01-05-2006, 01:20 PM
<b>சோகமயமாக திருகோணமலை காட்சி மாணவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று படுகொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரு குழுக்கள் நியமனம்
(நமது திருகோணமலை, ஈச்சிலம்பற்று நிருபர்கள்) </b>
திருகோணமலை பெரிய கடை கடற் கரைப் பகுதியில் கடந்த திங்களன்று இரவு ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும், நேற்று திருகோணமலை நகரில் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மக்கள் அனைவரும் சோகமே உருவாகக் காணப்படுகின்றனர். மாணவர்கள் எவரும் பாடசாலைக்குச் செல்லவில்லை. அரச அலுவலகங்களும் செயலிழந்து
காணப்பட்டன. அதேவேளை, வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுக் கிடந்ததுடன் வாகனப் போக்குவரத்தும் ஸ்தம்பித்திருந்தது.
இந்தப் படுகொலைகளை கண்டித்து திருகோணமலையின் புற நகர்ப் பகுதிகளான தம்பலகாமம், மூதூர் கிழக்கு, மூதூர் தெற்கு ஆகிய இடங்களிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களான லோகிதாசன் றொஹான், சண்முகராஜா கஜேந்திரன், தங்கத்துரை சிவானந்தா, யோகராஜா ஹேமச்சந்திரன், மனோகரன் ரஜீஹர், ஆகியோரின் பூதவுடல்கள் நேற்று அவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தபோது பெருந்தொகையான மக்கள் அங்கு சென்று தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினார்கள்.
இந்தப் பூதவுடல்களை இன்று காலை இவர்கள் கல்வி பயின்ற திருகோணமலை இந்துக் கல்லூரியில் பொது மக்களின் அஞ்சலிக்கென வைப்பதற்கான ஏற்பாடுகள் அமைப்புக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவத்தில் காயங்களுக்கு இலக்கான இரு மாணவர்களும் தொடர்ந்தும் திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியான மாணவர்களின் பூதவுடல்கள் இன்று தகனம் செய்ய இருப்பதனால் இன்றைய தினம் கடை அடைப்பு போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு இயல்பு நிலையினை உருவாக்கி கறுப்புக் கொடிகளை பறக்க விட்டு மாணவர்கள், பொது மக்கள், மற்றும் அனைவரும் இவர்களுக்கான அஞ்சலியினை செலுத்துமாறு இறுதி அஞ்சலிக்கான அமைப்புக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் கடமைக்கு சென்ற பின்னர் இறுதிக் கிரியை நடைபெறும் இடத்திற்கு வருமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
<b> தகவல்: வீரகேசரி</b>
(நமது திருகோணமலை, ஈச்சிலம்பற்று நிருபர்கள்) </b>
திருகோணமலை பெரிய கடை கடற் கரைப் பகுதியில் கடந்த திங்களன்று இரவு ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும், நேற்று திருகோணமலை நகரில் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மக்கள் அனைவரும் சோகமே உருவாகக் காணப்படுகின்றனர். மாணவர்கள் எவரும் பாடசாலைக்குச் செல்லவில்லை. அரச அலுவலகங்களும் செயலிழந்து
காணப்பட்டன. அதேவேளை, வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுக் கிடந்ததுடன் வாகனப் போக்குவரத்தும் ஸ்தம்பித்திருந்தது.
இந்தப் படுகொலைகளை கண்டித்து திருகோணமலையின் புற நகர்ப் பகுதிகளான தம்பலகாமம், மூதூர் கிழக்கு, மூதூர் தெற்கு ஆகிய இடங்களிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களான லோகிதாசன் றொஹான், சண்முகராஜா கஜேந்திரன், தங்கத்துரை சிவானந்தா, யோகராஜா ஹேமச்சந்திரன், மனோகரன் ரஜீஹர், ஆகியோரின் பூதவுடல்கள் நேற்று அவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தபோது பெருந்தொகையான மக்கள் அங்கு சென்று தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினார்கள்.
இந்தப் பூதவுடல்களை இன்று காலை இவர்கள் கல்வி பயின்ற திருகோணமலை இந்துக் கல்லூரியில் பொது மக்களின் அஞ்சலிக்கென வைப்பதற்கான ஏற்பாடுகள் அமைப்புக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவத்தில் காயங்களுக்கு இலக்கான இரு மாணவர்களும் தொடர்ந்தும் திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியான மாணவர்களின் பூதவுடல்கள் இன்று தகனம் செய்ய இருப்பதனால் இன்றைய தினம் கடை அடைப்பு போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு இயல்பு நிலையினை உருவாக்கி கறுப்புக் கொடிகளை பறக்க விட்டு மாணவர்கள், பொது மக்கள், மற்றும் அனைவரும் இவர்களுக்கான அஞ்சலியினை செலுத்துமாறு இறுதி அஞ்சலிக்கான அமைப்புக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் கடமைக்கு சென்ற பின்னர் இறுதிக் கிரியை நடைபெறும் இடத்திற்கு வருமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
<b> தகவல்: வீரகேசரி</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

