12-19-2005, 05:48 PM
இப்போதெல்லாம் சிவா ஒவ்வொருநாள் காலையும் சாந்தியின் வரவுக்காய் காத்து நிற்பது வழைமையாகி விட்டதுஇருவரும் ஒன்றாகவே வகுப்புகளிற்கு புறப்படுவார்கள் அன்றும் வழைமை போல காத்து நின்றான் ஆனால் சாந்தியை காணவில்லை அவனுக்கு கற்பனை பல பக்கத்தால் ஓடியது நேற்று இரவு பொலிசும் வந்திட்டு போனவன் என்ன நடந்ததோ எண்று நினைத்தவன்.
எதற்கும் போய் ஒருக்கா கதவிலை தட்டி பாப்பமா?? சே சில நேரம் ரவி நிண்டால் அதுவேறை வம்பா போயிடும் என்ன செய்யலாம் என்று தத்தளித்து கொண்டிருந்த வேளை லிப்ற் இறங்கும் சத்தம் கேட்டது அவனையறியாமலே கடவுளே சாந்தியா இருக்க வேணும் என நினைக்க லிப்ற் இரண்டாம் மாடியில் நிற்று கதவு திறந்தது .
சாந்திதான் அவளை பார்த்ததும். ஒரு நிம்மதி பொரு மூச்சுடன். என்ன வழக்கம் போலை பாத்றுமிலை வழுக்கி விழுந்திட்டீங்களா ?? முகம் ஒரு மாதிரியிருக்கு அது சரி நேற்று பொலிஸ் வந்த மாதிரி கிடக்கு நான் நினைச்சன் மனிசனை பிடிச்சு கொண்டு போட்டாங்களாக்கும் எண்டு என்ன நடந்தது .
ம் நான் இண்டைக்கு வகுப்புக்கு வரேல்லைஎனக்கு சரியா வயிறு நோகுது தலையிடியும். நீங்கள் பாத்து கொண்டு நிண்டாலும் எண்டு சொல்லதான் வந்தனான். ரெலிபோன் அடிச்சு சொல்ல உங்களின்ரை நம்பர் என்னட்டை இல்லை நானும் இவ்வளவு நாளும் கேக்கேல்லை என்று கலங்கிய கண்களை துடைத்தவாறு கூறினாள்.
சிவா தலையை ஆட்டியபடி என்ன நடந்தது நேற்றும் சண்டையோ பொலிஸ் வரேக்கை கண்டனான் வந்து பாக்க வெண்டு யோசிச்சிட்டு பிறகு அதாலை உங்களிற்குதான் இன்னும் பிரச்சனை அதுதான் வரேல்லை என்ன நடந்தது சொல்லுங்கோ ??வாங்கோ இதிலை நிண்டு கதைக்காமல் வீட்டுக்கை உள்ளை வாங்கோ என்று அழைத்தான் .
சிவா வீட்டில் உள்ளே போன சாந்தி உள்ளே போய் கதிரையில்: அமர மறுத்து நான் கன நேரம் நிக்கேல்லை அவர் வெளியிலை போட்டார் வேலைக்கா தான் இருக்க வேணும் . சில நேரம் திடீரெண்டு வந்தாலும். நான் கெதியா போறன் என்றவாறு சிவரில் சாய்ந்தபடி நடந்தவற்ரை சிவாவிடம் விளக்கினாள் . பக்கத்து வீட்டு காரன் தான் போன் பண்ணியிருக்கவேணும் பொலிஸ் வந்திட்டான் நான் தான் எனக்கு சுகமில்லை விழுந்திட்டன் எண்டு சொல்லிசமாளிச்சு அனுப்பிட்டன்.
நான் சத்தியெடுத்து கொணந்டிருந்ததாலை பொலிசும் அம்புலன்சை கூப்பிடவா எண்டு கேட்டான் நானும் தேவையில்லை எண்டு சொல்ல அவையள் நான் சொன்னதை நம்பின மாதிரி தெரியேல்லை இரண்டு பேரின்ரை பெயர் விபரத்தை வாங்கி எழுதி கொண்டு போட்டாங்கள்.அதோடை அவரும் பேசாமல் இருந்திட்டார்.
