12-19-2005, 05:04 PM
ஓம் சிநேகிதி எனக்கு தலை ஆட்டி எண்டால் சரியான பயம் நான் யாழ்ல இருந்து வந்து திருகோணமலைல இருக்கேக்கை ஒரு மாதத்துல ஒருக்கா அல்லது 2 , 3 தரம் ரவுண்டப் நடக்கும். ஐயோ உள்ள நாட்டு ஐ டி எல்லாம் செக் பண்ணிட்டு வானுக்கை இருக்கிற தலையாட்டியை பார்த்துட்டு போகணும் எனக்கு சரியான பயம் எங்கை அவ்ருக்கு நான் போகேக்கை கை கால் கடிச்சு சொறியப்போய் தலையை கிலையை ஆட்டிப்போடுவரோ என்று. நான் பயத்துல வானைப்பார்க்கிறதே இல்லை. பக்கத்துல வாற ஆமிப்பெட்டை விட மாட்டாள் அங்க பார் அங்க பார் எண்டுவள். என்ன செய்யுறது வானுக்கு எத்தனை சில்லு எண்டு எண்ணிப்போட்டு போறதுதான். ஐயோ அவன் பாவி சும்மா சும்மா ஆட்டி ஒவ்வொரு ரவுண்டப்புலயும் எத்தனை பேரை பிடிச்சு கொண்டு போறவங்கள்.
ம்ம் நீங்களும் எழுதுங்கோ கேப்பம்
ம்ம் நீங்களும் எழுதுங்கோ கேப்பம்
<b> .. .. !!</b>

