Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் IV - Sydney முருகனின்......
#1
வணக்கம்,

நலமாக இருக்கிறீர்களா? வாழ்க்கை எப்படி போகின்றது? "அட என்னத்த இங்க வந்து கண்டோம்" என அலுத்துக்கொள்கிறீர்கள் போல?

இருங்கோ தேத்தண்ணி போட்டு கொண்டு வாறன்.

சரி இப்ப நாங்கள், என்னை போல, உங்களை போல, நம்மை போல சில மனிதர்களை பார்ப்போமா?

இஞ்ச பாருங்கோ இப்பவே சொல்லி போட்டன். இது முற்றிலும் ஒரு கற்பனை கதை என்ன. இடங்களின் பெயர்கள் மட்டும் நிஜ வாழ்வில் உள்ள இடங்கள். சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனை. பிறகு அங்க அவுஸ்திரேலியாவில இருக்கிறவ கோவ பட கூடாது. சரியோ??

சரி இனி உங்களுக்காக புலத்தில் இருந்து ஓர் புலம்பல்...


<img src='http://img362.imageshack.us/img362/8782/images6dl.jpg' border='0' alt='user posted image'>


[size=20]புலத்தில் இருந்து ஓர் புலம்பல்


ஈழத்தில் வடமராட்சியில் காலம் காலமாக வாழ்ந்த ஓர் குடும்பம், நாட்டு நிலமையால் அவுஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சீவியம் நடத்தி கொண்டு இருக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள் தாய் புவனேஸ்வரி, மகன் ராஜன், ராஜனின் மனைவி ராதிகா.

2006 புத்தாண்டு பிறந்துவிட்டது. ராஜன் குடும்பம் வொலொங்கொங் என்னும் இடத்தில் அமைந்த்திருக்கும் "சிவா+விஸ்ணு" ஆலயத்திற்கு செல்ல ஆயுத்தமாகின்றனர்.

ராஜன்: ராதி...ராதி..என்னப்ப நீர் இன்னும் இந்த மேக்கப்பை பூசிமுடிக்கலையே?

ராதிகா: ( கண்ணாடியின் முன் அமர்ந்து கொண்டே), "இஞ்ச பாருங்கோ ராஜன் நான் சமைச்சு போட்டு அவசரம் அவசரமாய் வெளிக்கிடுறன். எனக்கு கோவத்தை கிளப்பாதிங்கோ சொல்லி போட்டன்"

ராஜன்: ம்ம்ம் காலமடா காலையில எழும்பி சமைச்சது நான். கடைசியில சலட் ஒன்றை போட்டுவிட்டு பெரிதா சொல்லிக்க வேண்டியது. அப்பவே என்ட அம்மா சொன்னவ "டேய் ராஜன் உனக்கு நான் பார்த்திருக்கிற அமலாவை கட்டடா" என்று..


அறையில் இருந்து புயலென வெளியேறிய ராதிகா, தனது புடவையை சரி செய்தவாறு, "என்னப்பா சொன்னனிங்கள்?

ராஜன்: ஒண்டும்மில்லையே!!

ராதிகா: அது தானே பார்த்தேன். பாருங்கோ அப்ப ஊரில நீங்கள் சுமாரா இருந்தியள், அதுவும் சின்னனில. நான் உங்கள ஓ/எல் படிக்கிற நேரத்தில எல்லோ இந்த கண்றாவி காதலை பண்ணி தொலைச்சனான். எனக்கு அப்ப 7 1/2 சனி போல. உங்கள என்னை விட்ட எவள் திரும்பி பார்ப்பால்?

ராஜன்: சரி சரி பழைய கதை எல்லாம் இப்ப எதுக்கு? அம்மா எங்க?

