12-29-2005, 11:09 PM
rajathiraja Wrote:சில இந்திய எதிர்ப்பு பதிவுகள் கண்டேன். உங்கள் போரட்த்தை எதாவது இந்திய தமிழன் கிண்டல் செய்தது உண்டா? பின் ஏன் சில பேருக்கு எதும் தெரியாமல் இந்திய ஒற்றுமயை சீண்டி பார்க்கும் ஆசை.
என் நாட்டை பரன்கியர் உருவாக்கினர் அல்லது எதோ ஊர் பேர் தெரியாதவர் உருவாக்கினர்.சரியா?? இந்திய நாட்டை பற்றி பேசுவோர் ராமயணம், மகா பாரதம் போண்ற இதிகாசஙளும் அரிந்து பேச வேண்டும். வட்க்கே காழ்மீர் முதல் தெற்கே குமரி வரை வந்தே மாதரம் என்று குரல் கேட்டால் சிலிர்திது வணக்கம் செய்யும் பூமி.
நாங்கள் அரசியில்வாதிகள் பற்றி கவலை படுவதில்லை. ஆனால் என் தாய் இந்தியாவிற்கு ஆபத்து என்றால் உயிரை துணிந்து கொடுக்கும் மனிதர்கள் நாஙகள்.
கார்கிலில் அன்னைக்கு சோதனை என்ற போது உயிர் கொடுதத்து பன்ஞாபி காரன் மட்டுமா? இங்கே சரவணன்,அதித்யா,குலசேகரன் செய்தா தியாக்ஙள் வரலாறிர்ல் மறக்க முடியுமா?
இனம் வேறு மொழி வேறு ஆனால் இந்தியன் என்பதில் எங்கலுக்கு பெருமிதம். அதை தயவு செய்து கொச்சை படுத்தாதீர்.
AJeevan Wrote:<img src='http://img334.imageshack.us/img334/8243/mo5fn.gif' border='0' alt='user posted image'>
-தினக்குரல்
<span style='color:brown'>இனிய ராஜாதிராஜா
இந்த கார்டூன்தான் உறுத்தியது என நினைக்கிறேன்.
இதைவிட வேறு சில தாக்கங்களும் அடக்கமாக இருக்கலாம்.
இருந்தாலும் இந்த கார்டூனுக்கு என் பார்வையை வைப்பது சில வேளைகளில் உங்களைப் போலவே வேறு பலருக்கும் பயன் தரலாம்.
ஒரு கலையை ரசிக்க அந்த கலையை நுகரவாவது தெரிந்திருக்க வேண்டும்.
அல்லாவிடில் அது தப்பாகவேதான் தெரியும்.
<b>ஆறாத காயம்</b> என்ற தலைப்பே ஒரு பெரிய கதை சொல்கிறது:-
- இலங்கை அரசியலில் இந்தியா மூக்கை நுழைத்தது முதல் அவமானப்பட்டது வரை இதில் அடக்கம்.
- எந்தவொரு நாட்டிலும் அரசியல் தலைவர்கள் மாறலாம்
ஆனால் அந்த நாட்டின் பாதுகாப்பு குறித்த அதிகாரிகள் கொள்கைகள் மாறுவது மிக அரிது.
இவர்கள்தான் வெளி நாட்டுக் கொள்கைகள் தொடர்பாக முடிவெடுக்க தலைவர்களுக்கு ஐடியா கொடுப்பது.
இவை சரியாவது போலவே தவறுவதுமுண்டு.
இது ஆனானப்பட்ட அமெரிக்கா முதல் கொண்டு அனைத்து வல்லரசுகளுக்கும் அப்படியாக நினைக்கும் நாடுகளுக்கும் பொருத்தும்.
இலங்கையின் வளர்ச்சி மீது உண்மையிலேயே இந்தியா பொறாமைப்பட்ட காலம் ஒன்று உண்டு.
அதாவது இலங்கையை அடிப்படையாக வைத்தே லீ குவான் யூ அவர்கள் சிங்கப்பூரை உருவாக்கினார்.
இது தெரியாதோர் ஆசிய அரசிலைப் பேசுவது கேலிக்குரியது.
இலங்கையின் வளர்ச்சி எப்படிப் பட்டதாக இருந்ததென்றால்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கள்ளமாக (திருட்டுத்தனமாக) வந்தவர்கள் ஏராளம்.
இவர்களை கள்ளத் தோணிகள் என அழைத்தார்கள்.
அன்று இலங்கையின் ஒரு ரூபாய் மாற்றினால் இந்தியாவில் இரண்டு ரூபாய் கிடைக்கும்.
