12-27-2005, 11:08 AM
மகிந்த ராஜபக்ச விரிக்கிற வலையில் இந்தியா சிக்கிவிடக் கூடாது: கொளத்தூர் தா.செ.மணி வேண்டுகோள்!
[செவ்வாய்க்கிழமை, 27 டிசெம்பர் 2005, 07:05 ஈழம்] [புதினம் நிருபர்]
அன்று ஜெயவர்த்தன விரித்த வலையில் சிக்கியதைப் போல் இன்று மகிந்த ராஜபக்சே விரிக்கிற வலையில் இந்திய அரசு சிக்கிவிடக் கூடாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மகிந்த ராஜபக்சவின் இன்றைய இந்திய வருகை நம்மில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த போர் விடுதலைப் புலிகள் தாங்களாகவே முன்வந்து அறிவித்த போர் நிறுத்தத்தின் மூலமாக முடிவுக்கு வந்தது. அதை நோர்வே ஏற்பாட்டில் சிறிலங்கா அரசை ஏற்கச் செய்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட செய்திகளான
உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கிற மக்கள் வாழும் இடங்களிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்வது
இதர தமிழ்க் குழுக்களின் ஆயுதங்களைக் களைவது
போன்றவற்றைக் கூட நிறைவேற்றாத காரணத்தில் பல்வேறு அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கிறது.
அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பல தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும், ஆதரவாளர்களும், பத்திரிகையாளர்களும், அப்பாவிப் பொதுமக்களும், போராளிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் இராணுவ வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
பின்னடைந்து கொண்டிருக்கிற அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற இந்தவேளையில் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வருகிறார்.
ஏற்கனவே அமைதிப் பேச்சுகளை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிற நோர்வேயின் ஏற்பாட்டில் அது தொடருவதுதான் அது நல்ல விளைவை ஏற்படுத்தும் என்ற நிலையில்,
இப்போது ஆட்சித் தலைமை ஏற்றிருக்கிற ராஜபக்ச,
ஆசிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்று சொல்வதும்
ஒற்றையாட்சி என்ற அடிப்படையில் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்று சொல்வதும்
அமைதி முயற்சியைக் குலைப்பதாகத்தான் இருக்கிறதே தவிர அவர் அமைதி முயற்சியில் உண்மையான ஈடுபாட்டுடன் உள்ளார் என்பதைக் காட்டவில்லை.
அப்படிப்பட்ட ராஜபக்ச இன்று இந்தியாவுக்கு வருகிறார்.
இந்தியாவை தனது சூழ்ச்சிப் பொறிக்குள் சிக்க வைக்கிற முயற்சியாகவே மகிந்த ராஜபக்சவின் பயணத்தை நாம் கருத வேண்டியிருக்கிறது.
ஏற்கெனவே கடந்த காலத்தில் பாதிப்புக்குள்ளான ஈழத் தமிழர்களுக்குப் "பூமாலை" என்ற நடவடிக்கை மூலம் உதவச் சென்ற இந்தியாவையே விடுதலைப் புலிகளுடன் மோத வைத்து- தன்னுடைய இராணுவத்தைப் பாதுகாப்பாக ஒதுக்கி வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தை விடுதலைப் புலிகளோடு மோத வைத்த முயற்சி - அன்று ஜெயவர்த்தனவின் வருகையின் மூலம் நடந்ததைப் போலவே தானும்
இப்போதும்
இந்தியாவை அந்த சிக்கல்களில் ஈடுபடுத்தும் முயற்சியாகவே நாம் மகிந்த ராஜபக்சவின் பயணத்தைக் கருதுகிறோம்.
இந்த நிலையில் இங்கு இந்திய மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,
தனது குறைந்தபட்ச பொதுவேலைத்திட்டத்தில் தான் ஏற்றுக்கொண்டுள்ள படி
ஈழத் தமிழர் பிரச்சனையை கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் தீர்வு காண உதவுவோம் என்ற அடிப்படையிலும்
நோர்வே நாட்டின் ஏற்பாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற அமைதி முயற்சிகளுக்கு தாங்கள் ஒத்துழைப்போம் என்று கூறிய அந்த நிலையில் உறுதியாக நின்று மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு நல்ல சுமூகமான தீர்வு ஏற்பட உதவியாக இருக்க வேண்டும்.
