12-29-2005, 12:10 PM
Selvamuthu Wrote:அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
புலம்பெயர் வாழ்விலே நாம் பல நன்மைகளையும் பெற்றிருக்கிறோம் தீமைகளையும் பெற்றிருக்கிறோம். எம்மில் பலர் பிறந்தது எங்கோ வாழ்வது எங்கோ. இதேவேளையில் எம் வருங்காலச் சந்ததியினர்களுக்கு எமது மொழியையும்இ பண்பாடுகளையும் புகட்டுவதற்கு பலவழிகளில் முயற்சிக்கிறோம். வேகமாக வளர்ந்துவருகின்ற இந்தக்கணினி யுகத்திலே இணையத்தளங்களினு}டாக இளம் சமூகத்தினர் எத்தனையே விடயங்களை வீட்டில் இருந்தபடியே அறியக்கூடியதாக இருக்கின்றது. அது எமது தமிழ் சமூகத்தினருக்கும் பொருந்தும். ஆனால் இந்த இணையத்தளங்களினால் பல இளைஞர்கள் நன்மைடைகிறார்கள் என்றும் அதேவேளையில் பலர் சீரழிந்துபோகிறார்கள் என்றும் பெற்றோரும் மற்றோரும் குற்றம் கூறுவதையும் நாம் அறிவோம். அதற்கான விவாதத்திற்கென களத்திலே குதித்திருக்கும் இரு அணிகளும் தயாராகிவிட்டார்கள். முதலில் நன்மையடைகின்றார்கள் என்ற அணியின் தலைவர் குருவிகள் அவர்களை தனது அணிக்கான கருத்துக்களை முன்வைக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.
நீங்கள் பாடம் சம்பந்தமான வேலைகள் இருப்பதாகக் கூறுவதும் தெரிகின்றது. அடுத்த தலைவரைத் தெரிவுசெய்யும்வரை உங்கள் அணிக்கு உரம் சேர்க்கும் கருத்துக்களை முன்வைக்கும்படி மீண்டும் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.
ம் செல்லமுத்து ஆசிரியர் உருக்கமாய் எல்லாரையும் அழைத்துவிட்டார் எங்கே அணித்தலைவர்கள் புகுந்து விளையாடுங்கள். செல்லமுத்து ஆசிரியருக்கு உதவியாய் நானும் ரசிகையும் இருந்து பாக்கிறம். குழப்படி விட்டா இந்தப்பகுதியில் இருக்கிற மட்டுறுத்தினர்களிடம் பெரிய கத்தியிருக்கில்லா அவர்களையும் துணைக்களைக்கிறோம் (யாழ்பாடி மற்றும் யாழ்பிரியா) உங்களத்தான். இனிதே ஆரம்பமாகட்டும் உங்கள் விவாதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடியேன் இதில் ஒரு பயிற்சி எடுத்துக்கொள்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

