01-07-2006, 02:32 PM
cannon Wrote:நன்றி பிருந்தன் இணைப்பிற்கு!
* இந்திய மாநில தேர்தல்கள் நெருங்குகின்றது!
* அதைவிட தமிழ்நாட்டு பிரதிநிதிகளின் துணையின்றி ஆட்சியை தொடரமுடியாத மத்திய அரசு!
* தமிழ்நாட்டில் கட்சி பேதமின்றி ஆரம்பித்திருக்கும் ஈழ்மக்களுக்கான ஆதரவலை!
* இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்/கொலைக்கலாச்சாரம் பகிரங்கமாக ஆதரிக்க முடியாத அளவிற்கு சென்றுவிட்டமை!
... போன்ற சில காரணங்களுக்காக இந்திய ஆளும்வர்க்கம் கொஞ்சம் அடக்கி வாசிக்க முற்படுவதாகவே நினைக்கிறேன். மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கத்தொடங்கியுள்ள அரசியல் குரல்களின் வல்லமையைப் பொறுத்தே மத்தியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது! இதுவரை எமக்காக ஒலித்த "நெடுமாறன், வைகோ, திருமாவளவன், ராமதாஸ், ..." போன்றோர்களுடன் "கலைஞர்" இணைந்திருப்பது ஒரு பாரிய மாற்றத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதைவிட அண்மையில் சூழ்நிலைகளாலோ அல்லது நிஜமாகவோ தமிழக முதலமைச்சர், இலங்கை ஜனாதிபதியை சந்திக்க மறுத்த நிகழ்ச்சியும், மத்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தலாம்.
<b>
எங்கு, யாரிடமாவது மாற்றங்கள் ஏற்படுகிறதோ இல்லையோ, எம் பலமே எதையும், எப்பவும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.</b>
இது தான் எனது கருத்தும். எந்த நாடுமே தன் நலனுக்கு பின தான் எம்மைப் பற்றி சிந்திக்கும். ஆகவே நாமே எம்மை காத்துக் கொள்ளவேண்டியது தேவையாகும்
[size=14] ' '

