் கிணறுகள் போன்ற பகுதிகள் எல்லாவற்றையும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் சல்லடை போட்டனர்.
அப்படித் தேடுதல் நடத்தியோர் அப்பகுதி யில் கோண்டாவில் சந்திக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமை ஒட்டிப்பின் புறத்தில் உள்ள பற்றைக்காட்டையும் துழாவினர். அச்சமயம் அந்த முகாமிலிருந்த படை யினர் துப்பாக்கிப்பிரயோகம்செய்து தேடுதல் நடத்திய பொதுமக்களை விரட்டிக்கலைத்தனர். அவ்வேளை அப்பகுதியில் கண்காணிப் புக் குழுவினரும் காணப்பட்டனர்.
திடீரெனத் தீர்க்கப்பட்ட வேட்டுக்களால் பீதியடைந்த மக்கள் பற்றைக்காட்டுப் பகுதியிலிருந்து விழுந்தடித்து ஓடித்தப்ப முயன்றனர். அப்போது பற்றை முள்ளுகளில் சிக்கியும், விழுந்தும் பலர் காயமடைந்தனர்.
இச்செய்தி அச்சுக்குப் போகும்வரை சம் பந்தப்பட்ட சிறுமி யார் என்பது குறித்தோ, அச்சிறுமி பற்றிய தடயங்களோ அங்கு கண்டு பிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப் பட்டது.
http://www.uthayan.com/pages/news/today/09.htm
பரவிய செய்தியால் கோண்டாவிலில் குழப்பம்</b>
பாடசாலை மாணவி எனக்கருதப்படும் சிறுமி ஒருத்தி படையினர் நால்வர் பல வந்தமாக பற்றைக்காட்டுப் பகுதியை நோக்கி இழுத்துச் சென்றனர் என்ற தகவல் பரவிய தால் கோண்டாவில், திருநெல்வேலிப் பகுதி யில் நேற்றுப் பெரும் பரபரப்பும் களேபரமும் ஏற்பட்டன.
சம்பந்தப்பட்ட சிறுமியைத் தேடி பொது மக்கள் பற்றைக்காட்டை சல்லடைபோட்ட சமயம் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொதுமக்களைக் கலைத்தனர்.
இந்தச் சம்பவம் நேற்றுப்பிற்பகல் 1.30 மணியளவில் திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதிக்கும், கோண்டாவில் கிழக்கு பழைய ஆணித்தொழிற்சாலைப் பகுதிக்கும் இடைப் பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இச்சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது:
பச்சைநிறப் பஞ்சாபியுடன் சென்ற சிறுமி ஒருத்தியை இராணுவத்தினர் இழுத்துச்சென் றதை தாம் கண்டார் என அந்த வீதி வழியே பயணித்த ஒருவர் பொதுமக்களிடம் தெரி வித்திருக்கிறார்.
அவ்வீதி வழியே வந்த வாய்பேச முடி யாத மற்றொருவரும் இதனைக்கண்டு தாம் அந்த இராணுவத்தினருடன் முரண்பட்ட போது அவர்கள் தம்மைத் தாக்கினர் என்று கைகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவித் திருக்கின்றார்.
இதனால், அப்பகுதியில் பொது மக்கள் கூடிவிட்டனர்.
சிறுமியை இழுத்துச்சென்ற படையினர் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்து சடலத்தை ஒளித்திருக்கலாம் என்று பொதுமக்கள் கருதியதால் அங்கு பெரும் பதற்றநிலையும் குழப்பமும் ஏற்பட்டன.
யாழ். பிரதேச செயலாளர், யாழ். மேலதிக நீதவான், அரசாங்க அதிபர், மனித உரிமை கள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தி னர் எனப்பல தரப்பினருக்கும் அறிவிக்கப் பட்டது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வுக்கும் தெரிவிக்கப்பட்டதால் அவர்களும் அங்கு விரைந்தனர்.
இதனையடுத்து சிறுமியைத் தேடி அப் பிரதேசத்தில் உள்ள பற்றைக்காடுகள், பாழங் கிணறுகள் போன்ற பகுதிகள் எல்லாவற்றையும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் சல்லடை போட்டனர்.
அப்படித் தேடுதல் நடத்தியோர் அப்பகுதி யில் கோண்டாவில் சந்திக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமை ஒட்டிப்பின் புறத்தில் உள்ள பற்றைக்காட்டையும் துழாவினர். அச்சமயம் அந்த முகாமிலிருந்த படை யினர் துப்பாக்கிப்பிரயோகம்செய்து தேடுதல் நடத்திய பொதுமக்களை விரட்டிக்கலைத்தனர். அவ்வேளை அப்பகுதியில் கண்காணிப் புக் குழுவினரும் காணப்பட்டனர்.
திடீரெனத் தீர்க்கப்பட்ட வேட்டுக்களால் பீதியடைந்த மக்கள் பற்றைக்காட்டுப் பகுதியிலிருந்து விழுந்தடித்து ஓடித்தப்ப முயன்றனர். அப்போது பற்றை முள்ளுகளில் சிக்கியும், விழுந்தும் பலர் காயமடைந்தனர்.
இச்செய்தி அச்சுக்குப் போகும்வரை சம் பந்தப்பட்ட சிறுமி யார் என்பது குறித்தோ, அச்சிறுமி பற்றிய தடயங்களோ அங்கு கண்டு பிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப் பட்டது.
http://www.uthayan.com/pages/news/today/09.htm
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

