12-29-2005, 12:10 PM
எரிக் சொல்ஹெய்முக்குப் பதிலாக புதிய சிறப்புத் தூதுவர்: நோர்வே வெளியுறவு அமைச்சகம்
Wednesday, 28 December 2005
--------------------------------------------------------------------------------
இலங்கைக்கான சமாதான சிறப்புத் தூதுவராக புதிதாக ஒருவரை அல்லது சமாதானத் தூதுக்குழுவை விரைவில் நியமிக்க உள்ளதாக நோர்வே வெளியுறவு அமைச்சகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
சமாதான சிறப்புத்தூவராக புதிய ஒருவர் நியமிக்கப்படவிருக்கின்ற போதும் தொடர்ந்தும் எரிக் சொல்ஹெய்ம் சமாதான முயற்சிகளுக்கான தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவார் என்றும் நோர்வெ வெளிவிவகார அமைச்சு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயில் பதவியேற்றுள்ள புதிய கூட்டணி அரசாங்கத்தில் சோசலிச இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கின்றார்.
[color=orange]இந்நிலையில் அமைச்சுப் பணிகளோடு சமாதான முன்னெடுப்பில் அனுசரணையாளராக முன்னரைப்போல் முனைப்போடு செயற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவடைந்துள்ளதாக நோர்வே அரசு கருதுவதாகத் தெரிகிறது.
நெருக்கடிக்குள்ளாகி முடங்கிப்போயிருக்கும் சமாதான முயற்சிகளை உடனடியாக தொடங்க வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலேயே நோர்வே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைத் தீவின் சமாதான முன்னெடுப்புக்களில் முனைப்போடு செயற்பட்டு வரும் எரிக் சொல்ஹெய்மை சிங்கள ஆட்சியாளர்களும் இனவாதக் கட்சிகளும் பேரினவாத ஊடகங்களும் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து வருகின்றன என்பதும், எரிக் சொல்ஹெய்மை வெளியேற்ற வேண்டும் என்பதில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தீவிரம் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.
Puthinam
Wednesday, 28 December 2005
--------------------------------------------------------------------------------
இலங்கைக்கான சமாதான சிறப்புத் தூதுவராக புதிதாக ஒருவரை அல்லது சமாதானத் தூதுக்குழுவை விரைவில் நியமிக்க உள்ளதாக நோர்வே வெளியுறவு அமைச்சகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
சமாதான சிறப்புத்தூவராக புதிய ஒருவர் நியமிக்கப்படவிருக்கின்ற போதும் தொடர்ந்தும் எரிக் சொல்ஹெய்ம் சமாதான முயற்சிகளுக்கான தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவார் என்றும் நோர்வெ வெளிவிவகார அமைச்சு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயில் பதவியேற்றுள்ள புதிய கூட்டணி அரசாங்கத்தில் சோசலிச இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த எரிக் சொல்ஹெய்ம் சர்வதேச அபிவிருத்தி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கின்றார்.
[color=orange]இந்நிலையில் அமைச்சுப் பணிகளோடு சமாதான முன்னெடுப்பில் அனுசரணையாளராக முன்னரைப்போல் முனைப்போடு செயற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவடைந்துள்ளதாக நோர்வே அரசு கருதுவதாகத் தெரிகிறது.
நெருக்கடிக்குள்ளாகி முடங்கிப்போயிருக்கும் சமாதான முயற்சிகளை உடனடியாக தொடங்க வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலேயே நோர்வே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைத் தீவின் சமாதான முன்னெடுப்புக்களில் முனைப்போடு செயற்பட்டு வரும் எரிக் சொல்ஹெய்மை சிங்கள ஆட்சியாளர்களும் இனவாதக் கட்சிகளும் பேரினவாத ஊடகங்களும் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து வருகின்றன என்பதும், எரிக் சொல்ஹெய்மை வெளியேற்ற வேண்டும் என்பதில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தீவிரம் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.
Puthinam

