12-31-2003, 05:16 PM
இதில என்ன அந்நியப்படக்கிடக்குது....இப்பத்தப் பெடி பெட்டைக்கு தாத்தா பாட்டி என்றால் எங்க தெரியும் அப்படிக் கண்டாக் கூட ஏதோ அதிசயப் பிறவிகளைப் பார்க்கிறது போலத்தான் பாக்கினம்....அவைக்கு உண்மையான உலகம் காட்டப்படுவதில்லை...போலியும் நாகரீகமும் என்று வேடதாரி உலகம் காட்டப்படுகுது...எப்படி சினிமா இருக்குதோ அது போலத்தான் உலகம் இன்று ஒரு பெரிய சினிமாத் துறையாய் இயங்கிக் கொண்டிருக்குது....ஆனால் ஒரு பக்கத்தால் நிஜமும் ஒவ்வொரு மனிதனையும் பின் தொடர்கிறது என்பது உண்மை...இன்றைய இளைய சந்ததி 'சற்' என்று மசாலாக் கதை பறைவதிலேயே காலம் கழிக்கிறது...போலிகளுக்குப் பின்னால் விளக்கமின்றி விழுந்தடிக்கிறது....காரணம் தாத்தா பாட்டி அனுபவங்களின் உரைப்புக்கள் இன்று காதுகளில் விழுவதே இல்லை...இன்றைய பெற்றோரும் பிள்ளைகளோடு ஒட்டியவர்களாக.... ஆனால் இன்னும் 25 - 35 வருடங்களின் பின் இதற்கான அறுவடைகளை நாம் கண்ணால் காணும் போது மிகவும் கன்றாவியாக இருக்கும்....நிச்சயம் அம்மா தினமும் அப்பா தினமும் ஏன் வந்ததென்ற உண்மை உரைக்கும்.....உணரப்படும்....! அதை மேற்குலகில் அன்புக்காய் பெற்ற குழந்தைகளின், பேரக்குழந்தைகளின் பாசத்துக்காய் ஏங்கும் தாத்தா பாட்டியிடமும் நன்கு அவதானிக்கலாம்....! செயற்கையான வசதியும் தொழில்நுட்பமும் மனிதனின் இயற்கைக்கான வாழ்வியல் வரலாற்றை முற்றாக மாற்றிவிட முடியாது....மனிதன் என்றும் இயற்கையால் ஆழப்படுகிறான் ஆழப்படுவான்.....!
வாழ்க்கை என்பது சுழலும் சக்கரமடா தம்பி எதுவும் நிச்சயமில்லாததொன்று....சுழலும் போதே நல்லவற்றை பகுத்து உள்வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது சுழற்சி வேகம் குறையும் போது துன்பம் மிகும்.....நாளை என்று காத்திராமல் துள்ளும் இளமைக்குள் கொஞ்சம் நிதானம் காத்து மெய்யறிவையும் புகுத்திப் பார்...உலகம் நிதர்சனமாய்த் தெரியும்... புத்தனும் காந்தியும் தேவையில்லை (அப்படி இரண்டு பேர் இருக்கிறதே பல இளசுகளுக்குத் தெரியாது... அவர்கள் மன்னிக்க....!)நீயே உன்னுள் அனைத்தையும் உணர்வாய்.....!
--------------
வரவிருக்கும் வாழ்வில் முதுமைக்குள்ளும் வாழ்வின் இனிமைதேடும் இளைஞர் கருத்து...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வாழ்க்கை என்பது சுழலும் சக்கரமடா தம்பி எதுவும் நிச்சயமில்லாததொன்று....சுழலும் போதே நல்லவற்றை பகுத்து உள்வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது சுழற்சி வேகம் குறையும் போது துன்பம் மிகும்.....நாளை என்று காத்திராமல் துள்ளும் இளமைக்குள் கொஞ்சம் நிதானம் காத்து மெய்யறிவையும் புகுத்திப் பார்...உலகம் நிதர்சனமாய்த் தெரியும்... புத்தனும் காந்தியும் தேவையில்லை (அப்படி இரண்டு பேர் இருக்கிறதே பல இளசுகளுக்குத் தெரியாது... அவர்கள் மன்னிக்க....!)நீயே உன்னுள் அனைத்தையும் உணர்வாய்.....!
--------------
வரவிருக்கும் வாழ்வில் முதுமைக்குள்ளும் வாழ்வின் இனிமைதேடும் இளைஞர் கருத்து...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

