Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாங்கள் போருக்கு தயார்: பெண் விடுதலை புலிகள் பகிரங்கஅறிவிபபு
#14
<b>சர்வதேச செய்தித் ஸ்தாபனமான "ரொய்ட்டர்" பார்வையில் தமிழீழ விடுதலைப் புலி பெண் போராளிகள்.. </b>

[வெள்ளிக்கிழமை, 6 சனவரி 2006, 05:07 ஈழம்] [ம.சேரமான்]
சர்வதேச செய்தித் தாபனமான "ரொய்ட்டர்", தமிழீழ விடுதலைப் புலி பெண் போராளிகள் பற்றிய சிறப்புக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.


அதன் விவரம்:

5 அடி உயரம் உள்ள மாலதி என்ற பெண் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக இணைந்தவர். தனது சக போராளிகளின் மரணம்தான் என்னை வலுப்படுத்தியிருக்கிறது என்கிறார் அவர். மீண்டும் போரிட தாம் தயார் என்றும் அவர் கூறுகிறார்.

விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடையையும் பட்டியையும் அணிந்துள்ள அவரது இயக்கம் விடுதலைக்காக 20 ஆண்டுகளாக 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் வரை போராடி வந்துள்ளது.






28 வயதாகும் அந்தப் பெண்ணும் அவரது சக போராளிகளும் "நோர்வே அனுசரணையுடனான பேச்சுக்களில் அமைதி உருவாகும் என்று நம்பினோம். ஆனால் அது நடக்காது" என்கின்றனர்.

"அமைதி முயற்சிகளுடாக தமிழ் மக்களுக்கு நன்மையும் விடுதலையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்" என்று போராளிகளின் தலைமையகமான கிளிநொச்சியில் அவரைச் சந்தித்த போது மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் எமக்குத் தெரிவித்தார்.

அந்த நகரம் விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசைக் கொண்டது. நீதிமன்றங்களும், காவல்துறை தலைமையகமும், தங்களது சொந்த வங்கியும் அங்கே இயங்குகின்றன.

"எதுவுமே இந்த அமைதி முயற்சிகாலத்தில் நடக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளோம்" என்கிறார் மாலதி. "எமது தலைவர் தமது முடிவை மாற்றி எமக்கு புதிய உத்தரவிட்டால் நாம் தயாராக இருக்கிறோம்" என்றார்.






கடந்த நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், 2006 ஆம் ஆண்டில் தமது விடுதலைப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் போராளிகளின் பகுதிகளைச் சுற்றிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு இராணுவம் மீது போராளிகள் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. இராணுவம் வன்முறைகளில் ஈடுபடுவதால் அதற்கெதிராக மக்கள் போராடி புதிய யுத்தம் உருவாகிறது என்கிறார்கள். ஏற்கனவே 64 ஆயிரம் பேர் யுத்தத்தால் உயிரிழந்துள்ளனர்.

ரொய்ட்டருக்கு கடந்த புதன்கிழமை பேட்டியளித்த மாலதி மற்றும் 32 வயது ஜெயந்தி ஆகிய பெண் போராளிகள் இருவரும் முன்னணி போராளிகள். நாம் சந்தித்த 24 வயது நேசன் இதுவரை யுத்தத்துக்குச் சென்றதில்லை என்றார்.

ஆனால் முழு அளவிலான பயிற்சிகளை தாங்கள் பெற்றுள்ளோம் என்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளைக் கையாளுதல், ஆர்.பி.ஜி. ரொக்கட் தாக்குதல்கள், மோட்டார்த் தாக்குதல்களை மேற்கொள்ளவும் பயிற்சி பெற்றிருப்பதாக மூவரும் கூறினர்.






தமது முதலாவது களம் மிக எளிதானதாக இருந்தது என்கிறார் ஜெயந்தி. 1996 ஆம் ஆண்டு வடகிழக்கு கடலோரத்தை மீட்டெடுக்கும் சமரில் பங்கேற்றவர். நாங்கள் முழுத் தயாரிப்புக்களுடன் இருந்தோம். முழு பயிற்சிகளோடு இருந்தோம். அதனால் வெற்றி பெற்றோம். அதன் பின்னரான களங்கள் எளிதாக இருந்தன. திருப்தியும் மகிழ்ச்சியுமே அளித்தது எமக்கு" என்றார் ஜெயந்தி.