ராதிகா: மேல் விட்டு சறோ அன்றியோட அலட்டி கொண்டு இருப்பா. நான் காலமை எழும்பினதில இருந்து வேலை செய்து போட்டு வெளிக்கிடுறன். என்னை குறை சொல்லுங்கோ. உங்கட அம்மா காலையில "செல்வி" கதை கதைக்க போனவ தான். என்னையே குற்றம் சொல்லுங்கோ..

ராதிகா மறுபடி அறைக்குள் இருக்கும் கண்ணாடி முன் ஐக்குயமாகிவிட, மேல் வீட்டு சறோ வீடிலிருந்து திரும்புகிறார் புவனேஸ்வரி.


புவனேஸ்வரி: தம்பி ராஜன், என்னப்பு வெளிக்கிடுவமே?

ராஜன்: உங்கட மருமகள் மேக்-அப் போட்டு முடியவில்லை அம்மா.

புவனேஸ்வரி: அதை சொல்லு, நான் இந்த விடிய காலமையில எழும்பி வேலை எல்லாம் செய்து போட்டு, ஒரு புடவையை சுத்தி பொட்டு நிற்குறன். உன்ட மனிசிக்கு என்ன?

ராஜன் மனதிற்குள் : (கேளுங்கோவன் கதையை காலையில எழுந்து வேலை எல்லாம் செய்தது நான். இவை ரென்Dஉ போரின்ட கதையும்.கடவுளே)

ராஜன் தாயின் பார்வையை தவிர்க்க எண்ணி, தொலைக்காட்சி பெட்டியை தட்டிவிடுகிறான். தொலைக்காட்சியில காலநிலை போய் கொண்டிருக்கிறது.

ராஜன்: அடக்கடவுளே இண்டைக்கு பார்த்து நாங்கள் கோயிலுக்கு வெளிக்கிடுறம், வெயில் சரியா இருக்கும் போல, 45 போகும் என்று சொல்லுறாங்கள்.

புவனேஸ்வரி: இதை விடு தம்பி. உன்ட மனிசி அவான்ட அப்பா , அம்மாவோட டெலிபோனில எப்ப பார்த்தாலும் கதைக்கிறா. பிறகு நான் தான் என்னமோ டெலிபோன் பில்லை கூட்டுற போல உனக்கு கதை சொல்லுறது என்ன..

ராஜன்: அம்மா அப்படி ஒன்றுமே ராதிகா சொன்னதில்லை

புவனேஸ்வரி: அது சரி கட்டினவள் தானே இப்ப கண்ணுக்கு முன்னால தெரியிறாள். பெத்தவளை பற்றி என்ன கவலை. நான் உன்னை கொப்பர் போன பிறகு எவ்வளவு கஸ்டபட்டு வளர்த்தனான் தெரியுமோ??

ராஜன்: அம்மா ஆரம்பிக்காதிங்க.

ஒருவாறு தனது அலங்காரத்தை முடித்து அறையை விட்டு வெளியே வந்த ராதிகா

"அப்பா மாமி செல்வி பார்க்கிற நேரத்தில உங்களுக்கு என்ன தொலைக்காட்சி பார்ப்பு. மாமி கதை எப்பிடி மாமி போகுது. செல்வியை பார்த்தா பாவமா கிடக்குது என்ன"

ராஜன்: (மனதிற்குள்) அடிபாவிகளா, என்னை பார்த்தா பாவமா தெரியலையா?)

புவனேஸ்வரி: ஓமடி பிள்ளை. காரில போகக்கில்லை கதையை சொல்லுறன். நீ இந்த பச்சை புடவைக்கு எண்ட பச்சை முத்து மாலையை போடேன் பிள்ளை. வடிவ இருக்கும் எல்லோ?!!

ராதிகா: மாமி உங்கள பழைய காலம் எண்டு இவர் ஏன் சொல்லுறவரோ தெரியாது. உங்களுக்கு நல்ல டேஸ்ட் மாமி.

ராஜன்Sadமனதிற்குள்)"அடிப்பாவி நேற்றும் இரவு "அப்பா உங்கட அம்மா சரியான கர்நாடகம்" என்று சொல்லி போட்டு..

