12-12-2003, 09:10 AM
இது இந்த தலைப்புடன் தொடர்புபட்ட விடயம் இல்லை ஆனால் மிகமுக்கியம் கருதி இதை இங்கே போட கழ நிர்வாகத்திடம் அனுமதி கேட்கிறேன்.
<span style='font-size:25pt;line-height:100%'>ரஜீவகாந்தி ;- பிரபாகரன் சந்திப்பு எழுதப்படாத ஒரு ஒப்பந்தம்.</span>
1987ம் ஆண்டு ஜீலை மாதம் 29ம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாரதப் பிரதமர் ரஜீவ்காந்தியும் இலங்கை அரச அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் கொழும்பில் நிகழ்ந்த விசேட வைபவ மொன்றின்போது இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தினத்திற்கு முதல்நாள். அதாவது 1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி புதுடில்லியில் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்திக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கைச்சாத்து இடப்படாத அந்த இரகசிய உடன்பாடு பற்றி அனேகருக்குத் தெரியாது. அக் காலகட்டங்களில் ரஜீவின் நிர்வாக ஆட்சிபீடம் மூடி மறைந்த உண்கைகளில் இதுவும் ஒன்று ரஜீவ்-பிரபா உடன்பாட்டில் சம்பந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் அந்த வரலாற்று நிகழ்வை இங்கு பதிவு செய்வது முக்கியமெனக்கருதுகிறேன்.
தலைவர் பிரபாகரனும், நானும் யோகியும், திலீபனும் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டு அசோக்கா விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது பற்றியும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எம் மீது திணித்து விட எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் முந்திய கட்டுரையில் விபரித்தேன். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு சார்பான நிலை எடுத்துக்கொண்டதால் இந்திய அரசுக்கு சங்கடமான நிலை எழுந்தது. கொழும்பு சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக எப்படியாவது விடுதலைப் புலிகளை வழிக்கு கொண்டுவர வேண்டும் என ரஜீவ்காந்தி விரும்பினார். அவருக்கு ஒரேயொரு மார்க்கம்தான் தென்பட்டது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்து, ஒப்பந்தம் பற்றி அவரது கருத்துக்களை கேட்டறிந்து, அவருடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதுதான் சாலச்சிறந்த வழி என ரஜீவ்காந்தி முடிவு எடுத்தார்.
1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி நள்ளிரவு. அசோக்கா விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னையும் பிரபாகரனையும் அவசர அவசரமாக எழுப்பினார்கள் இந்தியப்புலனாய்வு அதிகாரிகள். பிரதமர் ரஜீவ்காந்தி மிகவும் அவசரமாக எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் உடனே புறப்படுமாறும் பணித்தார்கள். ஆயுதம் தரித்த கரும் பூனைகளின் வாகன அணி பின் தொடர பிரதமமந்தியிரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். வீட்டு வாசலில் எமக்காக காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் உள்ளக புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.எம்.கே.நாராயணனும் நின்று கொண்டிருந்தார்.
புன்முறுவல் பூத்தபடி மனமுவந்து எம்மை வரவேற்ற பிரதமர், பிரபாகரனைப்பார்த்து 'உங்களைப் பற்றி நிறையக்கேள்ளிப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். அங்கு தமிழக அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் எமக்காக காத்து நிற்றார். கலந்துரையாடல் உடனேயே ஆரம்பித்தது. 'இந்த ஒப்பந்தம் குறித்து நீங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அறிந்தேன். ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி விபரமாக கூறுவீர்களா? என்று கேட்டார் ரஜீவ்காந்தி. எமது கருத்துக்களை விபரமாக விளக்கும்படி பிரபாகரன் என்னைப் பணித்தார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாக விளக்கினேன்.
இனப்பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழரின் உரிமை மிக முக்கியமானது. இலங்கையில் வட,கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று hPதியாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாய்நிலம். இந்த தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வட-கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டபோதும், இந்த தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட்டை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தை கூறுபோட வழிவகுக்கும் என்று விளக்கினேன்.
