Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு
#1
இன்று விடுதலை வேண்டிப் போராடுகின்ற இனக்குழுமங்களாக ஈழத் தமிழ் மக்களும் காஸ்மீர மக்களும் இனம் காணப் பட்டிருக்கின்றனர். சுதந்திர இந்தியாவின் இறையாண்மைக்குள் அடங்கிவிட ஒப்பாத எழுச்சியுடன் போராடுகின்ற பல இனக்குழுமங்களுள் காஸ்மீரம் நீண்ட கால வரலாறும் தொடர்ச்சியான வெளிப்பாடும் கொண்டது. அதே போல இலங்கையின் இறையாண்மைக்குள் அடங்கிவிட ஒப்பாத எழுச்சியுடன் போராடுகின்ற வரலாறு ஈழத்தமிழ் மக்களுக்கும் உண்டு.

காஸ்மீரத்தின் சுதந்திரம் , பாகிஸ்தானிய படைகள் காஸ்மீரத்துள் புகுந்தபோதும் மன்னனின் சூழ்நிலை இந்தியாவை வலிந்து அழைக்கவேண்டியதாகிப் போனபோதும் பறிபோயிற்று. இன்று வரை தொடரும் போராட்டம் இரத்தமும் சதையுமாக குதறிப் போடும் அவலங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் ஈழத்தின் சுதந்திரம் 1505 இல் போத்துக்கேயர் கடற்கரையோரம் கால் வைத்தபோது பறிபோயிற்று. காலனித்துவ ஆட்சியாளர்களின் ஆட்சி முறை வசதிக்காக ஒன்று சேர்ந்து இலங்கையானபோது அதன் எல்லைகளும் காணாமற்போயிற்று. தொடர்ந்து ஐந்து நூற்றாண்டு கால காலனித்துவ ஆட்சியின் முடிவிலும் அரசியல் தொலைநோக்கற்ற தமிழ் அரசியல் வாதிகளின் முடிவுகளால் சிங்களப் பேரின வாதிகளின் கால்களுக்கிடையில் சிதைந்து கொண்டிருக்கின்றது.

இன்றளவும் உலக வல்லரசுகளினதும் பிராந்திய வல்லரசுகளினதும் விருப்பு வெறுப்புக்கேற்ப பந்தாடப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

காஸ்மீரத்தில் இன்று பாதுகாப்பிற்கெனச் சென்ற இந்தியப் படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் ? ஒருவேளை காஸ்மீரம் இந்தியாவின் உதவியை நாடியிராவிட்டால் பாகிஸ்தானின் பஞ்சாப் போன்றோ இல்லை பலூசிஸ்தான் போன்றோ பாகிஸ்தானின் ஒரு பகுதியாக வறுமையில் வாடிக்கொண்டிருக்கக் கூடும் என்று கருத்துக் கூறுபவர்களும் இருக்கின்றார்கள். ஆனாலும் இப்பொழுதும் அதைவிடச் சிறந்த முறையில் தானா அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ?

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமையில் இருந்து தங்களை காத்தருளும் இரட்சகர்கள் என எதிர்பார்த்திருந்த தமிழ் ஈழ மக்களுக்கு இந்திய இராணுவம் கொடுத்த பரிசுதான் என்ன ? அவர்கள் இராணுவ வாகனங்களின் சங்கிலிப் பாதங்களுள் அரைபட்டு இரத்தமும் சதையுமாக சிதைந்து போனதைவிட வேறு என்ன பரிசு கிடைத்தது.

இந்தியா என்பதையும் விட தாய்வழிப் பந்தம் வேரடி மண் என்று காலாதி காலம் நம்பியிருந்த தமிழக மக்களும் தலைவர்களும் கூட மெளனமாகிப் போயிருந்தார்களே ? இன்று வரை தனது பிராந்திய நன்மைகள் என்ற குறுகிய வட்டத்துள் நின்றே ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பார்ப்பதைத் தவிர இந்தியா என்ன செய்து கொண்டிருக்கின்றது ?

ஆறரைகோடி தமிழ் நாட்டவர்களின் உறவுகளில் ஏற்படாத கரிசனை சிங்களவர்களின் பால் ஏற்படுவதற்கு இந்தியா இதைவிட வலுவான என்ன காரணத்தைக் கூறுக்கூடும்.

முன்னை நாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தியின் மரணம் தான் காரணம் என்று கூறிக்கொள்ள முனையலாம். அப்படி என்றால் சமாதானப் படைகள் ஈழத் தமிழ் மக்களை வகைதொகையின்றிக் கொன்று குவித்ததற்கு என்ன காரணம் இருக்கமுடியும்.

இரண்டு பெரும் போர்களையும் தீவிரவாதத்திதின் தாக்குதல்களையும் இந்தியாவிற்குப் பரிசளித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுடன் எப்படி நேசக் கரம் நீட்டுகின்றார்கள். தீவிரவாதம் என்னும் பாஷை யில் பேசிக்கொண்டிருக்கும் பா கிஸ்தா னை விட தமிழ் ஈழம் எப்படி இந்தியாவிற்கு ஆபத்தானதாய் இருக்கமுடியும். இலங்கயின் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய நேரடி வாரிசுகளின் குடியுரிமையைப் பறித்ததிலிருந்து இரஜீவ் காந்தியை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானபின் துப்பாக்கியால் அடித்தது வரை செய்தது சிங்களவர்கள் அல்லவா ? அவர்களுடன் வராத கோபம் ஈழத்தமிழ் மக்கள் மேல் வருவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும். இந்தியப் பகிஷ்கரிப்பு என்ற பெயரில் இந்தியப் பொருட்களைத் தீயிலிட்டு எரித்த கட்சிகளுடன் கூடிக் குலவுவதில் இந்தியாவிற்கும் அதன் அரசியல் கட்சிகளுக்கும் எந்த வெட்கமுமில்லை.

ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஒரு சில தமிழ் உணர்வாளர்கள் ஈழத்தமிழ் ழ் மக்கள் சார்பாக கருத்து சொல்வதை மட்டும் கொச்சைப் படுத்துவதில் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் வசதியான வாழ்வுடையவர்கள். மலையகத்தமிழர்கள் தான் இந்தியாவுடன் தொடர்புள்ளவர்கள் என்ற கருத்தும் முன் வைக்கப் படுகின்றது. அப்படி ஸ்மாட் ஆக சிந்திக்கும் படியும் கருத்து விதைக்கப் படுகின்றது. தமிழ் ஈழத்தின் சுதந்திரப் போராட்டம் முன்னர் எப்படியிருந்த போதும் இப்போது அனைத்துத் தமிழ் பேசும் மக்களுக்கான பொதுவான போராட்டமாக பரிணமித்துள்ளதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் தவறுகள் ஏற்படுவதும் பின்னர் திருத்தப் படுவதும் இயல்பானதே.

இதற்காகவே சொல்லி வைத்ததுபோல் போராட்டத்தின் முன்னோடிகளாக இருந்து கருத்து மோதல்களால் மரணித்த பத்மநாபா, சிறீசபாரட்ணம் போன்றோரின் மரணங்கள் சுட்டிக் காட்டப் படுகின்றன. மிகவும் துக்கரமான தவறுகள் இவை என்றாலும் போராட்டத்தின் ஆரம்பகால தவறுகள் இவை என்பதற்கப்பால் தமிழகத்தமிழர்களின் உணர்வுகளை வேறு எவ்வாறு பாதிக்கக் கூடும்.

நாளாந்தம் பறிக்கப்படும் உயிர்களும் சித்திரவதை செய்யப் பட்டு சீரழிக்கப் படும் அபலைகளும் உங்களுக்கு முக்கியமாகப் படவில்லையா?

இவையெல்லாம் இந்திய மேலாண்மை அரசின் போக்கை கேள்வி கேட்கவோ எதிர்ப்புக் காட்டவோ தமிழக மக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் போதுமான காரணங்களாக இல்லையா? ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டதி ற்கான எதிர்ப்பிற்கு இந்தியாவின் பிராந்திய வல்லரசுப் பார்வை தவிர்ந்த வேறு ஏதாவது காரணங்கள் இருக்க முடியுமா ?

இன்று உலக நாடுகளுடன் இந்தியாவும் ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்தின் போக்கை பல நோக்கங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்களின் அபிலாசைகளின் போக்கில் வளைத்தெடுக்கும் நோக்கிலேயே என்பதை ஒவ்வொரு ஈழத்தமிழ் மகனும் நன்கு புரிந்தே இருக்கின்றார்கள். உலக நாடுகள் எவற்றையும் விட இந்தியாவை குறிப்பாக தமிழ் நாட்டு மக்களின் ஆதரவையும் அனுசரணையையும் பெரிதாக எதிர்பார்க்கின்றார்கள். காரணம் பாரம்பரிய தொப்பூழ்கொடியுறவு தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்.

ஈழத்தமிழ் மக்களைப் போலவே காஸ்மீர மக்களும் இந்தியாவினதும் பாகிஸ்தானதும் உலக வல்லரசுகளினதும் பகடைக் காய்களாக இருப்பதைத் தவிர போராட்ட வடிவத்தில் எந்த ஒற்றுமையும் இல்லை. நோக்கமும் வேற் வேறாகவே காணப்படுகின்றன என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும் ?

நன்றி>
http://ilanthirayan.blogspot.com/2006/01/b...3099560650.html
.

.
Reply


Messages In This Thread
தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு - by Birundan - 01-10-2006, 12:25 PM
[No subject] - by Luckyluke - 01-12-2006, 07:36 AM
[No subject] - by Birundan - 01-12-2006, 11:58 AM
[No subject] - by Luckyluke - 01-12-2006, 12:19 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 12:29 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 12:36 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 12:40 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 12:41 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 12:46 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 12:55 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 01:02 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 01:12 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 01:15 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 01:19 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 01:24 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 01:28 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 01:38 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 01:41 PM
[No subject] - by sathiri - 01-12-2006, 01:41 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 01:43 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 01:43 PM
[No subject] - by sathiri - 01-12-2006, 01:49 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 01:51 PM
[No subject] - by Luckyluke - 01-12-2006, 01:52 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 01:53 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 01:54 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 01:56 PM
[No subject] - by Luckyluke - 01-12-2006, 01:57 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 01:59 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 02:00 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 02:02 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 02:02 PM
[No subject] - by Luckyluke - 01-12-2006, 02:03 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 02:04 PM
[No subject] - by Luckyluke - 01-12-2006, 02:05 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 02:08 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 02:09 PM
[No subject] - by Birundan - 01-12-2006, 02:12 PM
[No subject] - by rajathiraja - 01-12-2006, 02:25 PM
[No subject] - by Raguvaran - 01-13-2006, 03:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)