01-05-2006, 01:36 PM
மாணவர்கள் கொலையை அடுத்து திருமலையில் இயல்புநிலை பாதிப்பு!
திருகோணமலை கடற்கரை வீதியில் நேற்றுமுன்தின மிரவு 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று திருகோணமலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன், பாடசாலைக ளுக்கு மாணவர்களும், அலுவலகங்களுக்கு ஊழியர்க ளும் செல்லாததால், அவையனைத்தும் இயங்கவில்லை.
இந்தப் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து எந்த வொரு அமைப்பும் அழைப்பு விடுக்காதபோதிலும், மக் களால் இந்தக் கதவடைப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து இன்று பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையும், பொங்குதமிழ் சமூகமும் விடுத்துள்ளன.
இந்த ஐந்து மாணவர்களது மரணங்களும் - குண்டுவெடிப்பி னாலும், துப்பாக்கிப் பிரயோகத் தினாலுமே இடம்பெற்ற தாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தம்மைப் பிடித்த கடற்படையினர் தம்மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதிலேயே ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதாக காயமடைந்த மாணவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது -
சம்பவம் இடம்பெற்ற கடற்கரை வீதிக்கு நாம் செல்வது வழக்கமாகும். நேற்று முன்தினமும் அவ்வாறு அங்கு சென்றவேளை அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் எம்மை பிடித்துச் சென்றனர்.
இவ்வாறு எம்மைப் பிடித்துச் சென்ற கடற்படையினர் எம்மீது 20 நிமிடங்கள் விசாரணை நடத்திய பின்னர் - தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதெனத் தெரிவித்து எம்மீது சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதனால் எனது சகமாணவர்கள் ஐவர் உயிரிழந்ததுடன் நாம் இருவரும் காயமடைந்தோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, உயிரிழந்த மாணவர்களின் சடலங்களை வைத்திய பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என உறவினர்கள் கையயாப்பமிட்டாலே சடலங்கள் தரப்படுமெனத் தெரிவித்தபொலிஸார் - பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பை அடுத்து சடலங்களை உறவினர்களிடம் கையளித்தனர்.
இதன்பின்னர் வைத்தியசாலையிலிருந்து ஐந்து மாணவர்களின் சடலங்களும் உறவினர்களால் அவர்களின் இல்லங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இவர்களது சடலங்கள் நாளை வியாழக்கிழமை திருகோணமலை இந்துக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் தியாகிகள் அரங்கில் வைக் கப்பட்டு, இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று இறுதி நிகழ்வுகளுக்காக ஒன்றாக எடுத்துச் செல்லப்படவுள்ளன.
மாணவர்களின் இறுதி நிகழ்வுகளின் பின்னர் திருகோணமலையிலிருந்து இராணுவத்தினர் முற்றுமுழுதாக வெளியேறும் வரை தொடர்ச்சியான கதவடைப்புக்கு திருமலை தமிழ் மக்கள் பேரவை, பொங்கியயழும் மக்கள் சமூகம் ஆகியன அழைப்பு விடுத்துள்ளன.
இதேவேளை, மாணவர்களின் படுகொலையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மாணவர் சமூகம் உட்பட பல்வேறு அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
<b>பதிப்புத்திகதி 04 ம் நாள் சனவரி 2006
தகவல்: நமது ஈழநாடு</b>
திருகோணமலை கடற்கரை வீதியில் நேற்றுமுன்தின மிரவு 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று திருகோணமலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன், பாடசாலைக ளுக்கு மாணவர்களும், அலுவலகங்களுக்கு ஊழியர்க ளும் செல்லாததால், அவையனைத்தும் இயங்கவில்லை.
இந்தப் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து எந்த வொரு அமைப்பும் அழைப்பு விடுக்காதபோதிலும், மக் களால் இந்தக் கதவடைப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து இன்று பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையும், பொங்குதமிழ் சமூகமும் விடுத்துள்ளன.
இந்த ஐந்து மாணவர்களது மரணங்களும் - குண்டுவெடிப்பி னாலும், துப்பாக்கிப் பிரயோகத் தினாலுமே இடம்பெற்ற தாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தம்மைப் பிடித்த கடற்படையினர் தம்மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதிலேயே ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதாக காயமடைந்த மாணவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது -
சம்பவம் இடம்பெற்ற கடற்கரை வீதிக்கு நாம் செல்வது வழக்கமாகும். நேற்று முன்தினமும் அவ்வாறு அங்கு சென்றவேளை அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் எம்மை பிடித்துச் சென்றனர்.
இவ்வாறு எம்மைப் பிடித்துச் சென்ற கடற்படையினர் எம்மீது 20 நிமிடங்கள் விசாரணை நடத்திய பின்னர் - தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதெனத் தெரிவித்து எம்மீது சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதனால் எனது சகமாணவர்கள் ஐவர் உயிரிழந்ததுடன் நாம் இருவரும் காயமடைந்தோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, உயிரிழந்த மாணவர்களின் சடலங்களை வைத்திய பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என உறவினர்கள் கையயாப்பமிட்டாலே சடலங்கள் தரப்படுமெனத் தெரிவித்தபொலிஸார் - பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பை அடுத்து சடலங்களை உறவினர்களிடம் கையளித்தனர்.
இதன்பின்னர் வைத்தியசாலையிலிருந்து ஐந்து மாணவர்களின் சடலங்களும் உறவினர்களால் அவர்களின் இல்லங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இவர்களது சடலங்கள் நாளை வியாழக்கிழமை திருகோணமலை இந்துக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் தியாகிகள் அரங்கில் வைக் கப்பட்டு, இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று இறுதி நிகழ்வுகளுக்காக ஒன்றாக எடுத்துச் செல்லப்படவுள்ளன.
மாணவர்களின் இறுதி நிகழ்வுகளின் பின்னர் திருகோணமலையிலிருந்து இராணுவத்தினர் முற்றுமுழுதாக வெளியேறும் வரை தொடர்ச்சியான கதவடைப்புக்கு திருமலை தமிழ் மக்கள் பேரவை, பொங்கியயழும் மக்கள் சமூகம் ஆகியன அழைப்பு விடுத்துள்ளன.
இதேவேளை, மாணவர்களின் படுகொலையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மாணவர் சமூகம் உட்பட பல்வேறு அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
<b>பதிப்புத்திகதி 04 ம் நாள் சனவரி 2006
தகவல்: நமது ஈழநாடு</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