கடந்த காலங்களில் மரபு வழி மற்றும் தற்கொடைத் தாக்குதல்களுக்கு பெண் போராளிகளை பயன்படுத்தியுள்ளனர். புதிய யுத்தம் தொடங்கினால் அனைத்து வளங்களையும் பயன்படுத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

எம்மிடம் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான போராளிகளை உள்ளடக்கிய தனித் தனி அணிகள் உள்ளன என்றும் இவர்களில் 35 விழுக்காட்டினர் இராணுவ அதிகாரிகள் என்றும் கூறினர்.

நேசன் கூறுகையில், நாம் அச்சப்படவில்லை. தேவைப்பாட்டால் மரணிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.

"நான் சந்திக்கப் போகும் முதலாவது களம் கடினமாக இருக்கும் என்று கருதவில்லை. நான் முழுமையான தயாரிப்புகளோடு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறேன். என்னையும் எமது போராட்டத்தையும் பாதுகாக்கவும்தான். எமது தமிழ் மக்களின் விடுதலையும் உரிமையும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்கிற ஆத்ம பலத்தையும் நாம் பெற்றிருக்கிறோம் என்றார் நேசன்.






"நாம் சிறிலங்கா இராணுவத்தினர் மீது அனுதாபம் காட்டவில்லை. அவர்களை மதிக்கவும் இல்லை. அவர்கள் வன்மம் கொண்ட கொலைகாரர்கள். அவர்கள் கண்ணில் பார்ப்பவர்களையெல்லாம் கொலை செய்ய வேண்டும் என்று மதுபோதையில் இருக்கிற வெறியர்கள்" என்கின்றனர்.

எதிரியிடம் சிக்கி சித்திரவதைப்படாமல் இருக்கவும் சக போராளிகளுக்கு துன்பம் நேராமல் இருக்கவும் தங்கள் கழுத்துகளில் சயனைட் குப்பிகளை அவர்கள் தொங்கவிட்டுள்ளார்கள். எமக்குப் பேட்டியளித்த எவரும் திருமணமாகவில்லை. "யுத்தத்தில் வெல்லும் வரை எங்களுக்கு அதைப் பற்றி சிந்திக்க நேரமில்லை" என்கின்றனர்.

மதுவும் புகைப்பிடிக்கும் பழக்கமும் போராளிகளிடம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கிழக்குக் கடலோரத்தில் வசித்து வந்த தமது குடும்பத்தின் மீது கட்டுக்கடங்காத வன்முறைகளை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதால் தான் போராளியாக இணைந்தேன் என்கிறார் ஜெயந்தி. தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ வன்முறைகளுக்காகத்தான் தானும் களத்திற்குப் போனதாக கூறுகிறார் மாலதி. இந்த வன்முறைகள் யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்திலும் கூட நீடிக்கிறது என்றார் மாலதி.

நாம் களத்துக்கு வந்ததிலிருந்து பல சக போராளிகளை நாம் இழந்துள்ளோம். அந்தப் போராளிகளின் இழப்புதான் எமக்கு உறுதியை ஏற்படுத்தி உள்ளது. எமது தமிழ் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரை அளித்தவர்கள் அவர்கள். அதுதான் எங்களை மேலும் மேலும் போராடுவதற்கான சக்தியாக இருக்கிறது" என்கின்றனர் அவர்கள்.

http://www.puthinam.com
Reply


Messages In This Thread
[No subject] - by வர்ணன் - 01-06-2006, 05:53 AM
[No subject] - by MUGATHTHAR - 01-06-2006, 06:01 AM
[No subject] - by rajathiraja - 01-06-2006, 06:05 AM
[No subject] - by வர்ணன் - 01-06-2006, 06:13 AM
[No subject] - by தூயவன் - 01-06-2006, 06:19 AM
[No subject] - by வர்ணன் - 01-06-2006, 06:29 AM
[No subject] - by rajathiraja - 01-06-2006, 06:29 AM
[No subject] - by rajathiraja - 01-06-2006, 06:32 AM
[No subject] - by வர்ணன் - 01-06-2006, 06:37 AM
[No subject] - by தூயவன் - 01-06-2006, 06:38 AM
[No subject] - by rajathiraja - 01-06-2006, 06:41 AM
[No subject] - by வர்ணன் - 01-06-2006, 06:52 AM
&quot;ரொய்ட்டர்&quot; பார்வையில் புலி பெண் போராளிகள் - by pepsi - 01-06-2006, 06:54 AM
[No subject] - by pepsi - 01-06-2006, 06:57 AM
[No subject] - by வர்ணன் - 01-06-2006, 07:09 AM
[No subject] - by rajathiraja - 01-06-2006, 07:12 AM
[No subject] - by Vaanampaadi - 01-06-2006, 07:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)