12-24-2005, 05:42 AM
Sukumaran Wrote:தரப்டுத்தல் தனிச்சிங்களச் சட்டம்.. சிங்கள மொழித்திணிப்பு.. உங்களது ஆரம்ப வன்முறை.. தமிழ் மாணவா பேரவை.. பிரபாகரனது முதற்கொலை... காவல்துறை அதிகாரிகளின் கொலை.. இப்படி தற்ஸ்ரமிழ் இணையத்தளத்தில் தொடர்ச்சியாகக்கொட்டியது நினைவில்லையா? கனடாவிலிருந்து ஒரு அன்பர் தொடராக எழுதியிருந்தார்..அத்தொடரை புத்தகமாக வெளியிட உதவிகோரியது வரை அத்தனையையும் படித்திருக்கிறேன்..
உங்கள் தொடுப்பு உங்கள் நன்பர் கொடுத்த இந்திய சுதந்திரப்போராட்டம் போன்றிருக்கும் என்று உங்கள் பதில் செல்கின்றது..
இருந்தாலும் பித்தலாட்டம் அறிய நிச்சயமாக சென்று படிப்பேன்
[size=18]
இவர் குறிப்பிடும் படியாக தனிச்சிங்களச்சட்டமும், காவற்துறை கொலைகள் தானா, யாழ்நுலகத்தை எரிக்கத் து}ண்டியது, அல்லது வேலைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு, என்று ஆரம்பமானது?
தனிச்சிங்கள சட்டமூலம் கொண்டு வந்ததை நியாயப்படுத்தும் அயோக்கியத்தனம் இவரது வார்த்தைகளில் புலப்படவில்லையா? ஒரு மொழித்திணிப்புக்கும், விரும்பிப் படுப்பதற்கும் உள்ள முறைமை வேறு! சிங்கள மொழி மூலச் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு எல்லோரும் ஆங்கிலத்தில் தானே படித்தார்கள். அப்போது எம் மக்களிடம் எவ்வித கிளர்ச்சியும் ஏற்படவில்லையே ஏன்?
ஏன் என்றால் அது திணிக்கப்படாமல், கல்வி சார் தேவைக்கு அவசியமாக இருந்தது. ஆனால் எவ்வித பயனுமற்ற சிங்கள மொழியைத் தான் படிக்கவேண்டும் என்ற திணிப்பை, பிறகு ஆட்சிக்க வந்த பண்டாரநாயக்காவின் மகள் உணர்ந்து, சிங்களப்பாடசாலைகளில் தமிழும், தமிழ்பாடசாலைகளில் சிங்களமும் என்ற மாற்றத்தை கொண்டு வந்தார்.
( 2002 வரை பாடசாலை வாழ்வோடு தொடர்பு கொண்டவன் என்ற வகையில் என்னால் உத்தரவாதப்படுத்த முடியும்)
பிறகு வந்த ரணில் தப்புக்களை உணர்ந்து, இப்போது பல பாடசாலைகளில் ஆங்கில கல்வியை ஏற்படுத்தியிருப்பதை புலம்புவர் அறிவாரோ?
சிங்கள ஆட்சியாளரே தவறு என்று ஒத்துக் கொண்டு நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவகையில் இரு மொழியையும் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றபோது, இவர் கட்டாய சிங்கள மொழிக்கு ஆதரவு காட்டும் போக்கு தனிப்பட்ட வஞ்சத்தை தீர்ப்பதற்கான கருவியாக பாவிக்கின்றார் என்பதை தெளிவாக்குகின்றது.
மாற்றுக் கருத்து என்று மட்டமாக மற்றவர்களை வசைபாடும் எழுத்துக்களைப் படித்துவிட்டு, அதை நிகழ்கால வாழ்வில் ஒன்றித்து பார்ப்பது வேடிக்கை.
ஏட்டுக்கல்வியை மட்டுமே வைத்து, தனது யதார்தத்துக்கு பொருந்தாத கிறுக்குப்பிடித்த வார்த்தைகளால் எழுதும் இவருக்கு புரிய வைக்க முடியும் என்று கள உறுப்பினர்கள் யாராவது கருதுகின்றீர்களா?
[size=14] ' '

