01-08-2006, 11:07 PM
திருமலையில் செவ்வாயன்று நடைபெறவுள்ள தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
Written by Ellalan Monday, 09 January 2006
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பொது விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி விழாவுக்கான எற்பாடுகள் யாவும் புூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் திருகோணமலையில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில் இந்த தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் வேறு, தமிழீழ விடுதலைப் புலிகள் வேறு அல்ல என்பதனை சர்வதேசத்தின் பார்வைக்கு உரைத்துக் காட்டுமுகமாகவும், இதேவேளை தமிழ் மக்களின் உணர்வுகளை இனிவரும் காலங்களிலாவது சர்வதேச சமுகம் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும், பாரபட்சமின்றி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்பன தொடர்பாக சிறீலங்கா அரசுக்கும், சர்வதேச சமுகத்திற்கும் உணர்த்தும் வகையிலும் இந்த முக்கியமான கட்டத்தில் இந்த எழுச்சி பிரகடன நிகழ்வு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சங்கதி
Written by Ellalan Monday, 09 January 2006
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பொது விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கும் தமிழ்த் தேசிய எழுச்சி விழாவுக்கான எற்பாடுகள் யாவும் புூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ள இந்த வேளையில் திருகோணமலையில் சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில் இந்த தமிழ்த் தேசியப்பிரகடன எழுச்சி விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று என தமிழ்த் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் வேறு, தமிழீழ விடுதலைப் புலிகள் வேறு அல்ல என்பதனை சர்வதேசத்தின் பார்வைக்கு உரைத்துக் காட்டுமுகமாகவும், இதேவேளை தமிழ் மக்களின் உணர்வுகளை இனிவரும் காலங்களிலாவது சர்வதேச சமுகம் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும், பாரபட்சமின்றி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்பன தொடர்பாக சிறீலங்கா அரசுக்கும், சர்வதேச சமுகத்திற்கும் உணர்த்தும் வகையிலும் இந்த முக்கியமான கட்டத்தில் இந்த எழுச்சி பிரகடன நிகழ்வு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சங்கதி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

