12-30-2005, 10:28 PM
அப்பாடா இப்பத்தான் வேலயால வந்தனான். வந்த உடனையும் யாழை மீட்டு(மீட்டி) பார்ப்பம் எண்டு ஓடோடி வந்தால். இனிப்பான செய்தியொன்றோடு குருவிகள் பறப்பத கண்டு எந்தன் மனம் ஆர்பரிக்குதல்லோ. அதுதான் விசயம் தமிழ்நாட்டில் தங்களின் உறவுகளிற்காய் ஆர்ப்பரித்த அன்பு உள்ளங்கள் பற்றிய செய்தியை படித்து. ம்ம்ம்ம் இப்படி தமிழன் ஒற்றுமையாய் எப்போதும் எதிலும் இருந்தால் ஏன் எந்த ஓனாயாவது ஊளையிடப்போகுது, இல்லை கடித்து குதறப்போகுது. கண்கள் கலங்கி கண்ணீர் வருகுது. அன்பினைக் கொட்டுகின்றோம் இப்படியாவது எங்களைப்பற்றி எங்கள் உறவுகள் அன்புகாட்டுதற்கு தமிழ்நாட்டில் இடம் கிடைத்ததற்காய்.

