01-09-2006, 12:02 PM
பாதுகாப்பு வழங்க மறுத்த படையினர் இன்று பேச்சுக்கழைப்பது வேடிக்கை புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ். எழிலன்
தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல எனக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறிய படைத்தரப்பினர்இ டோராபடகு வெடித்து சிதறியதும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது வேடிக்கையானது என்று விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ். எழிலன் தெரிவித்தார்.நாளை செவ்வாய்க்கிழமை மூதூர் கிழக்கில் நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை கடற்கரைச் சேனை தேசிய எழுச்சிப் பேரவை பணிமனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் கூறியதாவது:
கடற்படை டோரா படகு வெடித்து சிதறி 13 கடற்படையினர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இராணுவ கடற்படைஇ பொலிஸ் அதிகாரிகள் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும்இ இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு வழங்கத் தயாராகவுள்ளதாகவும் கண்காணிப்புக் குழுவினர் எனக்கு அறிவித்துள்ளனர். அண்மையில் மூதூரில் தமிழ்இ முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைக்க இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நான் செல்ல முயன்ற போது எனக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்ற படையினர் இன்று என்னை பேச்சுக்கழைப்பது வேடிக்கையானது. திருமலை கடற்பரப்பில் கடற்படையினரின் டோரா படகு வெடித்து சிதறியதாகவும்இ 15 பேர் காணாமல் போனதாகவும் ஊடகங்கள் வாயிலாகத் தான் நான் அறிந்து கொண்டேன். இன்று திருகோணமலை மாவட்டம் பற்றிய செய்தி ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்து வருகின்றது. ஊடகங்களின் கவனம்இ தற்பொழுது திருமலையின் பக்கம் திரும்பியுள்ளது. கடற்படையினரால் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதனை அடுத்து திருமலை மாவட்டம் ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றது.
எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழீழத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய எழுச்சி விழா பிரகடன நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறவிருக்கின்றது. இதில் தமிழீழ மக்கள் உலக நாடுகளுக்கு பல செய்திகளைச் சொல்ல விருக்கின்றனர் என்பதை இந்த ஏற்பாட்டுக் குழுவில் முக்கிய பிரதிநிதிகள்மூலமும்இ பெருந்திரளாக வந்திருப்பதைக் காண முடிகின்றது.
http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&
தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்கு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல எனக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறிய படைத்தரப்பினர்இ டோராபடகு வெடித்து சிதறியதும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது வேடிக்கையானது என்று விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எஸ். எழிலன் தெரிவித்தார்.நாளை செவ்வாய்க்கிழமை மூதூர் கிழக்கில் நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை கடற்கரைச் சேனை தேசிய எழுச்சிப் பேரவை பணிமனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் கூறியதாவது:
கடற்படை டோரா படகு வெடித்து சிதறி 13 கடற்படையினர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இராணுவ கடற்படைஇ பொலிஸ் அதிகாரிகள் என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும்இ இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு வழங்கத் தயாராகவுள்ளதாகவும் கண்காணிப்புக் குழுவினர் எனக்கு அறிவித்துள்ளனர். அண்மையில் மூதூரில் தமிழ்இ முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைக்க இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நான் செல்ல முயன்ற போது எனக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்ற படையினர் இன்று என்னை பேச்சுக்கழைப்பது வேடிக்கையானது. திருமலை கடற்பரப்பில் கடற்படையினரின் டோரா படகு வெடித்து சிதறியதாகவும்இ 15 பேர் காணாமல் போனதாகவும் ஊடகங்கள் வாயிலாகத் தான் நான் அறிந்து கொண்டேன். இன்று திருகோணமலை மாவட்டம் பற்றிய செய்தி ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்து வருகின்றது. ஊடகங்களின் கவனம்இ தற்பொழுது திருமலையின் பக்கம் திரும்பியுள்ளது. கடற்படையினரால் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதனை அடுத்து திருமலை மாவட்டம் ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றது.
எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழீழத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேசிய எழுச்சி விழா பிரகடன நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறவிருக்கின்றது. இதில் தமிழீழ மக்கள் உலக நாடுகளுக்கு பல செய்திகளைச் சொல்ல விருக்கின்றனர் என்பதை இந்த ஏற்பாட்டுக் குழுவில் முக்கிய பிரதிநிதிகள்மூலமும்இ பெருந்திரளாக வந்திருப்பதைக் காண முடிகின்றது.
http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