புவனேஸ்வரி: தம்பி இருட என்ட மருமகளுக்கு இந்த மாலையை போட்டு கூட்டி கொண்டு வாறன்.

ராஜன்: ஓம் ஓம், மெதுவா வாங்கோ. கோவில் இண்டைக்கு இரவு வரைக்கும் திறந்து இருக்குமாம். (ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லி போட்டு, இப்ப மாலை எல்லோ போடினமாம். என்ட நல்லூர் கந்தனே)

தலையில் கை வைத்து ராஜன் புலம்ப, புலத்தில் இருந்து ஓர் புலம்பலுக்கு சின்னதா ஒரு இடைவெளி...


புலம்பல் தொடரும்..........
[b][size=15]
..


Reply


Messages In This Thread
- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் IV - Sydney முருகனின்...... - by தூயா - 01-02-2006, 04:58 AM
[No subject] - by Snegethy - 01-02-2006, 05:46 AM
[No subject] - by Rasikai - 01-02-2006, 05:57 AM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 07:57 AM
[No subject] - by வர்ணன் - 01-02-2006, 09:43 AM
[No subject] - by Snegethy - 01-04-2006, 06:51 AM
[No subject] - by வர்ணன் - 01-04-2006, 07:16 AM
[No subject] - by Snegethy - 01-04-2006, 07:20 AM
[No subject] - by வர்ணன் - 01-04-2006, 07:28 AM
[No subject] - by Snegethy - 01-04-2006, 07:31 AM
[No subject] - by tamilini - 01-04-2006, 12:37 PM
[No subject] - by gausi - 01-04-2006, 06:13 PM
[No subject] - by sabi - 01-04-2006, 11:26 PM
[No subject] - by தூயா - 01-05-2006, 09:21 AM
[No subject] - by kuruvikal - 01-05-2006, 09:25 AM
[No subject] - by தூயா - 01-05-2006, 09:29 AM
[No subject] - by sooriyamuhi - 01-05-2006, 09:33 AM
[No subject] - by kuruvikal - 01-05-2006, 09:34 AM
[No subject] - by தூயா - 01-05-2006, 09:35 AM
[No subject] - by MUGATHTHAR - 01-05-2006, 09:36 AM
[No subject] - by தூயா - 01-05-2006, 09:42 AM
[No subject] - by Niththila - 01-05-2006, 12:34 PM
[No subject] - by வினித் - 01-05-2006, 05:35 PM
[No subject] - by vasisutha - 01-05-2006, 06:16 PM
[No subject] - by Mathan - 01-09-2006, 11:48 AM
[No subject] - by Vasampu - 01-09-2006, 12:00 PM
[No subject] - by தூயா - 01-15-2006, 06:22 AM
[No subject] - by Rasikai - 01-17-2006, 02:25 AM
[No subject] - by RaMa - 01-18-2006, 06:15 AM
[No subject] - by தூயா - 01-18-2006, 08:05 AM
[No subject] - by தூயா - 01-18-2006, 08:06 AM
[No subject] - by Mathan - 01-30-2006, 05:32 PM
[No subject] - by tamilini - 02-03-2006, 01:21 PM
[No subject] - by Niththila - 02-03-2006, 02:10 PM
[No subject] - by தூயா - 02-06-2006, 09:12 AM
[No subject] - by தூயா - 02-06-2006, 09:16 AM
[No subject] - by sathiri - 02-06-2006, 07:38 PM
[No subject] - by sinnakuddy - 02-06-2006, 10:17 PM
[No subject] - by tamilini - 02-06-2006, 11:14 PM
[No subject] - by kuruvikal - 02-07-2006, 02:28 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 03:02 AM
[No subject] - by தூயா - 02-07-2006, 06:56 AM
[No subject] - by தூயா - 02-07-2006, 07:00 AM