சிவாவந்த கோபத்தை அடக்கியவாறு அவர் என்ன அவர் அவருக்கு மரியாதை வேறை வேண்டி கிடக்கோ நீங்கள் பேசாமல் பொலிசிட்டை உண்மையை சொல்லியிருக்கலாம் கொஞ்ச நாள் உள்ளை போட்டு வந்தால்தான் உப்பிடியான ஆக்கள் திருந்துவினம்.
சாந்தி நான் உங்கடை பிரச்சனையிக்கை தலையிடுறன் எண்டு நினைக்காதையுங்கோ ஏதோ உங்கடை அப்பாட்டை படிச்சிருக்கிறன் அந்த நன்றி கடனிலை உள்ள அக்கறை எண்டு எடுத்தாலும் சரி அல்லது யாரோ ஒரு தமிழ் பிள்ளை கஸ்ர படுறதை பாக்க முடியாமல் சொல்லுறன் எண்டு எடுத்தாலும் சரி இன்னும் எத்தினை நாள் இப்பிடி சித்திர வதையிக்கை வாழ போறியள் உங்கடை வாழ்க்கையை உப்பிடியே நீங்களே அழிக்க போறீங்களா உங்கடை தம்பி நிக்கேக்கையே ஒரு முடிவு எடுத்திருக்கலாம். ஏதோ யோசிச்சு நடவுங்கோ ஆனால் ஒண்டு மட்டும் தெரியிது ஒருநாளைக்கு அவன் உங்களை அடிச்சே கொல்ல போறான்.
சாந்திக்கு அவளால் கட்டுபடுத்த முடியாமல் கண்களால் வழிந்த நீரை துடைத்த படி.
என்னை அடிச்சு கெண்டால்தான் பிரச்சனை முடீஞ்சுதே என்ன செய்ய பேசாமல் தற்கொலை செய்யலாம் எண்டும் யோசிச்சனான் ஆனால் அதுக்கும் ஊரிலை அம்மா அப்பா தங்கச்சியை நினைச்சா மனம் வருகுது இல்லை. அடுத்தா தங்கச்சி வேறை பிறகு அவளுக்கு நாளைக்கு ஒரு சம்பந்தம் எண்டு வரேக்கை ஊரிலை பலமாதிரியும் கதைப்பினம்.
அம்மா பாவம் ஏற்கனவே வருத்த காரி இப்பிடி எல்லாத்தையும் யோசிச்சு ஏதோ நான் இஞ்சை சந்தோசமா இருக்கிறன் எண்டு நினைச்சு கொண்டாவது அவையள் நிம்மதியா இருக்கட்டுமெண்டுதான் பல்லை கடிச்சு கொண்டு இருக்கிறன்.பாப்பம் ஏதாவது முடிவு ஒண்டு கடவுள் வழி காட்டுவார்தானே சரி உங்களிற்கு நேரம் போட்டுது போங்கோ முடிஞ்சா நாளைக்கு வகுப்புக்கு வாறன்.
ம் உங்களை திருத்த ஏலாது நான் என்ன சொன்னாலும் நீங்கள் கேக்கிற மாதிரியில்லை உப்பிடியே சமுதாயத்துக்கு பயந்து கொண்டும் அம்மா அப்பாவை நினைச்சு கொண்டு ஒவ்வொரு நாளும் அடி வாங்கி கொண்டு அழுது கொண்டு இருங்கோ. சரி டொக்ரரிட்டை போறீங்களோ இல்லாட்டி நான் வலிக்கு ஏதும் மருந்து வாங்கி தந்திட்டு போகட்டோ?
