12-19-2005, 11:56 PM
கட்டுரையாளர் பொதுவாக கோவில்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தால் சற்று யோசிக்கலாம். ஆனால் அவர் குறிப்பிட்ட ஒரு கோவிலை மட்டுமே குறிப்பிட்டுத் தாக்கியுள்ளார். இதுபற்றி இங்கு கனடாவிலிருந்து விடுமுறையில் வந்திருக்கும் நண்பரொருவரைக் கருத்துக் கேட்டேன். அவர் சிரித்த படியே சொன்னார். கனடாவில் பல கோவில்களை ஒரு குறிப்பிட்ட பகுதியினரே நடாத்துகின்றனர். ஆனால் இக்கோவிலை நடாத்துவோர்கள் வேறு. அதனால் இதனையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர்கள் முயற்சித்தனர். அது சரிவரவில்லை. அதனால் அக்கோவிலைப் பற்றி இப்படியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள் என்று. எனவே எனது நண்பனின் பதிலால் நானும் கட்டுரையாளரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டேன்.

