12-12-2003, 11:44 AM
[b][size=18]வசியக்காரி..பகுதி-7
இன்றுதான் நீ
என்னை அணைக்கவில்லை
நாளை....
என் கல்லறையிலாவது
ஒருமுறை அழுதுவிடு...!
காலங்கள்...
எவ்வளவுதான் கடந்துபோனாலும்
என்றும் என்
கல்லறைக்குள்ளிருந்து
ஒரு குரல்
கேட்டுக்கொண்டே இருக்கும்
""நான் உன்னைக் காதலிக்கிறேன்""
யாராவது
என் கல்லறையைக்காட்டி
இவன் ஏன் இறந்தான்
எனக்கேட்டால்....
காதலியே...
நீ
அவர்களின்
அறியாமையை விளக்கு...
இவன் இறக்கவில்லை
என்னைக்
காதலித்துக்கொண்டிருக்கிறான்...!!!
போகிறேன்
என்று என்னிடம் சொல்லாதே...!
போய் வருகிறேன்
என்றும்
என்னிடம் சொல்லாதே....!
நீ வரும்போது
யார்
உயிரோடு இருப்பார்களோ...
அவர்களிடம்
சொல்லிவிட்டுப் போ...!!!
நான்
ஒரு பாடகனாக
இருந்திருந்தால்
நீ பிரிந்த மறுகணமே
பாடுவதை நிறுத்தியிருப்பேன்...!
ஆனால்
நான்
ஒரு கவிஞனாயிற்றே
கவலையை போக்க...
வேறு வழிதெரியவில்லை
அதனால்தான்
எழுதுகிறேன்...!
சொல்லாமலே செல்கிறாய்
என்னை
கண்டுகொள்ளவில்லை...!
நில்லாமலே
மழையில் நனைந்து
அழுதுகொண்டே அலைகிறேன்
உன்னைப்போல்...
யாருமே
கண்டுகொள்ளவில்லை..!
நீ
அருகில் இருந்தபோது
உலகமே என் அருகில்...!
நீ
தொலைவில் சென்றபோது
உலகமும் எங்கோ
ஒரு தூரத்தில்...!
நீ காதல்செய்யவென
கண்ணெதிரே வந்தாய்
நீ
கனவாய்போனபோது
கண்ணீர்தான் தந்தாய்..!
மூங்கில்காடு
தானாகத் தீப்பிடித்து எரிகிறது
நீ
புல்லாங்குளல் வாசிக்க
வராததால்..!
பெய்த மழை...
மேல்நோக்கி எழுகிறது
நனைய...
நீ வராததால்...!
கல்லூரிப் படிக்கட்டு
கண்ணீர் வடிக்கிறது...!
உன் பாதம் படாததால்...!
என் வீட்டுக் கண்ணாடி
உடைந்து கீழே விழுகிறது
உன் பார்வை படாததால்...!
உன் கிராமத்துத்
தொடரூந்து
வனவாசம் செல்கிறது
அதில் நீ
பயணம் செய்யாததால்...!
நீ
என்னோடிருந்த போதுதான்
யுகத்தின் வேகம் தெரிந்தது
நீ
பிரிந்துபோன போதுதான்
கணத்தின் நீழம் புரிந்தது..!
(இன்னும் வரும்..)
த.சரீஷ்
10.12.2003 (பாரீஸ்)
இன்றுதான் நீ
என்னை அணைக்கவில்லை
நாளை....
என் கல்லறையிலாவது
ஒருமுறை அழுதுவிடு...!
காலங்கள்...
எவ்வளவுதான் கடந்துபோனாலும்
என்றும் என்
கல்லறைக்குள்ளிருந்து
ஒரு குரல்
கேட்டுக்கொண்டே இருக்கும்
""நான் உன்னைக் காதலிக்கிறேன்""
யாராவது
என் கல்லறையைக்காட்டி
இவன் ஏன் இறந்தான்
எனக்கேட்டால்....
காதலியே...
நீ
அவர்களின்
அறியாமையை விளக்கு...
இவன் இறக்கவில்லை
என்னைக்
காதலித்துக்கொண்டிருக்கிறான்...!!!
போகிறேன்
என்று என்னிடம் சொல்லாதே...!
போய் வருகிறேன்
என்றும்
என்னிடம் சொல்லாதே....!
நீ வரும்போது
யார்
உயிரோடு இருப்பார்களோ...
அவர்களிடம்
சொல்லிவிட்டுப் போ...!!!
நான்
ஒரு பாடகனாக
இருந்திருந்தால்
நீ பிரிந்த மறுகணமே
பாடுவதை நிறுத்தியிருப்பேன்...!
ஆனால்
நான்
ஒரு கவிஞனாயிற்றே
கவலையை போக்க...
வேறு வழிதெரியவில்லை
அதனால்தான்
எழுதுகிறேன்...!
சொல்லாமலே செல்கிறாய்
என்னை
கண்டுகொள்ளவில்லை...!
நில்லாமலே
மழையில் நனைந்து
அழுதுகொண்டே அலைகிறேன்
உன்னைப்போல்...
யாருமே
கண்டுகொள்ளவில்லை..!
நீ
அருகில் இருந்தபோது
உலகமே என் அருகில்...!
நீ
தொலைவில் சென்றபோது
உலகமும் எங்கோ
ஒரு தூரத்தில்...!
நீ காதல்செய்யவென
கண்ணெதிரே வந்தாய்
நீ
கனவாய்போனபோது
கண்ணீர்தான் தந்தாய்..!
மூங்கில்காடு
தானாகத் தீப்பிடித்து எரிகிறது
நீ
புல்லாங்குளல் வாசிக்க
வராததால்..!
பெய்த மழை...
மேல்நோக்கி எழுகிறது
நனைய...
நீ வராததால்...!
கல்லூரிப் படிக்கட்டு
கண்ணீர் வடிக்கிறது...!
உன் பாதம் படாததால்...!
என் வீட்டுக் கண்ணாடி
உடைந்து கீழே விழுகிறது
உன் பார்வை படாததால்...!
உன் கிராமத்துத்
தொடரூந்து
வனவாசம் செல்கிறது
அதில் நீ
பயணம் செய்யாததால்...!
நீ
என்னோடிருந்த போதுதான்
யுகத்தின் வேகம் தெரிந்தது
நீ
பிரிந்துபோன போதுதான்
கணத்தின் நீழம் புரிந்தது..!
(இன்னும் வரும்..)
த.சரீஷ்
10.12.2003 (பாரீஸ்)
sharish

