01-09-2006, 07:25 AM
வரிப்புலி ஊர்வலம்!
-----------------
ஆடிவரும் கடலையே - சொல்லு
எங்கள் தேச ஆளூமை கொண்டவனை -எங்கே
ஒளித்து வைத்தாய்?
காற்றே வா மெல்ல எம் கதவு திற-
பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும்
சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை-
எங்காவது பார்த்தீயா? சொல்லி போ!
சிங்களத்தின் மடியில் ஒரு இடியாய் வெடித்தவன் -
சிறுத்தை இனத்தின் தலையில் மணிமுடியாய் உயிர்த்தவன்
படை நடத்தும் வீரர்கெல்லாம் ஒரு பாடமாய் இருந்தவன்
அவனை வெல்வதற்கு யார்க்கும் ஒரு வழியுமில்லை-
விடை சொல்லாமல் போனானே அதுதான் -
ஏனென்று இன்னும் தெரியவில்லை!
எம்மை அடித்தவனை அடியோடு எரித்த பெரு நெருப்பு-
எங்கள் அண்ணன் அணைத்து வளர்த்த அக்கினி குஞ்சு-
கிட்டண்ணா - தமிழன் இழந்துவிட்ட இன்னொரு சகாப்தம்!
கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-
குலை நடுங்க வைத்தவனே-
வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!
வாயேன் ..வந்து படை நடத்து...
வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!
-----------------
ஆடிவரும் கடலையே - சொல்லு
எங்கள் தேச ஆளூமை கொண்டவனை -எங்கே
ஒளித்து வைத்தாய்?
காற்றே வா மெல்ல எம் கதவு திற-
பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும்
சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை-
எங்காவது பார்த்தீயா? சொல்லி போ!
சிங்களத்தின் மடியில் ஒரு இடியாய் வெடித்தவன் -
சிறுத்தை இனத்தின் தலையில் மணிமுடியாய் உயிர்த்தவன்
படை நடத்தும் வீரர்கெல்லாம் ஒரு பாடமாய் இருந்தவன்
அவனை வெல்வதற்கு யார்க்கும் ஒரு வழியுமில்லை-
விடை சொல்லாமல் போனானே அதுதான் -
ஏனென்று இன்னும் தெரியவில்லை!
எம்மை அடித்தவனை அடியோடு எரித்த பெரு நெருப்பு-
எங்கள் அண்ணன் அணைத்து வளர்த்த அக்கினி குஞ்சு-
கிட்டண்ணா - தமிழன் இழந்துவிட்ட இன்னொரு சகாப்தம்!
கொஞ்ச துப்பாக்கிகளுடன் நாமிருந்த நாளில் பகையை-
குலை நடுங்க வைத்தவனே-
வந்து பார் இப்போ - வரிசை வரிசையாய் வரி புலி ஊர்வலம்!
வாயேன் ..வந்து படை நடத்து...
வாசலெல்லாம் நிறைகுடம் வைத்து உன் பாதம் கழுவுவோம்!
-!
!
!

