12-26-2005, 05:45 PM
முகத்தார் என்ன நீங்கள் இப்படி சலித்துக் கொள்ளுறியள். யாழ்ப்பாணத்தை எடுங்கோ, ஊர்சண்டை குத்து வெட்டு என்று சடைபிடிக்கிறமோ இல்லையோ? அதுவும் ஒருவகை பிரதேசவாதம் தான். குழப்பத்தில் அவலத்தில் இருக்கும் பலவீனமான மனங்கொண்டவர்களை ஏதே ஒரு வழியால் பிரித்தாள நினைத்தால் நடத்தி முடிக்கலாம். அதேபோல் தான் மட்டக்களப்பிலையும் நடந்தது. அதுவும் மிகவும் திட்டமிட்டு நயவஞ்சகமாக பிரச்சாரங்கள் பல தரப்பாரின் உதவியுடன் கட்டவிள்த்து விடப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அவாறான மிக ஆழமான தூண்டுதலுக்கு மத்தியிலும் இறுதியில் நடந்து முடிந்ததை பார்க்கும் போது மட்டக்களப்பு மக்கள் மிகவும் பக்குவத்தோடும் நிதானத்தோடும் வெற்றி கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
தென்தமிழீழத்தில் பொருளாதார முதலீடு என்பது, முதலாளித்துவ நோக்கோடு ஆக ஆரம்பத்தில் இருக்க முடியாது. அதாவது வினைத்திறன் இலாபநோக்கம் என்பன இருக்க வேணும் ஆனால் அவர்களின் உழைப்பை மூலப்பொருட்களை சுரண்டாது முதலீட்டில் கிடைக்கும் வருவாயை அந்தப் பிரதேசத்திற்கே (முக்கியமாக மனிதவளங்களில்) மீள்முதலீடு செய்யப்பட வேண்டும்.
எமது நிலையில் இருந்து கொண்டு சாப்பிட வழியில்லாட்டி பிச்சை எடுத்துச்சாப்பிடலாமே இல்லாட்டி ....... செய்து சாப்பிடலாமே என்று கருத்தளவில் சொல்லிவிடலாம். முதற்கண் பாமரமக்களிற்கு இனப்பற்று மொழிப்பற்று தேசியப்பற்று வருவதற்குரிய விளக்கங்கள் தொளிவுகள் எந்தளவிற்கு இருக்கும் என்றும் கொஞ்சம் யோசியுங்கள். இன்று மட்டக்களப்பில் எதிரிகளால் விலைபேசப்பட்டு துரோகிகளாகும் எம்மினத்தவர்களின் தவறில் ஒருபகுதி எம்மையும் சாரும் என்பது எனது தாழ்மையான கருத்து. யாழ்பாணத்திற்கு பணம் அனுப்பி தேர்கட்டுவோர், கோயில்களிற்கு பளிங்குக்கற்கள் போடுவோர் கொஞ்சம் சிந்தியுங்கள்.
தென்தமிழீழத்தில் பொருளாதார முதலீடு என்பது, முதலாளித்துவ நோக்கோடு ஆக ஆரம்பத்தில் இருக்க முடியாது. அதாவது வினைத்திறன் இலாபநோக்கம் என்பன இருக்க வேணும் ஆனால் அவர்களின் உழைப்பை மூலப்பொருட்களை சுரண்டாது முதலீட்டில் கிடைக்கும் வருவாயை அந்தப் பிரதேசத்திற்கே (முக்கியமாக மனிதவளங்களில்) மீள்முதலீடு செய்யப்பட வேண்டும்.
எமது நிலையில் இருந்து கொண்டு சாப்பிட வழியில்லாட்டி பிச்சை எடுத்துச்சாப்பிடலாமே இல்லாட்டி ....... செய்து சாப்பிடலாமே என்று கருத்தளவில் சொல்லிவிடலாம். முதற்கண் பாமரமக்களிற்கு இனப்பற்று மொழிப்பற்று தேசியப்பற்று வருவதற்குரிய விளக்கங்கள் தொளிவுகள் எந்தளவிற்கு இருக்கும் என்றும் கொஞ்சம் யோசியுங்கள். இன்று மட்டக்களப்பில் எதிரிகளால் விலைபேசப்பட்டு துரோகிகளாகும் எம்மினத்தவர்களின் தவறில் ஒருபகுதி எம்மையும் சாரும் என்பது எனது தாழ்மையான கருத்து. யாழ்பாணத்திற்கு பணம் அனுப்பி தேர்கட்டுவோர், கோயில்களிற்கு பளிங்குக்கற்கள் போடுவோர் கொஞ்சம் சிந்தியுங்கள்.

