01-09-2006, 08:20 AM
<b>பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுப் படியே திருமலையில் ஐந்து மாணவர்களும் படுகொலை செய்யப்பட்டனர் - சண்டே ரைம்ஸ் திடுக்கிடும் தகவல் </b>
பாதுகாப்பு அமைச்சின் அலோசகரும், முன்னாள் காவற்துறை மா அதிபருமான ஒருவரின் உத்தரவின் பெயரில் திருமலைக்கு அனுப்பப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரே கடந்த திங்கட்கிழமை ஐந்து தமிழ் மாணவர்களை சுட்டுப் படுகொலை செய்ததாக 'சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.சண்டே ரைம்ஸின் நேற்றைய பதிப்பில் 'பாதுகாப்பு நிலவரம்" பகுதியிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸவுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இந்தியாவுககு பயணம் மேற்கொண்டிருந்த வேளை இந்த குழுவை இந்த குறிப்பிட்ட அதிகாரி திருகோணமலைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற மர்மம் தொடர்கின்றது. இராணுவமும் பாதுகாப்பு தரப்பும் தெரிவித்திருக்கும் விடயங்களுக்கும் ஏனைய சகல தரப்பினர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றது.
எனினும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது என்பதில் எந்தவித ஐயமும் இல்லாமல் நிரூபிக்கப்பட்டள்ளது. இதை விட தற்போது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருகோணமலையில் உள்ள உயர் இராணுவ அதிகாரிகளுக்டகும் தெரியாமல் அங்கு 24 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படை கொண்ட குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழுவிற்கு முதன்மை காவற்துறை அதிகாரி தலைமை வகிக்கின்றார். பாதுகாப்பு அமைச்சின் ஆலோகரும், முன்னாள் காவற்துறை மா அதிபருமான ஒருவரே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத சக்திகளை கடுமையான முறையில் கையாளுமாறு இவர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ அரசு தலைவருடன் இந்தியாவுக்கச் சென்றிருந்தவேளை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என எச்சரிந்திருந்தார். குறிப்பிட்ட இந்த அதிகாரியை அவரின் செயற்பாடுகள் குறித்து தெரிந்து ஆலோசனை வழங்குவதோடு அவர் பணிகளை நிறுத்திக் கொள்ளுமாறும் அவர் எச்சரித்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும்;, அந்த முன்னாள் காவல்துறை அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட அலோசகர் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் சர்ச்சைககுரிய விதத்தில் பேட்டிகள் அளித்துவருவதும், கவனத்தில் எடுக்கப்பட்டது.
இந்த பேட்டிகளின் போது இவரால் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமாகவும், அதே நேரம் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளை பெறாத முறையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளனஎனவும் சண்டே ரைம்ஸின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டள்ளது.
http://www.sankathi.net/
பாதுகாப்பு அமைச்சின் அலோசகரும், முன்னாள் காவற்துறை மா அதிபருமான ஒருவரின் உத்தரவின் பெயரில் திருமலைக்கு அனுப்பப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரே கடந்த திங்கட்கிழமை ஐந்து தமிழ் மாணவர்களை சுட்டுப் படுகொலை செய்ததாக 'சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.சண்டே ரைம்ஸின் நேற்றைய பதிப்பில் 'பாதுகாப்பு நிலவரம்" பகுதியிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸவுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இந்தியாவுககு பயணம் மேற்கொண்டிருந்த வேளை இந்த குழுவை இந்த குறிப்பிட்ட அதிகாரி திருகோணமலைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற மர்மம் தொடர்கின்றது. இராணுவமும் பாதுகாப்பு தரப்பும் தெரிவித்திருக்கும் விடயங்களுக்கும் ஏனைய சகல தரப்பினர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றது.
எனினும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது என்பதில் எந்தவித ஐயமும் இல்லாமல் நிரூபிக்கப்பட்டள்ளது. இதை விட தற்போது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருகோணமலையில் உள்ள உயர் இராணுவ அதிகாரிகளுக்டகும் தெரியாமல் அங்கு 24 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படை கொண்ட குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழுவிற்கு முதன்மை காவற்துறை அதிகாரி தலைமை வகிக்கின்றார். பாதுகாப்பு அமைச்சின் ஆலோகரும், முன்னாள் காவற்துறை மா அதிபருமான ஒருவரே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத சக்திகளை கடுமையான முறையில் கையாளுமாறு இவர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ அரசு தலைவருடன் இந்தியாவுக்கச் சென்றிருந்தவேளை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என எச்சரிந்திருந்தார். குறிப்பிட்ட இந்த அதிகாரியை அவரின் செயற்பாடுகள் குறித்து தெரிந்து ஆலோசனை வழங்குவதோடு அவர் பணிகளை நிறுத்திக் கொள்ளுமாறும் அவர் எச்சரித்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும்;, அந்த முன்னாள் காவல்துறை அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட அலோசகர் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் சர்ச்சைககுரிய விதத்தில் பேட்டிகள் அளித்துவருவதும், கவனத்தில் எடுக்கப்பட்டது.
இந்த பேட்டிகளின் போது இவரால் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமாகவும், அதே நேரம் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளை பெறாத முறையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளனஎனவும் சண்டே ரைம்ஸின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டள்ளது.
http://www.sankathi.net/
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

