Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகிந்தவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி
#1
மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி
இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திக்க மறுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி எம்.ஜி.ஆர். முன்னேற்றக் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் கிளிநொச்சி எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் விடுத்துள்ள அறிக்கை:

தங்கள் சுகத்திற்காகவும் தங்களின் நல்லாட்சி சிறந்தோங்கவும் ஈழ தேசத்தவரின் இதயபூர்வமான நல்லாசிகள் என்றும் உரித்தாகுக.

தாய்த் தமிழகத்தின் இனக்குழுமம் ஆகிய ஈழத் தமிழ் பேசும் மக்களாகிய எங்களின் இன உரிமைகளும் வாழ்வியல் அடிப்படைகளும் கடந்த பல தசாப்தங்களாக சிங்கள அரசால் மறுக்கப்பட்டு வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

தமிழ் பேசும் மக்கள் மீதான உயிர் வாழ்தலுக்கான தகுதி மறுப்பு என்பது யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பின்னர் குறிப்பாக மகிந்த ராஜபக்சஇ சிங்களக் குடியரசின் தலைவரான பின்னர் அதி தீவிரம் பெற்றுள்ளது.

சுருக்கமாக வெளிப்படுத்துவதானால் இலங்கைத் தீவு முழுமையும் வாழும் தமிழ் பேசும் மக்கள் மரணத்திற்குள்ளும் மரண பீதிக்குள்ளும் தினம்தோறும் வாழ்ந்து வருகின்றனர்.

புரிந்துணர்வு உடன்பாடு என்பது தற்பொழுது பெயரளவில் நடைமுறையில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் புரிந்துணர்வு உடன்பாடு என்பது சிங்கள அரசால் சாகடிக்கப்பட்ட வெற்று ஆவணமாகவே சமகாலத்தில் உள்ளமையைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

சிங்கள அரசின் கட்டுப்பாட்டு பிராந்தியங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் படுகொலைகள்இ கொலை வெறித்தனங்கள்இ பாலியல் வல்லுறவுகள் ஆட்கடத்தல்கள்இ காணாமற் போதல்கள்இ சித்திரவதைகள்இ சுற்றிவளைப்புக்கள்இ தேடுதல்கள்இ அச்சுறுத்தல்கள்இ கைதுகள்இ குடிப்பெயர்வுகள் என வகை தொகையின்றி சிங்கள ஆட்சியாளர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ளன.

தமிழ் சிவில் மூகம் மீது சிங்களப் படைகள் சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளுகின்றன. ஒவ்வொரு நாள் விடியற்பொழுதுகளும் பிணவாடை வீசவே மலர்கின்றது. மனித நேயத்தையே மரணிக்கச் செய்யும் சிங்கள நாசிவாதிகளின் ஆட்சி பிராந்தியமாக தமிழர்கள் வாழும் வடக்கு - கிழக்கு மலையகம்இ கொழும்பு போன்ற பிரதேங்கள் மாற்றம் பெற்றுள்ளன.

இங்கு தமிழர் மீது பிரகடனம் செய்யாத பாசிச வெறித்தனம் சிங்கள அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சிங்கள அரசு தலைவரும் அவரது சகாக்களும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பில் வரட்டுத்தனமும் வக்கிரபுத்தியும் கொண்ட பௌத்த சிங்கள அரசுகளின் புதிய வடிவமாகவே உள்ளனர்.

இத்தகைய கொடூர வல்லாட்சிக்கு உட்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புக்களையும் தாங்கள் நிச்சயம் புரிந்து கொண்டு ஈழ விடுதலைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

மதிப்பிற்குரிய மக்கள் திலகம் அவர்கள் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பில் வகுத்திருந்த தெளிவான அரசியல் அணுகுமுறை எமது தாயக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவரின் இலட்சியங்களுடன் தமிழகத்திற்கு நல்லாட்சி வழங்கும் தாங்களும் புரட்சித்தலைவர் அவர்கள் பின்பற்றிய கொள்கைகளை தீவிரமாக தாங்கள் நடைமுறைக்கு இட வேண்டும் என்று அவாவுகிறோம்.

அந்த வகையில் இலங்கை அரச தலைவர்இ பாரத தேசம் வந்திருந்த போது ஈழத் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட தமிழக சகோதரர்களின் உணர்வு வெளிப்பாடாக இலங்கை அரச தலைவரை அனுசரிக்க தாங்கள் விரும்பவில்லை எனும் செய்தி அறிந்து நாங்கள் உணர்வு மேலிடப் பெற்றோம்.

பிரிக்க முடியாத இன உறவும் இனத்துவ அடையாளமும் உடைய தமிழீழமும் தமிழகமும் இணைந்தும் பிணைந்தும் செயல்புரிய வேண்டிய வரலாற்றின் தார்மிகப் பொறுப்பினை எமது விடுதலைக்காக தாய்த் தமிழகம் சார்பில் தாங்கள் ஆற்ற வேண்டும் என அன்புரிமையோடு எதிர்பார்க்கின்றோம்.

உலகின் ஈழதேசத்தின் வரைபடம் என்பது சிங்கள அரசாங்க இரத்தமும் வியர்வையும் வதையும் மிகுந்த ஒன்றாக வரையப்பட்டுள்ளது. பாரத தேசத்தில் தமிழகம் உள்ளிட்ட பிற பிராந்தியங்கள் பெற்றுள்ள சுய நிர்ணயம்இ தன்னாட்சிஇ இறைமை என்பவற்றைப் பெற்று நிம்மதியாக வாழ்வதே ஈழத்தேசத்தவரின் ஆழ்மன அரசியல் அபிலாசை ஆகும்.

இத்தகைய உயரிய இலட்சியத்தை அடைவதற்காக ஈழ மக்கள் எடுக்கும் எல்லா அரசியல் முயற்சிகளுக்கும் தாங்களும் தாய்த்தமிழகத்தின் சகோதரர்களும் அனைத்து தார்மீக ஆதரவினையும் தர வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தங்கள் நல்லாட்சியும் ஈழ விடுதலைக்கான பணியும் சிறக்க எமது வாழ்த்துக்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்
Reply


Messages In This Thread
மகிந்தவை சந்திக்க மறுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி - by நர்மதா - 01-04-2006, 02:00 AM
[No subject] - by Thala - 01-04-2006, 02:01 AM
[No subject] - by வர்ணன் - 01-04-2006, 02:27 AM
[No subject] - by மேகநாதன் - 02-14-2006, 03:17 AM
[No subject] - by adithadi - 02-14-2006, 03:47 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)