அடுத்ததாக, மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரபரவலாக்கம் வரையறுக்கப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதையும் விளக்கினேன். எல்லாவற்றிற்கும் மேலாக, வட-கிழக்கு மாகாண சபை கலைத்துவிடும் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு விரோதமானவர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவாரென நாம் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன். அடுத்ததாக ஆயுதக் கையளிப்பு பற்றிய விடயத்தை எடுத்துக் கொண்டோம். ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணிநேரத்திற்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கூறுவது அநீதியானது. எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற ஆயுதங்களை நான்கு நாட்களுக்குள், அதுவும் தமிழரின் தேசியப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு கிட்டுவதற்கு முன்பாக கையளிக்கும் படி வற்புறுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது என்றார் பிரபாகரன். நாம் சொல்வதையெல்லாம் ஆர்வமாகவும், பொறுமையாகவும் கேட்டபடி குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார் ரஜீவ்காந்தி.
நாம் எமது நிலைப்பாட்டைக் கூறி முடித்ததும் ரஜீவ்காந்தி சொன்னார். 'உங்களின் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்;வு காண வேண்டும் என்பதில் எனது அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விடயத்தில் உங்களது ஒத்துழைப்பு எமக்கு அவசியம். நீங்கள் சொல்வது போல இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மாகாணசபைத் திட்டம் ஒரு தற்காலிக ஒழுங்கு தான். அதிலுள்ள குறைபாடுகளை பின்பு நான் ஜெயவர்த்தனவுடன் பேசி நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன். தமிழர் தாயகம் பற்றி நீங்கள் எழுப்பிய ஆட்சேபனையை நான் கவனத்தில் எடுத்துள்ளேன். இது பற்றி நான் ஜெயவர்தனவுடன் பேசுவேன். கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் அதனை ஒத்திவைக்குமாறு சொல்லுவேன். எதற்கும் நீங்கள் இந்திய அரசை நம்பவேண்டும். தழிழரின் நலன் மீது தான் நாம் அக்கறை கொண்டு செயல்படுகின்றோம். எனவே உங்களது ஆதரவு எமக்குத்தேவை. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து, அவர்களது பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். ஒப்பந்தத்தை நீங்கள் ஆதரித்தால் எமது கையைப்பலப்படுத்துவதாக அமையும்" என்றார்.
இந்தியப் பிரதமர் கூறியவற்றை தமிழில் மொழிபெயர்த்து பிரபாகரனுக்கு விளக்கமளித்தார் அமைச்சர் பண்டுருட்டி. 'இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக, தழிழ் மக்களின் நலனைப் பாதிக்கிறது. ஆகவே, இந்த உடன்படிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது." என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னர் பிரபாகரன். ரஜீவ்காந்திக்கு நிலமை புரிந்தது. பிரபாகரன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு காரியத்தைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. ஆகவே, தனது அணுகுமுறையைத் திடீரென மாற்றிக் கொண்டார்
;;;'உங்கள் நிலைப்பாடு எனக்குப்புரிகிறது நீங்கள் எடுத்த முடிவையோ, கொள்கையையோ மாற்றச்சொல்லி நான் கேட்கவில்லை. நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருத்தால் போதும்." என்றார் ரஜீவ்காந்தி. பார்த்திர்களா?: பிரதமமந்திரியே உங்களது வழிக்கு வந்து விட்டார். ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அது உங்கள் நிலைப்பாடு அதை நீங்கள் ஏற்கத் தேவையில்லை ஆனால் அதற்குத் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று மட்டும் பிரதமர் கேட்கிறார். இந்தச்சிறிய ஒத்துழைப்பையாவது நீங்கள் இந்தி அரசுக்காக செய்யலாம் அல்லவா?" என்று ரஜீவிற்காக வக்காலத்து வாங்கினார் பண்டுருட்டியார். இந்தச் சந்திப்பில் அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பது இப்பொழுது புலனாகியது. ரஜீவ் கொடுத்த விளக்கமும் அதற்குப் பண்டுருட்டியார் அளித்த வியாக்கியானமும் பிரபாகரனுக்கும் எனக்கும் திருப்தியை அளிக்கவில்லை. 'ஒரு விடயத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதனை நாம் எதிர்க்கின்றோம் என்றுதானே அர்த்தம்" என்று எனது காதோடு குசுகுசுத்தார் பிரபாகரன். ஏற்றுக்கொள்ளாததற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் இடையில் வேறுபாடு காட்டி எம்மைத் திருப்திபடுத்த முடியாது என்பதை ரஜீவ் உணர்ந்து கொண்டார் அதனால் பிரச்சினையை வேறு திசைக்கு எடுத்துச் சென்றார்.
