Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நாடுதேடி...
#4
9 நவம்பர் 90 அதிகாலை ஒருமணி

காதலியின் நினைவில்இருந்த நான்
எப்போது கண்ணயர்ந்தேன்?..
தெரியவில்லை...

படகின்இயந்திரம் நின்றுவிட்டிருந்தது...

தாலாட்டு நின்றதால் தடுமாறிவிழித்த
குழந்தைகள்போல் எல்லோரும்
என்னாயிற்று என்று சுற்றுமுற்றும்
பார்த்து எழுந்துகொண்டோம்....

தூரத்தில் இருளில் இருளாய்
மரங்கள் தெரிந்தது...


"வந்துவிட்டோமா மண்டபம்?" என்று
யாரோ மகிழ்ச்சிபொங்கக் கேட்டார்கள்...

இல்லை இது இரணைதீவு....
எனப்படுகின்ற இரட்டைத்தீவு...

'இன்று இங்குதான்
நாளை இரவு
இந்தியா போகிறோம்...
ஒருநாளுக்கு வேண்டியதை
எடுத்துக்கொண்டு இறங்குங்க.."
படகோட்டியுடன் வழிகாட்டியாகவந்த
மீனவநன்பன்
உத்தரவிட்டு படகில் அடிப்பகுதியில்
தேங்கியிருந்த தண்ணீரை எடுத்துவெளியே கொட்ட
ஆரம்பித்துவிட்டான்....

பெரிதாக அலைகள் இல்லை
ஆனாலும் ஆழம் தெரியவில்லை..
இருளாய் இருந்தது..

தூரத்தில் தெரிந்த மரங்கள்
தைரியம் தந்தது..
கடவுளை வேண்டிக்கொண்டு
ஆழம்தெரியாக்கடலில் காலைவிட்டோம்...

இரண்டடியில் தரை...
கால்களை வரவேற்று
தாங்கிக்கொண்டன..

யாரோ ஒருவர்
முன்னால் செல்ல
தட்டுத்தடுமாறி பின்னால்
சென்றோம்...

கோஞ்சத்தூரத்தில்
அமைதியாக ஒரு தேவாலயம்...
அடைக்கலமா வாருங்கள் வாருங்கள்
என்று எம்மை அழைத்தது...

அதையொட்டி இரண்டு
கட்டடங்கள் பள்ளிக்கூடம்போலும்..
நல்ல காற்று...
தரையைத்தட்டிப்படுத்துக்கொண்டோம்....

பள்ளிக்கூட வகுப்பறைகள் தான்
ஆனால்
மாணவர்களை விட ஆடுகள்தான்
அங்கே அதிகநேரசெலவிடும்போல
எங்கும் அவைபோட்ட புழுக்கைகள்...

அன்று நெடுநாள்க்கழித்து
துப்பாக்கிஓசையும்;
குண்டுவெடிச்சத்தமும் இல்லாத
ஒரு இரவை
களித்தோம் எனலாம்....

மனதுக்குள் ஏதோ ஏதோ
பழைய நினைவுகள்
Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 12-01-2003, 11:27 PM
[No subject] - by vasisutha - 12-02-2003, 04:56 AM
[No subject] - by aathipan - 12-12-2003, 04:29 PM
[No subject] - by nalayiny - 12-12-2003, 04:42 PM
[No subject] - by Paranee - 12-13-2003, 09:00 AM
[No subject] - by aathipan - 12-17-2003, 04:44 PM
[No subject] - by shivadev - 12-17-2003, 09:17 PM
[No subject] - by aathipan - 12-18-2003, 04:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)