01-05-2006, 04:31 PM
<b>திருமலை மாணவர் படுகொலையை கண்டித்து வவுனியாவில் இன்று ஹர்த்தால்; துக்கதினம் </b>
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வவுனியாவில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் துக்கதின ஏற்பாடுகளுக்கு அனைத்துத்தரப்பினரும் பூரணஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் இன அழிப்பு சிந்தனையில் வன் போக்கு கொண்ட ஸ்ரீலங்காவின் புதிய இராணுவ உயர் பீடம் பதவி ஏற்ற பின் தமிழீழமெங்கும் இந்தப் படுகொலைகள் கோலோச்சுகின்றன.
சமாதானம் பேசவந்த ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியால் கூட இத்தகைய வன் செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் போனமை கண்டு தமிழ் மக்கள் மனவேதனையும் கொதிப்பும் அடைந்துள்ளனர். தமிழ் மாணவர் சமூகம் தம்மையும் தமது மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக மௌனமுறை தழுவிய போராட்டங்களில் இருந்து விடுபட்டு ஆயுத ரீதியான போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியத்தை இச் செயல்கள் வலியுறுத்துகின்றனவா?
அண்மையில் தமிழ்ப் பிரதேசம் எங்கும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களையே கடுமையாக விமர்சிக்கும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவும் சர்வதேச சமூகமும் இப் படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகின்றன என்பதை தமிழ் மக்கள் சமூகம் உன்னிப்பாக எதிர்பார்த்தபடியே உள்ளது.
ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாத இராணுவமும் அதனோடு சேர்ந்து இயங்கும் பரா இராணுவ குழுக்களும் தொடர்ந்தும் இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தமிழ் மாணவர் சமூகம் வன்மையாக கண்டிக்கின்றது. திருமலை படுகொலையை கண்டித்தும் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் ஆத்ம சாந்திக்காக அஞ்சலி செலுத்தும் பொருட்டு, வவுனியா மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை முழுநாளும் பூரண கதவடைப்பும் ஹர்த்தாலில் ஈடுபட்டும் இல்லங்கள், திணைக்களங்கள், வியாபார நிறுவனங்கள் தோறும் கறுப்புக் கொடிகள் பறக்க விட்டும் துக்கதினம் அனுஷ்டிக்கும் படியும் ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்கள் சார்பாக வவுனியா மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது.
<b>தகவல்: தினக்குரல்</b>
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வவுனியாவில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் துக்கதின ஏற்பாடுகளுக்கு அனைத்துத்தரப்பினரும் பூரணஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் இன அழிப்பு சிந்தனையில் வன் போக்கு கொண்ட ஸ்ரீலங்காவின் புதிய இராணுவ உயர் பீடம் பதவி ஏற்ற பின் தமிழீழமெங்கும் இந்தப் படுகொலைகள் கோலோச்சுகின்றன.
சமாதானம் பேசவந்த ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியால் கூட இத்தகைய வன் செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் போனமை கண்டு தமிழ் மக்கள் மனவேதனையும் கொதிப்பும் அடைந்துள்ளனர். தமிழ் மாணவர் சமூகம் தம்மையும் தமது மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக மௌனமுறை தழுவிய போராட்டங்களில் இருந்து விடுபட்டு ஆயுத ரீதியான போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியத்தை இச் செயல்கள் வலியுறுத்துகின்றனவா?
அண்மையில் தமிழ்ப் பிரதேசம் எங்கும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களையே கடுமையாக விமர்சிக்கும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவும் சர்வதேச சமூகமும் இப் படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகின்றன என்பதை தமிழ் மக்கள் சமூகம் உன்னிப்பாக எதிர்பார்த்தபடியே உள்ளது.
ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாத இராணுவமும் அதனோடு சேர்ந்து இயங்கும் பரா இராணுவ குழுக்களும் தொடர்ந்தும் இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தமிழ் மாணவர் சமூகம் வன்மையாக கண்டிக்கின்றது. திருமலை படுகொலையை கண்டித்தும் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் ஆத்ம சாந்திக்காக அஞ்சலி செலுத்தும் பொருட்டு, வவுனியா மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை முழுநாளும் பூரண கதவடைப்பும் ஹர்த்தாலில் ஈடுபட்டும் இல்லங்கள், திணைக்களங்கள், வியாபார நிறுவனங்கள் தோறும் கறுப்புக் கொடிகள் பறக்க விட்டும் துக்கதினம் அனுஷ்டிக்கும் படியும் ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்கள் சார்பாக வவுனியா மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது.
<b>தகவல்: தினக்குரல்</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

