Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத் தமிழருக்காக தமிழகத்தின் நிலைப்பாடு மாறியது எப்படி?
#3
முக்கியமாக வர இருக்கிற தேர்தலில் பல வன்முறைகள் அரங்கேற்றப்படலாம் அதற்கு ஈழ ஆதரவு சக்த்திகள் மேல் பழி போடவும் முயற்சிகள் நடை பெறும். 1980 களில் ஏமாற்றப்பட்ட மாதிரி இந்த முறையும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாறுவதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் குறைவு.

இந்தியாவில் நடந்து வரும் பொருளாதார வழர்ச்சி புதிய தொழிநுட்பங்களினால் நடந்துவரும் தொடர்பாடல் (ஏகபோக உரிமையற்றுப் போகும்) புரட்சி தமிழ்நாட்டுச் சமூகத்தை விளிப்புணர்வுள்ள அதிகரித்த அரசியல் வெகுஜன பலம் கொண்ட சமூகமாக்கி வருகிறது. இவர்கள் காலம் காலமாக பொருளாதாரம் ஊடகத்துறை கல்வி வியாபாரம் வணிகங்களை கட்டுப்படுத்தி வந்த சிறுபான்மை மேலாண்மை வாத ஆழும் வர்க்கத்தின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை விடுவித்து வருகிறார்கள். நடுத்தர வர்க்க நிலையை அடைய கனவு காணும் எனைய மக்களும் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, தமது வாழ்வுநிலையை மேன்படுத்துவது தான் முக்கியமாக இருக்கிறது. இதுவரை காலமும் நம்பி வந்த அரசியல் தலமைகளை அவர்கள் எதிர்காலத்தில் நம்புவார்கள் என்பது சந்தேகமே. அங்கு மென்மையான அரசியல் புரட்சி நடக்கிறது. மக்களை சுறண்டி வந்த political dynasty களும் ஒதுக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இது பொருளாதாரம் மற்றும் தொடர்பாடல் வளர்ச்சி பெறும் எல்லாச் சமூகங்களிலும் நாடுகளில் வழமையாக நடைபெறும் ஒன்று.
Reply


Messages In This Thread
[No subject] - by cannon - 01-08-2006, 11:31 AM
[No subject] - by kurukaalapoovan - 01-08-2006, 02:01 PM
[No subject] - by தூயவன் - 01-08-2006, 02:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)