வேண்டாம் நீங்கள் போங்கோ என்னட்டை மருந்துகள் இருக்கு அப்பிடியும் முடியாட்டி நானே டொக்ரரிட்டை போறன் . என்றவாறு சிவாவும் சாந்தியும் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அப்பிடியே உறைந்து போய் நின்றார்கள். ரவி சுவரில் ஒரு கையை ஊன்றியபடி ஒரு சிகரற் ஒன்றை ஊதியவாறுவாறு நிண்டு கொண்டிருந்தான்
எதற்கும் போய் ஒருக்கா கதவிலை தட்டி பாப்பமா?? சே சில நேரம் ரவி நிண்டால் அதுவேறை வம்பா போயிடும் என்ன செய்யலாம் என்று தத்தளித்து கொண்டிருந்த வேளை லிப்ற் இறங்கும் சத்தம் கேட்டது அவனையறியாமலே கடவுளே சாந்தியா இருக்க வேணும் என நினைக்க லிப்ற் இரண்டாம் மாடியில் நிற்று கதவு திறந்தது .
சாந்திதான் அவளை பார்த்ததும். ஒரு நிம்மதி பொரு மூச்சுடன். என்ன வழக்கம் போலை பாத்றுமிலை வழுக்கி விழுந்திட்டீங்களா ?? முகம் ஒரு மாதிரியிருக்கு அது சரி நேற்று பொலிஸ் வந்த மாதிரி கிடக்கு நான் நினைச்சன் மனிசனை பிடிச்சு கொண்டு போட்டாங்களாக்கும் எண்டு என்ன நடந்தது .
ம் நான் இண்டைக்கு வகுப்புக்கு வரேல்லைஎனக்கு சரியா வயிறு நோகுது தலையிடியும். நீங்கள் பாத்து கொண்டு நிண்டாலும் எண்டு சொல்லதான் வந்தனான். ரெலிபோன் அடிச்சு சொல்ல உங்களின்ரை நம்பர் என்னட்டை இல்லை நானும் இவ்வளவு நாளும் கேக்கேல்லை என்று கலங்கிய கண்களை துடைத்தவாறு கூறினாள்.
சிவா தலையை ஆட்டியபடி என்ன நடந்தது நேற்றும் சண்டையோ பொலிஸ் வரேக்கை கண்டனான் வந்து பாக்க வெண்டு யோசிச்சிட்டு பிறகு அதாலை உங்களிற்குதான் இன்னும் பிரச்சனை அதுதான் வரேல்லை என்ன நடந்தது சொல்லுங்கோ ??வாங்கோ இதிலை நிண்டு கதைக்காமல் வீட்டுக்கை உள்ளை வாங்கோ என்று அழைத்தான் .
சிவா வீட்டில் உள்ளே போன சாந்தி உள்ளே போய் கதிரையில்: அமர மறுத்து நான் கன நேரம் நிக்கேல்லை அவர் வெளியிலை போட்டார் வேலைக்கா தான் இருக்க வேணும் . சில நேரம் திடீரெண்டு வந்தாலும். நான் கெதியா போறன் என்றவாறு சிவரில் சாய்ந்தபடி நடந்தவற்ரை சிவாவிடம் விளக்கினாள் . பக்கத்து வீட்டு காரன் தான் போன் பண்ணியிருக்கவேணும் பொலிஸ் வந்திட்டான் நான் தான் எனக்கு சுகமில்லை விழுந்திட்டன் எண்டு சொல்லிசமாளிச்சு அனுப்பிட்டன்.
நான் சத்தியெடுத்து கொணந்டிருந்ததாலை பொலிசும் அம்புலன்சை கூப்பிடவா எண்டு கேட்டான் நானும் தேவையில்லை எண்டு சொல்ல அவையள் நான் சொன்னதை நம்பின மாதிரி தெரியேல்லை இரண்டு பேரின்ரை பெயர் விபரத்தை வாங்கி எழுதி கொண்டு போட்டாங்கள்.அதோடை அவரும் பேசாமல் இருந்திட்டார்.
