12-24-2005, 12:34 PM
<b>பவாருடனான சந்திப்பு குறித்து இரகசியம் காக்கும் கங்குலி; அணியில் மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பு </b>
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சரத் பவார் சௌரவ் கங்குலி சந்திப்பு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விஷயங்கள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. பவார் இறங்கி வந்துள்ள நிலையில் இனி பயிற்சியாளர் சப்பலும் கருணை காட்டினால் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்கலாம்.
இந்திய அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட பெரும் சர்ச்சை வெடித்தது. கிரிக்கெட் சபைத் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் தூண்டுதலின் பேரில் தான் கங்குலி நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
டால்மியாவுக்கு நெருக்கமானவர் என்பதால் டில்லி டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டும் கங்குலிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
இதையடுத்து பவாருக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் வரத் தொடங்கின. சக அமைச்சர்கள்இ மத்திய அரசுக்கு ஆதரவு தரும் இடது சாரித் தலைவர்கள் எல்லாம் கங்குலியை மீண்டும் அணியில் சேர்க்குமாறு வலியுறுத்தினர்.
இதனால் வேறு வழியில்லாத பவார் இறங்கி வந்தார். கங்குலியை நேரில் சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண திட்டமிட்டார். இந்த அழைப்பை ஏற்ற கங்குலிஇ டில்லி சென்று பவாரை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.
இருவரும் சுமார் ஒரு மணிநேரம் இரகசிய அறையில் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். அணியின் வளர்ச்சி பற்றி பேசியதாக கூறப்பட்ட போதும்இ உண்மை விபரங்களைத் தெரிவிக்க இருவரும் மறுத்துவிட்டனர்.
இப்பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த கங்குலி மிகுந்த திருப்தியுடன் காணப்பட்டார். இதனால் பவாரின் சமரச முயற்சிக்கு வெற்றி கிடைத்து விட்டதாகக் கருதப்படுகிறது.
<b>வெளியே சொல்ல முடியாது'</b>
நேற்று முன்தினம் காலை கொல்கத்தா திரும்பிய கங்குலி பவாருடன் பேசியது முழுக்க முழுக்க தனிப்பட்ட விஷயம் என்றார். "இருவரும் தனிப்பட்ட விஷயங்களை விவாதித்தோம். இதை வெளியே சொல்ல முடியாது. பவார் சந்திப்புக்குப் பிறகுஇ அணியில் இருந்து நீக்கப்பட்ட அந்த உணர்வில் மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து உள்ளூர் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளேன். அணிக்கு மீண்டும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
<b>பதவியை பறித்தது டால்மியாவா?</b>
டில்லி சந்திப்பின் போது டால்மியாவின் மறைமுக சதி குறித்து பவார் விளக்கிக் கூறியுள்ளார். டால்மியா கோஷ்டி பதவியில் இருந்த காலத்தில் தான் கங்குலியின் கப்டன் பதவி பறிக்கப்பட்டது. இலங்கை தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார். ஆக நெருக்கமானவர் போல் காட்டிக் கொண்ட டால்மியா உண்மையிலேயே கங்குலிக்கு துரோகம் செய்துள்ளார். இப்போது கங்குலி நீக்கப்பட்ட பிரச்சினையைப் பெரிதாக்கி சுய விளம்பர தேட முயற்சிப்பதாக பவார் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே டால்மியாவிடம் இருந்து விலகி இருக்கும்படி கங்குலியை பவார் எச்சரித்துள்ளார். புதிய தலைமைக்குப் பணிந்து இனி பவார் சொற்படி கேட்பாரா கங்குலி!
தினக்குரல்
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சரத் பவார் சௌரவ் கங்குலி சந்திப்பு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விஷயங்கள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. பவார் இறங்கி வந்துள்ள நிலையில் இனி பயிற்சியாளர் சப்பலும் கருணை காட்டினால் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்புக் கிடைக்கலாம்.
இந்திய அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட பெரும் சர்ச்சை வெடித்தது. கிரிக்கெட் சபைத் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் தூண்டுதலின் பேரில் தான் கங்குலி நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
டால்மியாவுக்கு நெருக்கமானவர் என்பதால் டில்லி டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டும் கங்குலிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
இதையடுத்து பவாருக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் வரத் தொடங்கின. சக அமைச்சர்கள்இ மத்திய அரசுக்கு ஆதரவு தரும் இடது சாரித் தலைவர்கள் எல்லாம் கங்குலியை மீண்டும் அணியில் சேர்க்குமாறு வலியுறுத்தினர்.
இதனால் வேறு வழியில்லாத பவார் இறங்கி வந்தார். கங்குலியை நேரில் சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண திட்டமிட்டார். இந்த அழைப்பை ஏற்ற கங்குலிஇ டில்லி சென்று பவாரை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.
இருவரும் சுமார் ஒரு மணிநேரம் இரகசிய அறையில் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். அணியின் வளர்ச்சி பற்றி பேசியதாக கூறப்பட்ட போதும்இ உண்மை விபரங்களைத் தெரிவிக்க இருவரும் மறுத்துவிட்டனர்.
இப்பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த கங்குலி மிகுந்த திருப்தியுடன் காணப்பட்டார். இதனால் பவாரின் சமரச முயற்சிக்கு வெற்றி கிடைத்து விட்டதாகக் கருதப்படுகிறது.
<b>வெளியே சொல்ல முடியாது'</b>
நேற்று முன்தினம் காலை கொல்கத்தா திரும்பிய கங்குலி பவாருடன் பேசியது முழுக்க முழுக்க தனிப்பட்ட விஷயம் என்றார். "இருவரும் தனிப்பட்ட விஷயங்களை விவாதித்தோம். இதை வெளியே சொல்ல முடியாது. பவார் சந்திப்புக்குப் பிறகுஇ அணியில் இருந்து நீக்கப்பட்ட அந்த உணர்வில் மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து உள்ளூர் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளேன். அணிக்கு மீண்டும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
<b>பதவியை பறித்தது டால்மியாவா?</b>
டில்லி சந்திப்பின் போது டால்மியாவின் மறைமுக சதி குறித்து பவார் விளக்கிக் கூறியுள்ளார். டால்மியா கோஷ்டி பதவியில் இருந்த காலத்தில் தான் கங்குலியின் கப்டன் பதவி பறிக்கப்பட்டது. இலங்கை தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார். ஆக நெருக்கமானவர் போல் காட்டிக் கொண்ட டால்மியா உண்மையிலேயே கங்குலிக்கு துரோகம் செய்துள்ளார். இப்போது கங்குலி நீக்கப்பட்ட பிரச்சினையைப் பெரிதாக்கி சுய விளம்பர தேட முயற்சிப்பதாக பவார் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே டால்மியாவிடம் இருந்து விலகி இருக்கும்படி கங்குலியை பவார் எச்சரித்துள்ளார். புதிய தலைமைக்குப் பணிந்து இனி பவார் சொற்படி கேட்பாரா கங்குலி!
தினக்குரல்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

