01-04-2006, 01:48 AM
86ம் ஆண்டு ஜனவரியில் பலாலியில் இருந்து முன்று தடவை(முதன் முறை வசாவிளான்,புன்னாலைக்கட்டுவன் வழி,2 நாட்களின் பிறகு குரும்பசிட்டி, குப்பிளான் வழி, கடைசியாக கட்டுவன் வழி)வெளிப்பட்ட இராணுவத்தினர், போராளிகளின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் அப்பாவி மக்களினச் சுட்டு விட்டு முன்னேற முடியாமல் தோல்வியுடன் திரும்பினார்கள். அச்சமயத்தில்தான் கெலியில் இருந்து பலாலிக்கு பக்கத்தில் உள்ள மக்கள் பகுதியினை நோக்கிச்சுடுவார்கள். மக்களில் பலர் வலிகாமம் தெற்கு,கிழக்குப் பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள். எங்கள் குடும்பமும் இணுவில் குடிபெயர்ந்தது. இதன்பிறகு சில நாட்களின் பின்பு இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு பக்கத்தில் உள்ள டியூசனில் படித்துக்கொண்டிருந்தபோது, மிக அருகில் உள்ள தாவடிப்பகுதியில் முதன்முறையாக விமானத்தில் இருந்து குண்டு போட எல்லோரும் ஒடியது இப்ப நினைவுக்கு வருகிறது.
கானாபிரபா , உமது விமர்சனம் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
இன்னும் ஒரு விடயம், இது எனது 100வது கருத்து.
கானாபிரபா , உமது விமர்சனம் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
இன்னும் ஒரு விடயம், இது எனது 100வது கருத்து.
,
,
,