இன்று இது தலை கீழாக மாறியுள்ளது.
அதாவது பொருளாதார வீழ்ச்சியும் வளர்ச்சியும்.
இப்படியான கால கட்டத்தில்தான் தமிழர் உரிமை மறுப்பு பிரச்சனைகளின் ஆரம்பம் தொடங்கியது.
சுயாட்சி எனத் தொடங்கியவை தனி நாடு வரை போய் விட்டது.
எந்த ஒரு மனிதனும் தன் சுயநலமின்றி மற்றுமொருவனுக்கு உதவ முன் வர மாட்டான்.
முதலில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் போராட்டங்களை விட
1983 இலங்கை கலவரம் உலக நாடுகளின் கண்களை உறுத்தியது.
இதற்கு மற்றுமொரு காரணமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள்
இலங்கையின் மலை நாட்டில் இருப்பதாகவும்
அவர்களும் பாதிக்கப் படுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டாலும்.
அதுவும் ஒரு போலிச் சாட்டுதான்...........
அது உண்மையானால் சிறிமா - சாத்திரி உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு குடி பெயர்ந்த மக்களது
வேதனையான வாழ்கை தொடர்ந்தது ஏன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மை நிலை
அமெரிக்க வல்லரசு இலங்கையில் கால் பதிப்பதற்கு முன்
இந்தியா கால் பதித்தே ஆக வேண்டிய நிலை
இந்தியாவுக்கு ஏற்பட்டது.
இதுவே இந்தியாவின் பரந்த முதல் தலையீடு.......
அதன் பின்னர் போராளிகளுக்கு பயிற்சி...............
இது போன்ற உதவிகள்...................
இந்திரா காந்தி அவர்களது மறைவுக்குப் பின்னரே
இந் நிலமை தலை கீழாகியது.
இலங்கையின் முதல் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன
தனது நரித்தனத்தால்
ராஜீவ் காந்தி அவர்களை தனது சுயநலத்துக்காக அழகாகவே பாவித்தார்.
அது ராஜீவ் காந்திக்கோ ஏனைவர்களுக்கோ இறுதி வரை
இது புரியவே இல்லையா
அல்லது முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என தொடர் சகதிக்குள் மூழ்கினரா என்பது
அவர்களுக்கே வெளிச்சம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் ஒரு முறை
\"எனது அரசிலின் அனுபவமும் ராஜீவின் வயதும் ஒன்று\"
என ஜே.ஆர்.ஜயவர்தன நக்கலாக (கேலியாக) சொன்னதை யாராலும் மறக்க முடியாதது.
இதுவே அவமானம்தான்.
இதுதான் இந்தியாவை தன் வலையில் சிக்க வைத்ததை நிரூபித்த அவரது முதல் பேச்சு.
பின்னர் இந்தியாவை எதிர்த்த பிரேமதாஸாவின் ஆதரவு சிப்பாய் ஒருவரால் இலங்கைக்கு வந்த ராஜீவை தன் நாட்டில் வைத்து அடி வாங்கிக் கொடுத்தது
மற்றுமொரு அவமானம்.
இங்கே இந்திய மக்கள் உணராத ஒன்றை கூற வேண்டியது எனது கடமை.
உதாரணமாக சிங்கப்பூரில் சீனர் - மலாயர் - இந்தியர் - பறங்கியர் என பல்லின மக்கள் வாழ்கிறார்கள்.
போலீசார் எங்காவது ரோந்து அல்லது ஒரு குழுவாக செல்லும் போது
சீனர் - மலாயர் - இந்தியர் (எனக்) கலந்த மூவர் அடங்கிய பாதுகாப்புக் குழுவே செல்லும்.
தனியாக செல்ல தடை.
காரணம் ஒரு இனத்தவர் மற்றுமொரு இனத்தவரை பாதிப்படையக் கூடிய ஒரு முடிவைத் தடுப்பதற்காகவே இந்த முறை.
ஆனால் இந்தியாவின் பஞ்சாபில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு தமிழ் நாட்டு ரெஜமென்டை அனுப்புவதும்.
தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு பஞ்சாப் - அசாம் ரெஜமென்டை அனுப்புவதும் ஏன்?
மொழி தெரியாதவனால் எப்படி உதவ முடியும்?
இதுவெல்லாம் உதவுவதற்காக அல்ல.................
இது ஒருவகை அரசியல்.
ஒரு இனத்தின் வேதனையை அந்த இனத்தவனால்தான் புரிந்து கொள்ள - உதவ முடியும்.
இது அந்த இனத்தவனை வெறுக்க வைக்காதா?