தொடரும்.......
நன்றி ஈழநாதம்
<span style='font-size:25pt;line-height:100%'>ரஜீவகாந்தி ;- பிரபாகரன் சந்திப்பு எழுதப்படாத ஒரு ஒப்பந்தம்.</span>
1987ம் ஆண்டு ஜீலை மாதம் 29ம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாரதப் பிரதமர் ரஜீவ்காந்தியும் இலங்கை அரச அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் கொழும்பில் நிகழ்ந்த விசேட வைபவ மொன்றின்போது இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தினத்திற்கு முதல்நாள். அதாவது 1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி புதுடில்லியில் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்திக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கைச்சாத்து இடப்படாத அந்த இரகசிய உடன்பாடு பற்றி அனேகருக்குத் தெரியாது. அக் காலகட்டங்களில் ரஜீவின் நிர்வாக ஆட்சிபீடம் மூடி மறைந்த உண்கைகளில் இதுவும் ஒன்று ரஜீவ்-பிரபா உடன்பாட்டில் சம்பந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் அந்த வரலாற்று நிகழ்வை இங்கு பதிவு செய்வது முக்கியமெனக்கருதுகிறேன்.
தலைவர் பிரபாகரனும், நானும் யோகியும், திலீபனும் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டு அசோக்கா விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது பற்றியும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எம் மீது திணித்து விட எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் முந்திய கட்டுரையில் விபரித்தேன். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு சார்பான நிலை எடுத்துக்கொண்டதால் இந்திய அரசுக்கு சங்கடமான நிலை எழுந்தது. கொழும்பு சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக எப்படியாவது விடுதலைப் புலிகளை வழிக்கு கொண்டுவர வேண்டும் என ரஜீவ்காந்தி விரும்பினார். அவருக்கு ஒரேயொரு மார்க்கம்தான் தென்பட்டது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்து, ஒப்பந்தம் பற்றி அவரது கருத்துக்களை கேட்டறிந்து, அவருடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதுதான் சாலச்சிறந்த வழி என ரஜீவ்காந்தி முடிவு எடுத்தார்.
1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி நள்ளிரவு. அசோக்கா விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னையும் பிரபாகரனையும் அவசர அவசரமாக எழுப்பினார்கள் இந்தியப்புலனாய்வு அதிகாரிகள். பிரதமர் ரஜீவ்காந்தி மிகவும் அவசரமாக எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் உடனே புறப்படுமாறும் பணித்தார்கள். ஆயுதம் தரித்த கரும் பூனைகளின் வாகன அணி பின் தொடர பிரதமமந்தியிரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். வீட்டு வாசலில் எமக்காக காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் உள்ளக புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.எம்.கே.நாராயணனும் நின்று கொண்டிருந்தார்.
புன்முறுவல் பூத்தபடி மனமுவந்து எம்மை வரவேற்ற பிரதமர், பிரபாகரனைப்பார்த்து 'உங்களைப் பற்றி நிறையக்கேள்ளிப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். அங்கு தமிழக அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் எமக்காக காத்து நிற்றார். கலந்துரையாடல் உடனேயே ஆரம்பித்தது. 'இந்த ஒப்பந்தம் குறித்து நீங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அறிந்தேன். ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி விபரமாக கூறுவீர்களா? என்று கேட்டார் ரஜீவ்காந்தி. எமது கருத்துக்களை விபரமாக விளக்கும்படி பிரபாகரன் என்னைப் பணித்தார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாக விளக்கினேன்.
இனப்பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழரின் உரிமை மிக முக்கியமானது. இலங்கையில் வட,கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று hPதியாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாய்நிலம். இந்த தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வட-கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டபோதும், இந்த தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட்டை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தை கூறுபோட வழிவகுக்கும் என்று விளக்கினேன்.
