Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருமலையில் தமிழ் தேசியப்பிரகடனம்
#2
திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினர் வீடுகளில் வெள்ளைக் கொடி ஏற்ற வேண்டும் என்று அச்சுறுத்தி வருவதாக மக்கள் உரிமை அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.


டோரா படகுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா கடற்படையினருக்கு இரங்கல் தெரிவித்து இந்த வெள்ளைக் கொடிகளை ஏற்றுமாறு சிறிலங்கா கடற்படை கட்டளையிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதலையடுத்து திருகோணமலையில் மேலதிக படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூழ்கடிக்கப்பட்ட டோரா படகின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் லெப்டினண்ட் கொமாண்டர் கமல் வனரட்ன என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இரு கடற்படையினர் திருகோணமலை கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ். தாக்குதல்களில் சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்ட போதும் வீடுகளில் வெள்ளைக் கொடி ஏற்றி இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தினர் கட்டளை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது

http://www.eelampage.com/?cn=23230
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 01-09-2006, 06:32 AM
[No subject] - by Vaanampaadi - 01-09-2006, 11:57 AM
[No subject] - by Vaanampaadi - 01-09-2006, 12:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)