ராஜபக்ச விரிக்கிற வலையில் இந்தியா சிக்கிவிடக் கூடாது என்பதை நாம் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறோம்.
http://www.eelampage.com/?cn=22883
[செவ்வாய்க்கிழமை, 27 டிசெம்பர் 2005, 07:05 ஈழம்] [புதினம் நிருபர்]
அன்று ஜெயவர்த்தன விரித்த வலையில் சிக்கியதைப் போல் இன்று மகிந்த ராஜபக்சே விரிக்கிற வலையில் இந்திய அரசு சிக்கிவிடக் கூடாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மகிந்த ராஜபக்சவின் இன்றைய இந்திய வருகை நம்மில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த போர் விடுதலைப் புலிகள் தாங்களாகவே முன்வந்து அறிவித்த போர் நிறுத்தத்தின் மூலமாக முடிவுக்கு வந்தது. அதை நோர்வே ஏற்பாட்டில் சிறிலங்கா அரசை ஏற்கச் செய்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட செய்திகளான
உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கிற மக்கள் வாழும் இடங்களிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்வது
இதர தமிழ்க் குழுக்களின் ஆயுதங்களைக் களைவது
போன்றவற்றைக் கூட நிறைவேற்றாத காரணத்தில் பல்வேறு அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கிறது.
அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பல தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும், ஆதரவாளர்களும், பத்திரிகையாளர்களும், அப்பாவிப் பொதுமக்களும், போராளிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் இராணுவ வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
பின்னடைந்து கொண்டிருக்கிற அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற இந்தவேளையில் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வருகிறார்.
ஏற்கனவே அமைதிப் பேச்சுகளை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிற நோர்வேயின் ஏற்பாட்டில் அது தொடருவதுதான் அது நல்ல விளைவை ஏற்படுத்தும் என்ற நிலையில்,
இப்போது ஆட்சித் தலைமை ஏற்றிருக்கிற ராஜபக்ச,
ஆசிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்று சொல்வதும்
ஒற்றையாட்சி என்ற அடிப்படையில் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்று சொல்வதும்
அமைதி முயற்சியைக் குலைப்பதாகத்தான் இருக்கிறதே தவிர அவர் அமைதி முயற்சியில் உண்மையான ஈடுபாட்டுடன் உள்ளார் என்பதைக் காட்டவில்லை.
அப்படிப்பட்ட ராஜபக்ச இன்று இந்தியாவுக்கு வருகிறார்.
இந்தியாவை தனது சூழ்ச்சிப் பொறிக்குள் சிக்க வைக்கிற முயற்சியாகவே மகிந்த ராஜபக்சவின் பயணத்தை நாம் கருத வேண்டியிருக்கிறது.
ஏற்கெனவே கடந்த காலத்தில் பாதிப்புக்குள்ளான ஈழத் தமிழர்களுக்குப் "பூமாலை" என்ற நடவடிக்கை மூலம் உதவச் சென்ற இந்தியாவையே விடுதலைப் புலிகளுடன் மோத வைத்து- தன்னுடைய இராணுவத்தைப் பாதுகாப்பாக ஒதுக்கி வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தை விடுதலைப் புலிகளோடு மோத வைத்த முயற்சி - அன்று ஜெயவர்த்தனவின் வருகையின் மூலம் நடந்ததைப் போலவே தானும்
இப்போதும்
இந்தியாவை அந்த சிக்கல்களில் ஈடுபடுத்தும் முயற்சியாகவே நாம் மகிந்த ராஜபக்சவின் பயணத்தைக் கருதுகிறோம்.
இந்த நிலையில் இங்கு இந்திய மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,
தனது குறைந்தபட்ச பொதுவேலைத்திட்டத்தில் தான் ஏற்றுக்கொண்டுள்ள படி
ஈழத் தமிழர் பிரச்சனையை கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் தீர்வு காண உதவுவோம் என்ற அடிப்படையிலும்
நோர்வே நாட்டின் ஏற்பாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற அமைதி முயற்சிகளுக்கு தாங்கள் ஒத்துழைப்போம் என்று கூறிய அந்த நிலையில் உறுதியாக நின்று மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு நல்ல சுமூகமான தீர்வு ஏற்பட உதவியாக இருக்க வேண்டும்.
ராஜபக்ச விரிக்கிற வலையில் இந்தியா சிக்கிவிடக் கூடாது என்பதை நாம் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறோம்.
http://www.eelampage.com/?cn=22883