அடுத்ததாக, மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரபரவலாக்கம் வரையறுக்கப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதையும் விளக்கினேன். எல்லாவற்றிற்கும் மேலாக, வட-கிழக்கு மாகாண சபை கலைத்துவிடும் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு விரோதமானவர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவாரென நாம் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன். அடுத்ததாக ஆயுதக் கையளிப்பு பற்றிய விடயத்தை எடுத்துக் கொண்டோம். ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணிநேரத்திற்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கூறுவது அநீதியானது. எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற ஆயுதங்களை நான்கு நாட்களுக்குள், அதுவும் தமிழரின் தேசியப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு கிட்டுவதற்கு முன்பாக கையளிக்கும் படி வற்புறுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது என்றார் பிரபாகரன். நாம் சொல்வதையெல்லாம் ஆர்வமாகவும், பொறுமையாகவும் கேட்டபடி குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார் ரஜீவ்காந்தி.
நாம் எமது நிலைப்பாட்டைக் கூறி முடித்ததும் ரஜீவ்காந்தி சொன்னார். 'உங்களின் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்;வு காண வேண்டும் என்பதில் எனது அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விடயத்தில் உங்களது ஒத்துழைப்பு எமக்கு அவசியம். நீங்கள் சொல்வது போல இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மாகாணசபைத் திட்டம் ஒரு தற்காலிக ஒழுங்கு தான். அதிலுள்ள குறைபாடுகளை பின்பு நான் ஜெயவர்த்தனவுடன் பேசி நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன். தமிழர் தாயகம் பற்றி நீங்கள் எழுப்பிய ஆட்சேபனையை நான் கவனத்தில் எடுத்துள்ளேன். இது பற்றி நான் ஜெயவர்தனவுடன் பேசுவேன். கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் அதனை ஒத்திவைக்குமாறு சொல்லுவேன். எதற்கும் நீங்கள் இந்திய அரசை நம்பவேண்டும். தழிழரின் நலன் மீது தான் நாம் அக்கறை கொண்டு செயல்படுகின்றோம். எனவே உங்களது ஆதரவு எமக்குத்தேவை. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து, அவர்களது பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். ஒப்பந்தத்தை நீங்கள் ஆதரித்தால் எமது கையைப்பலப்படுத்துவதாக அமையும்" என்றார்.
இந்தியப் பிரதமர் கூறியவற்றை தமிழில் மொழிபெயர்த்து பிரபாகரனுக்கு விளக்கமளித்தார் அமைச்சர் பண்டுருட்டி. 'இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக, தழிழ் மக்களின் நலனைப் பாதிக்கிறது. ஆகவே, இந்த உடன்படிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது." என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னர் பிரபாகரன். ரஜீவ்காந்திக்கு நிலமை புரிந்தது. பிரபாகரன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு காரியத்தைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. ஆகவே, தனது அணுகுமுறையைத் திடீரென மாற்றிக் கொண்டார்
;;;'உங்கள் நிலைப்பாடு எனக்குப்புரிகிறது நீங்கள் எடுத்த முடிவையோ, கொள்கையையோ மாற்றச்சொல்லி நான் கேட்கவில்லை. நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருத்தால் போதும்." என்றார் ரஜீவ்காந்தி. பார்த்திர்களா?: பிரதமமந்திரியே உங்களது வழிக்கு வந்து விட்டார். ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அது உங்கள் நிலைப்பாடு அதை நீங்கள் ஏற்கத் தேவையில்லை ஆனால் அதற்குத் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று மட்டும் பிரதமர் கேட்கிறார். இந்தச்சிறிய ஒத்துழைப்பையாவது நீங்கள் இந்தி அரசுக்காக செய்யலாம் அல்லவா?" என்று ரஜீவிற்காக வக்காலத்து வாங்கினார் பண்டுருட்டியார். இந்தச் சந்திப்பில் அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பது இப்பொழுது புலனாகியது. ரஜீவ் கொடுத்த விளக்கமும் அதற்குப் பண்டுருட்டியார் அளித்த வியாக்கியானமும் பிரபாகரனுக்கும் எனக்கும் திருப்தியை அளிக்கவில்லை. 'ஒரு விடயத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதனை நாம் எதிர்க்கின்றோம் என்றுதானே அர்த்தம்" என்று எனது காதோடு குசுகுசுத்தார் பிரபாகரன். ஏற்றுக்கொள்ளாததற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் இடையில் வேறுபாடு காட்டி எம்மைத் திருப்திபடுத்த முடியாது என்பதை ரஜீவ் உணர்ந்து கொண்டார் அதனால் பிரச்சினையை வேறு திசைக்கு எடுத்துச் சென்றார்.
தொடரும்.......
நன்றி ஈழநாதம்