[No subject] - by Niththila - 02-07-2006, 11:43 AM
[No subject] - by தூயா - 02-07-2006, 12:02 PM
[No subject] - by அனிதா - 02-07-2006, 01:47 PM
[No subject] - by kuruvikal - 02-07-2006, 02:27 PM
[No subject] - by Niththila - 02-07-2006, 04:01 PM
[No subject] - by kuruvikal - 02-07-2006, 04:45 PM
[No subject] - by Niththila - 02-07-2006, 05:35 PM
[No subject] - by Rasikai - 02-07-2006, 07:29 PM
[No subject] - by kuruvikal - 02-07-2006, 10:38 PM
[No subject] - by tamilini - 02-07-2006, 10:44 PM
[No subject] - by தூயா - 03-05-2006, 12:46 AM
[No subject] - by அருவி - 03-05-2006, 12:51 AM
[No subject] - by தூயா - 03-05-2006, 01:47 AM
[No subject] - by tamilini - 03-05-2006, 11:53 AM
[No subject] - by SUNDHAL - 03-05-2006, 03:28 PM
[No subject] - by Jenany - 03-05-2006, 07:42 PM
[No subject] - by அனிதா - 03-05-2006, 08:04 PM
[No subject] - by sankeeth - 03-05-2006, 11:14 PM
[No subject] - by தூயா - 03-06-2006, 09:56 AM
[No subject] - by N.SENTHIL - 03-06-2006, 10:12 AM
[No subject] - by தூயா - 03-06-2006, 10:13 AM
[No subject] - by அருவி - 03-06-2006, 11:49 AM
[No subject] - by SUNDHAL - 03-06-2006, 02:30 PM
[No subject] - by SUNDHAL - 03-06-2006, 02:32 PM
[No subject] - by Niththila - 03-06-2006, 02:45 PM
[No subject] - by tamilini - 03-06-2006, 09:01 PM
[No subject] - by அருவி - 03-06-2006, 09:14 PM
[No subject] - by அருவி - 03-06-2006, 09:15 PM
[No subject] - by வர்ணன் - 03-08-2006, 12:48 AM
[No subject] - by Snegethy - 03-08-2006, 02:56 AM
[No subject] - by RaMa - 03-08-2006, 07:00 AM
[No subject] - by தூயா - 03-08-2006, 09:38 AM
[No subject] - by தூயா - 03-08-2006, 09:40 AM
[No subject] - by iniyaval - 03-09-2006, 09:27 PM
[No subject] - by தூயா - 03-09-2006, 11:21 PM
[No subject] - by Rasikai - 03-11-2006, 11:27 PM
[No subject] - by தூயா - 04-15-2006, 07:15 AM
[No subject] - by கந்தப்பு - 04-15-2006, 08:04 AM
[No subject] - by தூயா - 04-17-2006, 02:44 AM
[No subject] - by SUNDHAL - 04-17-2006, 02:55 AM
[No subject] - by தூயா - 04-17-2006, 03:01 AM
[No subject] - by SUNDHAL - 04-17-2006, 03:07 AM
[No subject] - by கந்தப்பு - 04-17-2006, 03:10 AM
[No subject] - by தூயா - 04-17-2006, 03:20 AM
[No subject] - by கந்தப்பு - 04-17-2006, 03:22 AM
[No subject] - by கந்தப்பு - 04-17-2006, 03:24 AM
[No subject] - by தூயா - 04-17-2006, 03:25 AM
[No subject] - by தூயா - 04-25-2006, 07:01 AM
[No subject] - by putthan - 04-30-2006, 01:12 AM
[No subject] - by தாரணி - 04-30-2006, 02:55 AM
[No subject] - by தூயா - 04-30-2006, 06:39 AM
[No subject] - by SUNDHAL - 04-30-2006, 07:08 AM
[No subject] - by tamilini - 04-30-2006, 10:28 AM
[No subject] - by வெண்ணிலா - 04-30-2006, 02:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)