12-30-2005, 12:54 AM
லங்கா சிறி மட்டுமல்ல நிதர்சனம் மற்றும் சில தளங்கள் புதினத்திலிருந்தும் செய்திகள் கொப்பியடித்து போடுகிறார்கள்.
அஜீவன் நீங்கள் கூறுவது போல தமிழ்நெட், சங்கதி, பதிவு, புதினம் ஆகியன தாமாகவே சில செய்திகளை சேகரித்து வெளியிடுகிறார்கள். சிலவேளை சங்கதி, பதிவும் கொப்பியடித்துத்தான் போடுகிறார்கள்.
ஒரு இணையத்தளத்திலிருந்து எடுத்து போடுகிற படங்கள், செய்திகளுக்கு நன்றி போடுவதால் நாம் எந்த வகையில் தரம் தாழ்ந்து விடுகிறோம்?
ஒரு செய்தியை மொழிபெயர்ப்பதற்கு நேரம் செலவழிக்கத்தானே வேண்டும்?
செய்தியை உறுதிப்படுத்த தொலைபேசி கட்டணம் யார் அவர்களுக்கு செலுத்துவார்கள்?
உயிராபத்துக்களின் மத்தியில் செய்தி சேகரிக்கிற நிருபர்களை நாம் மதிக்கின்றோமா?
இவற்றை ஒருகணம் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். செய்திகள் எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டும் என்று நீங்கள் கூறலாம். அதனைத்தான் யாவரும் விரும்புவார்கள். ஏன் நன்றி என்ற வார்த்தைகளை அந்த அந்த இணையத்தள்த்திற்கு நாம் கொடுக்கக்கூடாது?
உதாரணத்திற்கு ஆங்கில இணையத்தளங்களில் பாருங்கள். அவர்கள் மூலச் செய்தி எங்கே எடுத்தார்களோ அதன் பெயரை கீழே இணைத்துவிடுவார்கள்.
ஒவ்வொருவருடைய உழைப்புக்கு மதிப்புக் கொடுங்கள். சிலர் தம்மை வருத்தித்தான் பலவிடயங்களை செய்கிறார்கள். நிதர்சனம் இணையத்தளம் ஏதோ மாமியார் வீட்டுச் சொத்து போன்று பதிவு, சங்கதி, புதினத்தின் செய்திகளை கொப்பியடித்து போடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் மேற்படி தளங்களிலிருந்து எடுத்து போட்டு அந்த தளங்கள் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் திருத்தினால் நிதர்சனம் அதுபற்றி கவலைப்படுவதே இல்லை.
இது செய்திக்கு ஆரோக்கியமானதல்ல.
அதேவேளை இந்த களத்தில் செய்திகளை எடுத்துப் போடுபவர்களும் நம்பகத்தன்மையுள்ள இணையத்தளங்களின் செய்திகளையும் உண்மையான மூலம் யாருடையது என்று இனம் கண்டு இதில் போடுங்கள். அப்போதுதான் கொப்பியடித்து தமது செய்திகளாக போடுபவர்களின் வண்டவாளம் தெரியவரும்.
தமிழ் ஊடகத்துறை தற்போது புலம்பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது. அதனை சரியான முறையில் நாம் ஊக்குவிக்க வேண்டும். பிறர் செய்திகளை தமது செய்திகளாக போடும் இணையத்தளங்களை புறக்கணியுங்கள்.
இது எவர்மீதும் உள்ள தனிப்பட்ட கோப தாபங்களினால் எழுதப்பட்டதல்ல. தமிழ் ஊடகத்துறை ஆரோக்கியமாக வளர என்கிற ஆதங்த்தில் எழுதுகின்றேன்.
அஜீவன் நீங்கள் கூறுவது போல தமிழ்நெட், சங்கதி, பதிவு, புதினம் ஆகியன தாமாகவே சில செய்திகளை சேகரித்து வெளியிடுகிறார்கள். சிலவேளை சங்கதி, பதிவும் கொப்பியடித்துத்தான் போடுகிறார்கள்.
ஒரு இணையத்தளத்திலிருந்து எடுத்து போடுகிற படங்கள், செய்திகளுக்கு நன்றி போடுவதால் நாம் எந்த வகையில் தரம் தாழ்ந்து விடுகிறோம்?
ஒரு செய்தியை மொழிபெயர்ப்பதற்கு நேரம் செலவழிக்கத்தானே வேண்டும்?
செய்தியை உறுதிப்படுத்த தொலைபேசி கட்டணம் யார் அவர்களுக்கு செலுத்துவார்கள்?
உயிராபத்துக்களின் மத்தியில் செய்தி சேகரிக்கிற நிருபர்களை நாம் மதிக்கின்றோமா?
இவற்றை ஒருகணம் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். செய்திகள் எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டும் என்று நீங்கள் கூறலாம். அதனைத்தான் யாவரும் விரும்புவார்கள். ஏன் நன்றி என்ற வார்த்தைகளை அந்த அந்த இணையத்தள்த்திற்கு நாம் கொடுக்கக்கூடாது?
உதாரணத்திற்கு ஆங்கில இணையத்தளங்களில் பாருங்கள். அவர்கள் மூலச் செய்தி எங்கே எடுத்தார்களோ அதன் பெயரை கீழே இணைத்துவிடுவார்கள்.
ஒவ்வொருவருடைய உழைப்புக்கு மதிப்புக் கொடுங்கள். சிலர் தம்மை வருத்தித்தான் பலவிடயங்களை செய்கிறார்கள். நிதர்சனம் இணையத்தளம் ஏதோ மாமியார் வீட்டுச் சொத்து போன்று பதிவு, சங்கதி, புதினத்தின் செய்திகளை கொப்பியடித்து போடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் மேற்படி தளங்களிலிருந்து எடுத்து போட்டு அந்த தளங்கள் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் திருத்தினால் நிதர்சனம் அதுபற்றி கவலைப்படுவதே இல்லை.
இது செய்திக்கு ஆரோக்கியமானதல்ல.
அதேவேளை இந்த களத்தில் செய்திகளை எடுத்துப் போடுபவர்களும் நம்பகத்தன்மையுள்ள இணையத்தளங்களின் செய்திகளையும் உண்மையான மூலம் யாருடையது என்று இனம் கண்டு இதில் போடுங்கள். அப்போதுதான் கொப்பியடித்து தமது செய்திகளாக போடுபவர்களின் வண்டவாளம் தெரியவரும்.
தமிழ் ஊடகத்துறை தற்போது புலம்பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது. அதனை சரியான முறையில் நாம் ஊக்குவிக்க வேண்டும். பிறர் செய்திகளை தமது செய்திகளாக போடும் இணையத்தளங்களை புறக்கணியுங்கள்.
இது எவர்மீதும் உள்ள தனிப்பட்ட கோப தாபங்களினால் எழுதப்பட்டதல்ல. தமிழ் ஊடகத்துறை ஆரோக்கியமாக வளர என்கிற ஆதங்த்தில் எழுதுகின்றேன்.
S.Nirmalan