துப்பாக்கியோடு வருபவனுக்கு நான் அவனில்லை என்று சொல்ல அவனது மொழி இவனுக்கோ அல்லது
அதை விளங்கிக் கொள்ள இவனது மொழி அவனுக்கோ
தெரிய வேண்டுமா? இல்லையா?
...............................................?
<b>இதை எந்த ஒரு இந்தியனாலும் யோசிக்கவே முடியாது</b> :!:
அதுபோலவே
இலங்கைக்கு சமாதானப் படையாக
பஞ்சாபிகளையும் ஏனைய சமூகத்தவர்களையும் கொண்ட இராணுவத்தை அனுப்பினார்கள்.
4 - 5 தமிழர்கள் போதுமானதல்ல.
இந்திய தமிழ் - இலங்கை தமிழ் கூட புரியாத அநேகர் படும் பாட்டை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.
சீக்கியரது கோயிலுக்குள் தமிழ் நாட்டு ரெஜமென்ட் செய்த வீரம்
சீக்கியர் மனதில் ஆறாத வடுவாகவே இருந்தது.
தமிழ் நாட்டுக்காரனிடம் வாங்க வேண்டிய பழி தீர்த்தலை ஈழத் தமிழனிடம் காட்டினான்.
காரணம் இவனும் மதராசிதானே?
இவனும் அவனின் தொப்புள் கொடி உறவுதானே?
இவனும் தமிழன்தானே?
இதை ஒரு சீக்கியன் என்னிடம் நேரடியாகவே சொன்னான்.
அவனுக்கு ஈழத் தமிழனும் இந்தியத் தமிழனும் ஒருவனாகவே அப்போது தென்பட்டதாம். :twisted: :?:
இதை விட நம்பிக்கையுடன் சென்ற ஒருவரை அவமதித்த நம்பிக்கைத் துரோகத்துக்கான பழி வாங்கலே ஒரு மறக்க முடியாத வடுவாகியது. :!: :?: :!:
அதை நான் தொடர் கதையாக்க விரும்பவில்லை. :wink:
இந்நிகழ்வு மக்கள் திலகம் MGR அவர்கள் மனதிலும் ராஜீவை வெறுக்க வைத்தது.
MGR இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்
ராஜீவ் சென்னையில் அமைந்துள்ள நேரு சிலை திறப்பு விழாக்கு வந்து நேரு சிலையைத் திறப்பதாக இருந்தது.
MGR தன்னால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது
உடல் நலமில்லை என முதலில் மறுத்தார்.
ராஜீவ் எப்படியாவது வர வேண்டுமென்று பிடிவாதம் செய்து அழுத்தம் கொடுத்த காரணத்தால் மட்டுமல்ல
அன்றைய அரசியல் நிலை காரணமாகவும்
வேண்டா வெறுப்போடு MGR
அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
<b>அதுவே MGR அவர்களது இறுதி பொது நிகழ்வு.</b>
அதுவும் MGR அவர்களது சாவுக்கு வித்திட்டதாக MGR வீட்டிலிருந்தவர்கள் சொன்னது என்னால் மறக்கவே முடியாதவை.
விழாவிலிருந்த வந்த அவரால் அன்று தூங்கவே முடியவில்லை.
அதன் பிறகே அனைத்து ஈழத்தமிழனுக்கும் வரமாக இருந்த
அந்த தெய்வத்தின் இழப்பு ஏற்பட்டது.
அவரைப் போல் ஈழத் தமிழனை அரவணைத்த ஒருவரை இனி நான் காண முடியாது என்பேன்.
இங்கே ஜே.ஆர் வடிவமும் ராஜீவ் வடிவமும் புரியலாம் :!: .
:!: சமாதானப் பேச்சுகளோடு <b>ரணில்</b>
இலங்கையின் திருகோணமலை எண்ணை சேமிப்பு தளங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுத்தது
ஏதாவது பிரச்சனை வரும் போது இந்திய இராணுவம் வரட்டுமே எனும் கனவில்தான்?
இப்போதய மகிந்த
இந்தியாவே வெறுக்கும்
இந்தியாவை வெளியேற்றிய ஜே.வீ:பீயினருடன் இருந்து கொண்டு
அங்கே வந்து என்ன உதவி கேட்கிறார்கள்?
<b>ஒரு மாட்டுக்கு ஒரு சூடு போதும்</b> என சொல்வதைக் கேட்டதுண்டு.
அது மாதிரி ஒரு கருத்தே இந்த காட்டூன் சொல்லும் கதையும்.
புரியுதா?</span>