சிவாவந்த கோபத்தை அடக்கியவாறு அவர் என்ன அவர் அவருக்கு மரியாதை வேறை வேண்டி கிடக்கோ நீங்கள் பேசாமல் பொலிசிட்டை உண்மையை சொல்லியிருக்கலாம் கொஞ்ச நாள் உள்ளை போட்டு வந்தால்தான் உப்பிடியான ஆக்கள் திருந்துவினம்.
சாந்தி நான் உங்கடை பிரச்சனையிக்கை தலையிடுறன் எண்டு நினைக்காதையுங்கோ ஏதோ உங்கடை அப்பாட்டை படிச்சிருக்கிறன் அந்த நன்றி கடனிலை உள்ள அக்கறை எண்டு எடுத்தாலும் சரி அல்லது யாரோ ஒரு தமிழ் பிள்ளை கஸ்ர படுறதை பாக்க முடியாமல் சொல்லுறன் எண்டு எடுத்தாலும் சரி இன்னும் எத்தினை நாள் இப்பிடி சித்திர வதையிக்கை வாழ போறியள் உங்கடை வாழ்க்கையை உப்பிடியே நீங்களே அழிக்க போறீங்களா உங்கடை தம்பி நிக்கேக்கையே ஒரு முடிவு எடுத்திருக்கலாம். ஏதோ யோசிச்சு நடவுங்கோ ஆனால் ஒண்டு மட்டும் தெரியிது ஒருநாளைக்கு அவன் உங்களை அடிச்சே கொல்ல போறான்.
சாந்திக்கு அவளால் கட்டுபடுத்த முடியாமல் கண்களால் வழிந்த நீரை துடைத்த படி.
என்னை அடிச்சு கெண்டால்தான் பிரச்சனை முடீஞ்சுதே என்ன செய்ய பேசாமல் தற்கொலை செய்யலாம் எண்டும் யோசிச்சனான் ஆனால் அதுக்கும் ஊரிலை அம்மா அப்பா தங்கச்சியை நினைச்சா மனம் வருகுது இல்லை. அடுத்தா தங்கச்சி வேறை பிறகு அவளுக்கு நாளைக்கு ஒரு சம்பந்தம் எண்டு வரேக்கை ஊரிலை பலமாதிரியும் கதைப்பினம்.
அம்மா பாவம் ஏற்கனவே வருத்த காரி இப்பிடி எல்லாத்தையும் யோசிச்சு ஏதோ நான் இஞ்சை சந்தோசமா இருக்கிறன் எண்டு நினைச்சு கொண்டாவது அவையள் நிம்மதியா இருக்கட்டுமெண்டுதான் பல்லை கடிச்சு கொண்டு இருக்கிறன்.பாப்பம் ஏதாவது முடிவு ஒண்டு கடவுள் வழி காட்டுவார்தானே சரி உங்களிற்கு நேரம் போட்டுது போங்கோ முடிஞ்சா நாளைக்கு வகுப்புக்கு வாறன்.
ம் உங்களை திருத்த ஏலாது நான் என்ன சொன்னாலும் நீங்கள் கேக்கிற மாதிரியில்லை உப்பிடியே சமுதாயத்துக்கு பயந்து கொண்டும் அம்மா அப்பாவை நினைச்சு கொண்டு ஒவ்வொரு நாளும் அடி வாங்கி கொண்டு அழுது கொண்டு இருங்கோ. சரி டொக்ரரிட்டை போறீங்களோ இல்லாட்டி நான் வலிக்கு ஏதும் மருந்து வாங்கி தந்திட்டு போகட்டோ?
வேண்டாம் நீங்கள் போங்கோ என்னட்டை மருந்துகள் இருக்கு அப்பிடியும் முடியாட்டி நானே டொக்ரரிட்டை போறன் . என்றவாறு சிவாவும் சாந்தியும் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அப்பிடியே உறைந்து போய் நின்றார்கள். ரவி சுவரில் ஒரு கையை ஊன்றியபடி ஒரு சிகரற் ஒன்றை ஊதியவாறுவாறு நிண்டு கொண்டிருந்தான்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

